கவிதைகள்
ஷாஜகானின் மான்
ஆக்ரா கோட்டையில்
ஷாஜகான் அடைக்கப்பட்டிருந்த காலத்தில்தான்
தாஜ்மஹாலையும்விட அழகான காதல் சின்னத்தைக் கட்டினான்
அது
அவனது இதயத்திலிருந்து தொடங்கித்
தாஜ்மஹாலை அடையும் நடைவழிப் பாதையாக இருந்தது
அந்தப் பாதையின் வழியே
என்றேனும் மும்தாஜ்
தன்னை வந்து அடைவாள் என நம்பினான்
ஆனால்
எப்போதோ எழுந்துவந்திருந்த மும்தாஜ்
அவனுக்குப் பின்னாலேயே நின்று
அவனை அழைத்துக்கொண்டிருந்தாள்
அவன்தான் திரும்பிப் பார்க்காமல்
அங்கேயே பார்த்துக்கொண்டிருந்தான்
அதுவும் அவன் கட்டிய நடைவழிப் பாதையில்
ஒரு மானைப் பார்த்த பிறகு
கழுத்தைத் திருப்பவே மறந்துபோயிருந்தான்
அந்த மான்தான் மும்தாஜ் என்று
‘இந்தப் பக்கம் வா’ என்று
அதை ஓயாமல் அழைத்துக்