இன்றும் சாதியவாதியா?
மகாத்மா விஷயத்தில் அவருக்கு எதிராக அவரது மேற்கோள்களையே பயன்படுத்துவது கடினமானதல்ல
- ஜோசெப் லெபீல்ட்
2017ஆம் ஆண்டில் அம்பேத்கரின் ‘சாதியை அழித்தொழித்தல்’ நூலுக்கு அருந்ததி ராய் எழுதிய முன்னுரை காந்தியை இனவாதி யாகவும் சாதியவாதியாகவும் சித்திரித்திருந்தது. அருந்ததி ராய் தனது கூற்றுக்கு ஆதாரமாக காந்தியின் மேற்கோள்களையே பயன்படுத்தியிருந்தார். ராய் மேற்கோள்களைத் திரித்துத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற விமர்சனம் முன்வைக்கப் பட்டு அதையொட்டிப் பெரிய விவாதம் எழுந்தது. அதே ஆண்டு காந்தி சாதியவாதியா என்ற ஆய்வு நோக்கில் விவாதிக்கும் இன்னொரு நூல் வெளியானது. நிஷிகாந்த் கோல்கே எழுதிய ‘Gandhi Against Caste’ காந்தியின் மீது அருந்ததி ராய் போன்றோர் முன்வைக்கும் சாதியவாதி எனும் விமர்சனத்துக்குத் தரவுகளுடன் பதில் அளிக்கிறது. நிஷிகாந்த் கோல்கே சென்னை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வ