அமையுமா தேசிய அரசு?
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக இரண்டு மாதங்களில் மூன்று தடவை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. சொந்தச் சகோதரர்கள் என்றும் பார்க்காமல், நெருக்கடிக்குக் காரணமான ராஜபக்ஷவினரை அமைச்சரவையிலிருந்து வெட்டியெறிந்தார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ. அப்படியான நிர்ப்பந்தம் அவருக்கு. அவரையே வீட்டுக்குப் போகச் சொல்லி மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்களே! பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஸ வீட்டுக்கு மட்டுமல்ல, சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் போராட்டத்தை அடக்க முற்பட்டபோது உருவாகிய நிலைமையினால், ஆளும் தரப்பினருடைய ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள், சொத்துகள் தீயில் அழிந்தன. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, கிராம மட்டத்திலிருந்த ஆதரவாளர்களும் ஓடி ஒளிந்தனர். மகிந்த ராஜபக்ஷ தப்பியோடித் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருந்தார். நாடே புரட்சிக்குள்ளாகியதைப்போ