பெருமாள்முருகனின் பூவரசு
ஓவியம்: கோலக் கண்டுவால்
நமக்குச் சொந்தமில்லாத, உணர்ச்சி கரமான தார்மீகக் களத்திற்குள் மானசீகமாக நுழைந்து பார்ப்பதில் கிடைக்கும் இன்பம், புனைவைப் படிப்பதற்கான காரணங்களில் ஒன்று. நம்முடையதான உணர்வுக்களத்தின் நெகிழ்வுத்தன்மையையும் புனைவு நமக்கு உணர்த்துகிறது. ஓரிரு பத்தி களையோ பக்கங்களையோ படித்த உடனேயே ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களின் கண்ணோட்டங்களோடு நம்மைப் பிணைத்துக்கொள்வது சாத்தியமாகிறது. ஏதேனும் ஒரு சூழ்நிலையுடனோ, ஒரு நகரத்துடனோ அல்லது அவற்றுக்கே உரித்தான குணாம்சங்களுடனோ அக்கதாபாத்திரங்கள் பிணைக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் மூலமாக அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்துபார்த்து நம்முடைய கற்பனையுலகிற்கும் அவர்களின் கற்பனையுலகிற்கும் இடை யிலான வெளியை நாம் அனுபவமாக்கிக் கொள்கிறோம். வாழ்வுபற்றிய நம் சுரணையின் விரிவாக்கத்தையும் ஆழப்படுத்துதலையும் அவை நமக்கு