Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 122, பிப்ரவரி 2010

 

இந்த இதழின் உள்ளடக்கம் பிப்ரவரி 10ம் தேதி வலையேற்றம் செய்யப்படும்.

 

கட்டுரை: உங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது!
ஹிமான்சு குமார்
தமிழில்: தேவிபாரதி

விரக்தியுற்ற மனிதன் எவனோ அவன் போராடுவான். இது ஏழைகளின் போராட்டம். நக்ஸலைட்டுகள் அவர்களுக்கு அடையாளமாக மட்டுமே இருக்கிறார்கள். மார்க்ஸ் இல்லாமலிருந்திருந்தால், காந்தி இல்லாமலிருந்திருந்தால் அவர்கள் போராடமாட்டார்களா? போராடுபவர்களுக்கு மாவோயிஸ்ட்டுகளோ காந்தியவாதிகளோ தேவையில்லை.

கட்டுரை: அதிகாரத்தை நோக்கி வாளும் மயிலிறகுகளும்
சூரியதீபன்
எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர் என அறியப்பட்ட அ. யேசுராசா வுக்கு இலங்கை அரசு, தேசத்தின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான கலா கீர்த்தி என்னும் விருதை 2005இல் வழங்கியது. விருதை ஏற்க மறுத்த யேசுராசா, அதற்கான காரணத்தை விளக்கி அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

கட்டுரை: கலவரங்களின் தேசம்
க. திருநாவுக்கரசு
இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை 1984ஆம் ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பொற் கோயில்மீதான ராணுவத் தாக்குதல், இந்திரா காந்தி படுகொலை, தில்லியில் நடந்த சீக்கியர் படுகொலை, பல்லாயிரம் பேரின் உயிருக்கு உலைவைத்த போபால் விஷவாயுக் கசிவு என அடுத்தடுத்து இந்தியாவை உலுக்கிய சம்பவங்கள் நடந்து முடிந்தன.

சிறுகதை: ஏமாற்றங்கள்
ஸ்ரீரஞ்சனி
கேக் வெட்டுவதற்காக மது எங்கே எனத் தேடி வந்த கலாவுக்கு மதுவைப் பார்த்ததும் வந்தது துக்கமா அல்லது ஏமாற்றமா எனப் புரியவில்லை.

கட்டுரை: எனது ஆசிரியப் பணி
பி. ஏ. கிருஷ்ணன்
1968 உலக வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு. வியட்நாம் போரில் தோழர் ஹோசிமின் தலைமையில் டெட் தாக்குதல் நடை பெற்ற ஆண்டு அது. அமெரிக்கா வில் மாணவ மாணவியர் வியட்நாம் போரை எதிர்த்துப் பல ஆர்ப் பாட்டங்களை நடத்தினர். பாரிசில் தொழிலாளர்களும் மாணவர்களும் அரசுக்கு எதிராக எழுந்தனர்.

கவிதைகள்
கடற்கரய்
சுகிர்தராணி

சிறுகதை: குடைராட்டினம்
நாகரத்தினம் கிருஷ்ணா
காலப்பிரவாகம் சுழித்து ஓடுகிறது. அகத்தில் பேதங்களற்றதென்று எதுவுமில்லை. நேற்றைய உறவுகள் மேடை இறங்கிய தும் வேடத்தைக் கலைத்துக் கொண்டன. வேறு தயாரிப்புகளோடு புதிய ஒப்பந்தம். புதிய கதை, புதிய இயக்குநர், புதிய ஒப்பனையெனப் பிரிந்துபோயாயிற்று.

கட்டுரை: ஜே. பி. சாணக்யாவின் கதையுலகம் - கனவின் யதார்த்தப் புத்தகம்
அரவிந்தன்
சமூக, பொருளாதார அடுக்குகள் சார்ந்த விளிம்பு நிலைகள் மட்டுமின்றி, உளவியலின் அடிப்படையிலும் மைய நீரோட்டம் என்று சொல்லப்படும் போக்கிற்குள் அடங்காத மாந்தர்களும் சாணக்யா வின் புனைவுலகில் வெளிப்படுகிறார்கள்.

உரை:
எனது பர்மா குறிப்புகள் - வரலாற்று சாட்சியம்

எஸ். நரசிம்மன்
முஹம்மது யூனூஸ் அவர்கள் அன்பே உருவானவர். அவரது உல கில் கடுஞ்சொற்களுக்கும் வன் முறைக்கும் இடமில்லை. ‘பர்மா’ என்னும் நாடு இந்தியர்களை அரவ ணைத்து ஏற்ற காலம் போய் இந்தி யர்களை வெறுத்து வெளியேற்றிய நாளையும் கனத்த மனத்தோடு ஆவணப்படுத்துகிறார்.

கட்டுரை:
தோழர் நாகராஜனின் கீழை மார்க்சியம்
கரையில் இருந்தபடியே நீச்சல் பயில வழிகூறும் முயற்சி

ஜி.கே. ராமசாமி
கீழை மார்க்சியம் என்னும் கருத்தை நாகராஜன் ஒரு குறிப்பிட்ட சூழலில் உருவாக்கியுள்ளார். அந்த சூழலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அதற்கு இரண்டு விசயங்களை நாம் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். ஒன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பற்றியது; மற்றொன்று நாகராஜனின் கட்சி ஈடுபாடும் செயல்பாடுகளும் பற்றியது.

கட்டுரை:
எறும்பைக் கொல்ல வெடிகுண்டு வீசுதல்

சுகுமாரன்
கிட்டத்தட்ட ஐம்பது வயதைக் கடந்த ஓர் ஆணும் பெண்ணும் தனித்துச் சந்திப்பதும் பேசுவதும் குற்றமா? அவர்கள் ஒரே வாகனத்தில் பயணம் செய்வது பாதகமா? ஒரு வீட்டில் உட்கார்ந்து பேசும் இருவரைப் பாலியல் குற்றம் சுமத்தி வெளியில் இழுத்துவந்து அவமானப்படுத்துவது என்ன ஜனநாயகம்?

கட்டுரை:
அதிகாரத்தின் கருணை

ஸ்டாலின் ராஜாங்கம்
சமூகத்தின் பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ள விழிப்புணர்வைக் கண்டுகொண்டுவிட்ட திமுக அது சார்ந்த பிரச்சினைகளை மட்டுமல்ல, அப்பிரச்சினையை முன்னெடுத்த சக்திகளையும் அறிவாளிகளையும் கூடத் தன்பால் அரவணைத்துக்கொள்ள முயல்கிறது. மாற்று அரசியல், மாற்று அடையாளம் பேசிய பலரும் திமுக பெருமை பேசுபவர்களாக மாறியுள்ளனர்.

பதிவுகள்:
கச்சத்தீவும் இந்திய மீனவரும் நூல் வெளியீடு

பதிவுகள்:
அற்றைத் திங்கள் - கே. ஏ. குணசேகரன்

பதிவுகள்:
அற்றைத் திங்கள் - ஹாலாஸ்யம்

பதிவுகள்:
33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி

நேர்காணல் சிற்றிதழ் அறிமுகம்

மதிப்புரை:
பிறகொரு இரவு

கே. என். செந்தில்

கடிதங்கள்

தலையங்கம்

கண்ணோட்டம்

விளக்கு விருது