சல்மாவின் கதைகள்: உள்ளிருந்து விலகும் திரை
தொண்ணூறுகளின் இறுதியில் கவிதையினூடாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் சல்மா. கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமியச் சமூகத்திலிருந்து காத்திரமாக ஒலித்த குரல் சல்மாவினுடையது. நவீன கவிஞர்களின் பட்டியலில் சல்மாவின் இடத்தைத் தவிர்க்க முடியாது. கவிதை இவரது அடையாளம். நாவல், சிறுகதை, பயண இலக்கியம் என அடுத்தடுத்து எழுதிவருகிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘சாபம்’ (2012) வெளிவந்து பத்தாண்டுகள் கழித்துப் ‘பால்யம்’ (2022) தொகுப்பு வெளிவந்துள்ளது. இரு தொகுப்புகளையும் ஒருசேர வாசிக்கும்போது சில பொதுக்கூறுகள் மையம் கொண்டிருப்பதை அறியமுடிகிறது. இற்செறிக்கப்பட்ட தனது இளமைக் காலத்தை வெவ்வேறு வடிவங்களில் எழுதிப்பார்த்திருக்கிறார். கவிதையைவிடச் சிறுகதையில் எழுதுவதற்கான வெளி அதிகம். வழக்கமாகப் பெண் எழுத்தாளர்களுக்குக் கதை வழங்குநர்களாக ஆண்களே பிரதானமாக இருக்கிறார்கள். சல்மாவிற்கு ஆண்களுடன் மதமும் சேர்ந