25 (1996 - 2021) ஆண்டுகள்
இது காலச்சுவடு பதிப்பகத்தின் 25ஆம் ஆண்டு. 1996இல் தொடங்கிய பதிப்பகம் காலத்தின் ஊடேயும் காலத்துடன் உறவாடியும் முன்நகர்ந்தும் தமிழில் முன்னணிப் பதிப்பகமாக இன்று விளங்குகிறது. இதை முன்னிட்டு உலகெங்குமுள்ள இலக்கிய ஆர்வலர்களும் காலச்சுவடின் நண்பர்களும் மெய்நிகர் வெளியில் கலந்துரையாடல் நடத்தினர். 2021 அக்டோபர் 30 அன்று நிகழ்ந்த கலந்துரையாடலை லண்டனிலிருந்து எம். பௌசர் ஒருங்கிணைத்தார். இலங்கை, கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து சிறப்புரையாளர்களும் கருத்துரையாளர்களும் பங்கேற்றனர்.
நிகழ்வின் எழுத்துப் பதிவு இங்கே.
சாஷா எபெலிங், அமெரிக்கா
(கல்வியாளர்)
இத்தகைய சிறப்பான நிகழ்வில் பங்கேற்பது பெரிய மரியாதையாகும். இது உண்மையில் கொண்டாடப்பட வே