வேர்களை அறுக்க முடியாது
அண்மையில் தப்லீக் ஜமாத் இயக்கத்தை சவூதி அரேபிய அரசு தடைசெய்திருக்கிறது. பழைமையில் ஊறித் திளைப்பதில் பெரும் நாட்டமுடையவைதாம் சவூதி அரசும் தப்லீக் ஜமாத்தும். இன்று இவை மோத வேண்டிய அவசியம் என்ன?
தப்லீக் ஜமாத்தின் மீதான தடை என்றாலும் அது சவூதியை மட்டும் கட்டுப்படுத்தும்; உலகளாவியத் தடையாக இருக்க முடியாது. எனினும் நிறையபேர் அதைக் கொண்டாடக் காரணம், சவூதியை ஏனோ உலக இஸ்லாத்தின் தலைமையகமாகப் பார்ப்பதினால்தான். இந்தச் சட்டத்தின் வாயிலாக உலகின் பிற நாடுகளிலும் உள்ள தப்லீக் இயக்கங்கள் தடைசெய்யப்படுவதற்கான நெருக்கடி உருவாகிவிட்டதாகக் கருதுகிறார்கள்.
முஸ்லிம்களில் முக்காலே முக்கால் வீசம்பேர் தப்லீக் என்ற பெயரைச் செவிமடுத்ததுமே ஓட்டமாய் ஓடக்கூடியவர்கள். ஒவ்வொரு முஸ்லிமிடமும் இஸ்லாத்தின் சாரத்தைப் போதிப்பதற்காக நாள் கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் திட்டம்போட்டு ஊர் ஊராகவும், நாடு