அக்னிபத்: ஓடும் குதிரைக்கு லாடம் அடிக்கும் வேலை
இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழக மக்கள், ராணுவம் குறித்த அறிவிப்புகளை – போர்க்காலங்களைத் தவிர - அதிகம் கண்டுகொள்வதில்லை. அவை அரசிற்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடக்கிறது என்று கடந்துபோய்விடுவார்கள். முதல்முறையாக ராணுவம் பற்றிய அறிவிப்பு ஒன்று மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வட மாநிலங்களில் இளைஞர்கள் பெருமளவில் திரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்; வன்முறைச் சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
அக்னிபத் என்பது என்ன?
இதுவரை ராணுவத்தில் அதிகாரிகள் அல்லாத வீரர்கள் பதினேழு வருடங்கள் வரை பணிபுரியலாம். அதன் பிறகு அவர்கள் பணி ஓய்வு பெறுவார்கள். ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, கருணைத்தொகை போன்றவை அவர்களுக்கு வழங்கப்படும். இதை இப்போது மாற்றி அக்னிபத் என்ற திட்டம் அறிவிக்கப்படுகிறது. இதன்கீழ் ராணுவத்தில் வீரர்கள் நான்கு ஆ