தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோரின் குரல்
தீண்டாமைக்கு எதிரான காந்தியின் பயணம் ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் நடைபெற்றது. காந்தி இந்தியாவில் பலமுறை பல்வேறு செய்திகளைச் சுமந்து பயணம் செய்திருக்கிறார். எனினும், இடைவிடாத பயணம் என்றால் அது இந்தப் பயணம்தான்.
அத்தோடு அவர் இந்தப் பயணத்தில் சந்தித்த அனுபவங்கள் வேறு பயணத்தில் நிகழாதவை. நீங்கள் வானொலியில் குறிப்பிட்ட நிலையத்தின் அலைவரிசைத் தொடர்பைப் பெற முயலும்போது சில சமயம் பல்வேறு நிலையங்கள் ஒன்றோடு ஒன்று இடைவெட்டிப் பல்வேறு குரல்கள் கேட்கும் நிலையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதுதான் இந்தப் பயணத்தில் காந்தியின் அனுபவம்.
ஒருபுறம் இந்து மகாசபாவின் குரல்; மற்றொரு புறம் சனாதனிகளின் வலிமையான எதிர்ப்புக் குரல்; இன்னொரு புறம் காந்தியின் தரப்பை மறுத்த அந்தந்தப் பிரதேச எதிர்ப்பாளர்களின் குரல்; ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள்ளாகவே காந்தியின் தலையீட்டை மறுதலித்த குரல்; க