Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 103, ஜூலை 2008

  இந்த இதழின் உள்ளடக்கம் ஜூலை 10 ஆம் தேதி வலையேற்றம் செய்யப்படும்.  

கட்டுரை

பெயர் சொல்லத் தொடங்கும் காதல்கள்
அனிருத்தன் வாசுதேவன் | இன்று இந்தியாவில் ஓரின, ஈரினப்பாலீர்ப்பு கொண்டவர்கள் (ஆண்களும் பெண்களும்), அரவானிகள், பால் நிலை தாண்டிய மற்ற பலர் ஆகியோரது குரல்கள் பலமாகக் கேட்கத் தொடங்கியிருப்பதையும் இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 377ஐ எதிர்த்துத் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதையும் அகம் - புறம் சார்ந்த கண்ணோட்டத்தில் முதலில் புரிந்துகொள்ளலாம்.

ட்டுவண்டி 20: ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு
சச்சிதானந்தன் சுகிர்தராஜா | மிக அதிகமான விளம்பரத்துடன் ஐ.பி.எல். போட்டி அறிவிக்கப்பட்டபோது, ஆங்கில ஊடகங்கள் எதோ நாகரிகமே அழிந்துவிட்டதுபோல் நடந்துகொண்டன.

சுஜாதா: ஒரு முரண்நோக்கு
கண்ணன் | சுமார் 35 ஆண்டுகாலம் வெகுஜன தளத்தில் தாக்குப்பிடித்தவர்கள் தமிழில் அபூர்வம். மறையும்வரை சமகாலத்தோடு தொடர்புடனிருந்து வெகுஜன தளத்தில் நுழையும் இளம் எழுத்தாளர்களுக்கு இறுதிவரை ஒரு சவாலாக இருந்தவர் சுஜாதா.

செட் போடுவதல்ல ஆர்ட் டைரக்ஷன்
சுகுமாரன் | ராஜசேகரனைப் பொறுத்தவரை கலை இயக்குநர் என்பவர் பிரம்மாண்டமான செட்டுகளை நிர்மாணிப்பவரல்ல. கதைக்குப் பொருந்தக்கூடிய களத்தை உருவாக்குபவர்.

பசுமைப் புரட்சியின் கதை
இயற்கை நியதிகளின் மீறல்: இந்திய வேளாண்மையின் சரிவு

சங்கீதா ஸ்ரீராம் | இயற்கையிலேயே நீர்வளம் மிகுந்த இடங்களில், அங்குள்ள தேவைகள், மண்வளம், கலாச்சாரம், தட்ப வெப்பத்திற்கு ஏற்ற பாசன அமைப்புகளைப் புத்திசாலித்தனமாக வடிவமைத்துப் பராமரித்து வந்தனர்.

படிகள் நீங்கள் நாங்கள்
ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் | சிறுபத்திரிகைகளின் கூட்டணி உருவானதில் படிகள் பெரும் பங்கு வகித்தது மட்டுமல்ல, அந்தக் கூட்டணி தொடர்ந்து செயல்படவும் படிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.

சிறுகதை: 5:12 PM
எம். கே. குமார் (சிங்கப்பூர்) | “என்ன, நம்பவில்லையா? ஸம்சயாத்மா விநச்யதி! நம்பிக்கை வையும் தோழரே. நம்பாவிட்டால் எதுவும் இல்லை. எதை நம்பவில்லை நீர், இந்திரா காந்தியையா இல்லை எனக்குப் பசிப்பதையா? இந்திரா காந்தியை நம்பு. அவர் உங்களனைவரையும் காப்பாற்றுவார். இரண்டு வெள்ளி கொடும்; என்னை நான் காப்பாற்றுவேன்!” சொல்லிவிட்டு என்னைக் கூர்ந்து பார்க்கிறார் அவர்.

பத்தி
நட்சத்திர சந்நியாசிகள்

சக்கரியா | கேரளத்தில் ஆண் சந்நியாசிகள் எல்லாரையும் ஒரு பெண்ணின் தனி நபர் பட்டாளம் முறியடித்து மல்லாந்து விழச்செய்து நீண்ட காலமாகிறது - அம்ருதானந்தமயி என்ற சந்நியாசினி. அவருடனான போட்டியில் எப்போதாவது பிரத்யட்சப்பட்டு சவால்விடுபவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மட்டுமே. ‘எனக்கும் ஆதரவாளர்கள் இருக்கிறார்களாக்கும்’ என்று லேசாகக் காட்டுவார்.

சிறப்புப்பகுதி
1983 ஜூலை இனப்படுகொலை
எரியும் நினைவுகள்

எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை
மைக்கல் றொபேர்ட்ஸ் | தமிழில்: சேரன் | ஜூலை இனப்படுகொலையின்போது கொழும்பில் எல்லா இடங்களிலும் திரிந்து, தேடித் தேடிக் கொலை செய்தவர்கள் வாக்காளர் விவரப்பட்டியலைக் கையில் வைத்திருந்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம். வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த வீடு அல்லது எந்தச் சொத்து தமிழருடையது என்பதை நீங்கள் இலகுவில் இனங்கண்டுவிட முடியும்.

காயங்களிலிருந்து பிறந்த ஒளி
கருணாகரன் | இலங்கை பற்றிய பொதுவான சித்திரம் வன்முறை சார்ந்ததாகவே இருக்கிறது. அழகானது, வளமுடையது என்று சொன்னாலும் இலங்கையின் வரலாறு நீளவும் தீயும் குருதியும் நிரம்பிய சுவடுகள்தான். இதிகாச காலத்திலிருந்து அப்படியரு பிம்பம் இலங்கைக்கு உண்டு. அனுமனின் லங்கா தகனம், முதல் பெரும் தீவைப்பு. தொடர்ந்து போர்களும் அழிவுகளும். மகாவம்சம் சொல்லும் துட்டகெமுனு - எல்லாளன் பகையும் போரும் அடுத்த வரலாற்றுப் பதிவு.

அழிந்துபோன 97 ஆயிரம் நூல்களின் சொல்லப்படாத கதை
அம்ஷன் குமார் | இதுவரை எவரும் தொட்டிராத ஒரு நிகழ்வினை, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அதே ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்த இயக்குநர் சோமிதரன் திறம்படக் கையாண்டிருக்கிறார். இனப்போரில் ஸ்ரீலங்கா ஈடுபட்டுள்ள நிலையில் அத்தகைய ஆவணங்கள் அங்கிருந்து கிடைப்பது அவ்வளவு சுலபமானதல்ல. சோமிதரன் அந்தக் குறைபாட்டினைப் பார்வையாளர்கள் அதிகம் உணராத வண்ணம் நேர்காணல்கள் வாயிலாகவே படத்தை எடுத்துச்செல்கிறார்.

சோமிதரனுடன் ஒரு சந்திப்பு
“நினைவூட்டிக்கொள்ள முடியாத அளவுக்கு அது ஒரு பயங்கரமான நிகழ்வு”

யாழ்ப்பாண நூலகம் தமிழர்களின் பண்பாட்டு மையம், அறிவுத் தேடலின் அடையாளம். பிறகு அது ஈழ விடுதலைப் போராளிகளுக்கான பாசறையாகவும் மாறியது. பல்வேறு போராளிக் குழுக்களும்கூட அவற்றில்தான் உருவாயின. பிற்காலங்களில் பல வாசக சாலைகள் போராளிகளுக்கான தங்கும் இடங்களாக மாறியிருந்தன.

ஈழத்துக் கவிதைகள்:
சலனி
எம். நவாஸ் சௌபி
சோலைக்கிளி
றஞ்சினி
பெண்ணியா

தமிழர் தாவரவியல் வழக்காறுகள்
ஆமணக்கு

ஆ. சிவசுப்பிரமணியன்

மதிப்புரை
பேசும் பொற்சித்திரம்

காயசண்டிகை

அஞ்சலி
பன்முக அடையாளங்களைக் கொண்ட நவீன நாடக ஆளுமை
விஜய் டெண்டுல்கர் (ஜனவரி 6, 1928 - மே 19, 2008)

  இதழ் 102
தலையங்கம் | கடிதங்கள் | எதிர்வினை
பதிவு: அற்றைத் திங்கள்  | பதிவு: மீண்டும் காகங்கள்