பாரதி விருதுகள் - 2022
பாரதி விருதுகள் 2022
தினமணி நாளிதழின் 2022ஆம் ஆண்டுக்கான ‘மகாகவி பாரதியார் விருது’ பாரதி ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் 2022ஆம் ஆண்டுக்கான பாரதி விருது பாரதியியல் அறிஞர் ய. மணிகண்டனுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
மகாகவி பாரதியாரின் பாடல்கள், அவரது வாழ்வு ஆகியவை பற்றிப் பல்லாண்டுகளாக இவர்கள் இருவரும் மேற்கொண்டுவரும் தேடல்கள் பாரதியியல் ஆய்வுகளுக்கு வலுவைச் சேர்த்துள்ளன.
விருதுபெறும் அறிஞர்களுக்கு காலச்சுவடின் வாழ்த்துக்கள்.
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், ஆ.இரா. வேங்கடாசலபதி, தமிழிசை சௌந்திரராஜன்
மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன், காந்தி கிராமப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் மார்க்கண்டன், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறைத் தலைவர் பேரா.ய. மணிகண்டன்.