நுகர்வுக்கால காந்தி
நன்மையின் இணைபொருட்சொல் சலிப்பு. இவ்வாறுதான் என்னால் நம்முடைய அகச்சிக்கலை எளிமையாகச் சொல்ல முடிகிறது. உனக்கு, ஊருக்கு, உலகுக்கு நன்மை என்று யாராவது நம்மிடம் சொன்னால், உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததைப் போல வாழ்வின் ஒவ்வொரு கணமும் துடிப்பு மிக்கதாக இருக்க வேண்டுமென்று விரும்பும் நாம், அறிவுரைகளைக் கேட்க விரும்பாத, சொல்பவரைப் பார்க்க விரும்பாத, அவருக்குப் பதில் சொல்லவும் விரும்பாத மூன்று குரங்குகளைப் போலாகிறோம்.
யார் தன்னைத் தொட்டாலும் அவரை வயதானவராக மாற்றி விடக்கூடிய சிறப்புத்தன்மை உடையவர் காந்தி. பின்வாங்கும், அமைதியாகப் போய்விடக் கூடிய, பங்கேற்காத, தன்னுலகில் வாழக்கூடிய, கொண்டாட்ட மில்லாத ஒருவரையே காந்தியம் உருவாக்கும் என்கிற சித்திரமே இன்றைக்கு எஞ்சியிருக்கிறது. போகத் தேவையில்லாத ஊரில் இறங்கி விட்டவர்களைப் போல காந்தியர்கள் பொருத்த மற்றவர்களாகப் பார்க்கப்படும் சூழலில் காந்தியின் முக்கியத்துவம் அவர் இருப்பினால் அல்ல, காந்தியத்தின் இன்மையினால் பெறப்படுகிறது. கா