பார்வையாளர்கள் எனும் திறனற்ற சாட்சிகள்!
மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமையை ஒழிக்க அரசியல்ரீதியாக, சமூகரீதியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கலைகள் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, சாதிய வக்கிரத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்கான முன்னெடுப்புகளும் நடைபெறுகின்றன. ஜெயராணி எழுத்தில் ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கிய ‘மஞ்சள்’ நாடகம், திவ்யபாரதி இயக்கத்தில் உருவான ‘கக்கூஸ்’ ஆவணப்படம் ஆகியவை கடந்த சில ஆண்டுகளின் உதாரணங்கள். தற்போது வெகுஜன ஊடகமான சினிமாவில் இது சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தீபக் இயக்கத்தில் சோனி லைவ் தளத்தில் வெளியாகியுள்ள விட்னெஸ் திரைப்படம் மலக்குழி மரணத் துயரங்களை, அதன் உள்ளடுக்காக நாறிக்கொண்டிருக்கும் சாதியமைப்பை, அதை முற்றிலும் தடுக்க முடியாத நமது நீதியமைப்பின் இயலாமையை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளது.
செம்மஞ்சேரி. சென்னையைச்&nbs