திரையில் விரியும் எல்லைகள்
காலத்தை ஒப்பிடுவதற்கு நதியைப் போலப் பொருத்தமான உருவகம் வேறில்லை. நூற்றாண்டுகளாக ஓடும் நதி அதன் போக்கில் எத்தனையோ முறை தடம் மாறி, வேறு பல கிளைநதிகளாக உருமாறிப் பெருங்கடல்களைச் சென்று சேரும். கலைகளும் அதுபோலவே. தமிழ்த் திரையுலகத்தின் சமகாலம் பல ஆச்சரியங்களும் பார்வை அனுபவங்களும் கொண்டு புதிய ஒன்றாகத் தோற்றமளிக்கிறது. புது வெள்ளம் பாயும் ஆற்றைப்போல.
சமகாலமென்பதைச் சற்றேறக்குறைய கடந்த பத்தாண்டுகள் என எடுத்துக் கொள்ளலாம். உள்ளடக்கம், வடிவம், செய்நேர்த்தி எனத் தமிழ் சினிமா வந்தடைந்திருக்கிற இப்புதிய முகத்தின் அடிக்கல்லாக இருப்பது எல்லாருக்கும் இயல்பாகக் கிடைத்துக்கொண்டிருக்கிற தொழில்நுட்பங்களே. திரைப்படங்களை பிலிம் கேமரா வைத்து எடுத்துக் கொண