நினைப்பு
“போக ஒரு மணிநேரம், வர ஒரு மணிநேரம். அங்க அண்ணன் வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாண்டுல இருந்து மிஞ்சிமிஞ்சிப் போனா பத்து நிமிசம் ஆகுமா? இப்பம் மணி பத்தரை ஆவப் போவுது. ரெண்டு, ரெண்டரைக்குள்ள வந்துரலாம். போயிப் பணத்த வாங்கிகிட்டு வந்துரு” என்றான் செல்லச்சாமி. சரோஜாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அங்கே கல்லிடைக்குறிச்சியை, ராமசாமியை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வந்தது.
“நான் கடையைப் பாத்துக்கிடுதேன். நீங்க போயி வேண்டிட்டு வந்துருங்களேன்” என்றாள் சரோஜா.
“அது தெரியாமயாள்ளா ஒன்னைப் போகச் சொல்லுதேன். பொங்கல் நேரம். இன்னங் கொஞ்ச நேரத்துல கீழூரு பஸ்ஸு வந்துரும். ஒண்ணு ரெண்டு யாவாரம் நடக்கும். பன்னெண்டு மணிக்கி சத்தரப்பட்டி சேலக்காரரு வந்து நிப்பாரு. அவருக்குப் பதில் சொல்லணும்.”
“எனக்க அங்க போகவே என்னம்போ மாதிரி இருக்கு. இந்தப் பத்தாயிரத்த இங்க பொரட்ட முடியாதா?”
<