பள்ளிக்குள் ஊடுருவும் வன்முறை
படம்: கிருஷ்ண பிரபு
பரபரப்பான பேசுபொருளாக, கவலைப்படத்தக்க விஷயமாக, இளந்தலைமுறைப் போக்கை உணர்த்தும் அபாய அறிவிப்பாக, ஊடகங்களில் அரசுப் பள்ளி மாணவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்துப் பல செய்திகளைக் கவனித்திருப்போம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதைப் பொதுமைப்படுத்துவது தவறு. தமிழ்நாட்டின் ஒருசில அரசுப் பள்ளிகளில் நடந்தவற்றை ஊதிப் பெருக்கி, அப்பள்ளி மாணவர்களே இப்படித்தான் என்னும் பிம்பத்தை உருவாக்க முயல்வதும் சரியன்று. உண்மையில், இத்தகைய மாணவர்கள் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.
இக்காணொளிகள் தனியார்ப் பள்ளிகளால் பரப்பப்படுவதாகக் கருதப்படுகிறது; அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் இருக்கும் அரசுப்பள்ளிகளில் இலட்சக்கணக்கில் புதிய மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். குறி