இங்கிவரை நாம் பெறவே...
பாரதி பிறந்த நூற்றாண்டு தொடங்கி நினைவு நூற்றாண்டுவரையில் ஆ.இரா. வேங்கடாசலபதியின் பாரதியியல் பங்களிப்புகள்
”புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லையெனும் வசை என்னால் கழிந்ததன்றே’ என்கிற ஞானச்செருக்கோடும் ‘மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக சாதாரணமாகவும் அதிக விரைவாகவும் தன்னுடைய நூல்கள் மக்களிடையே பரவ வேண்டும்’ என்கிற பெருவிருப்போடும் வாழ்ந்தவன் பாரதி. ஆனால் பாரதியின் விருப்பம் அவர் வாழ்ந்த காலத்தில் நிறைவேறவில்லை.அது பழங்கதையாய், கனவாய் மெல்லப் போனது. பாரதியின் மறைவுக்குப் பிறகே அவர் படைப்புகளின் வீச்சும் பன்முகத் தளத்தில் இயங்கிய அவர் எழுத்துகளின் சிறப்பும் உணரப்பட்டு அவற்றைத் தேடிப் பதிப்பித்து வெளியிடும் முயற்சிகள் தொடங்கின. அவரது துணைவியார் செல்லம்மாள் பாரதி, தம்பி சி. விஸ்வநாதன் ஆகியோர் தொடங்கிய தேடலும்