தமயந்தியின் மகள்
ஓவியங்கள்: செல்வம்
ஞாயிறு அன்று காலைக் கதிரவன் என் அறைக்குள் நுழையாதவாறு ஜன்னல் திரைச்சீலையைப் போட்டுத்தான் வைத்திருப்பேன். ஆனால் ஞாயிறு, திங்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல், ஆறுமணிக்கே எழுந்து பழைய இந்திப் பாடல்களின் பின்னணியில் காபியோடு ஆங்கில, தெலுங்கு நாளேடுகளையும அவற்றின் இணைய இதழ்களையும் ரசிக்கும் சினேகாவால் என் நீண்ட தூக்கத்தைத் சகித்துக்கொள்ள முடியாது.
“இதுபோல் சோம்பேறியாகத் தூங்கிக்கிட்டு இருந்தால் உன்னைத் தூக்கிவிடுவேன்” என்று இரட்டை வசனங்களை என்மீது வீசுவாள். அதனால் நானும் காலையில் சீக்கிரமாகவே எழுந்து பல் தேய்த்துவிட்டு வருவதற்குள்,
“ஆவோ ஹுசூர்... தும் கோ சிதாரோம் மேம் ச்சலூன் (வாயேன் எனது எஜமானியே! உன்னை நட்சத்திர உலகிற்கு அழைத்துச் செல்கிறேன்)” என்று காபிக் கோப்பையைப் பக்கத்தில் வைத்தாள்.
“சொல்லு