நீடூழி
நீடூழி
ஓவியம் - ஞானப்பிரகாசம் ஸ்தபதி
நாச்சிமுத்து பேருந்திலிருந்து இறங்கியபோது வானத்திலிருந்த மேகங்கள் சரிந்து நகரத்தின் கட்டடங்கள்மேல் விழுந்துவிடுவது போலிருந்ததைப் பார்த்தான். பத்து நாட்களாகத் தொடர்ந்து பயணம் செய்த களைப்பில் உடலில் கூன் விழுந்திருந்தது. பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறி ரவுண்டானாவிலிருந்து நீண்டு போகும் தார்ச்சாலையில் நடந்தான்.
பெருவிரலும் குதிங்காலும் வலித்தன. மேல்பாதம் வீங்கிச் செருப்பு அழுந்திய தடம் விழுந்திருந்தது. நாச்சிமுத்துவுக்கு நடந்து செல்லும் உணர்வில்லை. பேருந்திலும் ரயிலிலுமாக வாரணாசியிலிருந்து திருக்கண்ணூருக்கு வந்த பயணத்திலிருந்து இன்னமும் அவன் விடுபடவில்லை.
இருட்டும் வெளிச்சமும் பனியுமாக இருந்த காலை நேரத்தில் திருக்கண்ணூர் மெயின் ரோட்டில் பசுமாடுகள் நின்றிருந்தன. இருபுறமும் குப்பைகள் கொட்டிக் கிடந்தன. சாக்கடைகள் நிறைந்து ஓடின. ஆட்கள் தேநீர்க் கடைகளின்