இந்தியாவுக்கு அப்பால்
அமெரிக்காவில் ஒளிர்ந்த காந்தியப் போராளி
மகாத்மா காந்தி கொலையுண்ட செய்தியினை இந்தியாவுக்கும் உலகுக்கும் அறிவித்த ஜவஹர்லால் நேரு, “நம் வாழ்விலிருந்து ஒளி மறைந்துவிட்டது, எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது” என்றார்.
தொடர்ந்து பேசிய நேரு, “நம் வாழ்விலிருந்து ஒளி மறைந்து விட்டதென்றேன். ஆனால் அது தவறு. ஏனென்றால் இந்நாட்டில் ஒளிர்ந்த அந்த ஒளி சாதாரணமானதல்ல. இத்தனை வருடங்கள் நமக்கு வழிகாட்டிய அந்த ஒளி தொடர்ந்து பல்லாண்டுகளுக்கு, ஏன் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும், இந்நாட்டில் காணப்படும், உலகம் அதனைப் பார்க்கும், பல உள்ளங்களுக்கு அமைதியை அவ்வொளி கொடுக்கும்” என்றார். ஆம், அந்தப் பேரொளி உலகெங்கும் பரவியது. காந்தியப் பேரொளி அமெரிக்கக் கறுப்பினத்தவரின் உரிமைப் போராட்டங்களில் இரண்டறக் கலந்தது பலரும் அறிந்த செய்தி. ஆனால் பலரும் அறியாதது, காந்திக்கும் அமெரிக்கக் கறுப்