சென்னைப் புத்தகக் கண்காட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெருந்தொற்று உருவாக்கிய அச்சத்தின் நிழலில் நடைபெற்றது. இந்த ஆண்டும் அது தொடருமோ என்னும் கலக்கம் டிசம்பர் மாதத்தில் எட்டிப் பார்த்தாலும் அப்படி எதுவும் நிகழாமல் இந்த ஆண்டின் புத்தகக் காட்சி நடந்து முடிந்திருக்கிறது. ஜனவரி 6முதல் 22வரை நடைபெற்ற
கன்னடப் படைப்புகளைத் தமிழிலும் தமிழ்ப் படைப்புகளைக் கன்னடத்திலும் மொழிபெயர்த்து இரு மொழிகளுக்கும் இடையில் உறவுப் பாலமாக விளங்குபவர் கே. நல்லதம்பி. 2022ஆம் ஆண்டுக்குரிய சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விருதாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கன்னட எழுத்தாளர் நேமிசந்த் எழுதிய &lsquo
80+ தமிழ் இலக்கிய, பண்பாட்டுப் பரப்பில் நீண்டகாலமாகச் செயலாற்றிவரும் ஆளுமைகளில் 80 வயதைக் கடந்தவர் களின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகக் காலச்சுவடு வெளியிடும் தொடரின் ஆறாவது கட்டுரை இது. டிசம்பர் இதழில் வே. வசந்திதேவி பற்றி கா.அ. மணிக்குமார் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருந்தது. இந்த இதழில் சு. இ
1992 ஆம் ஆண்டில், ஆஸ்கர் அகாதமி விருதுக் குழு கேட்டுக்கொண்டதன் பேரில் வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் ஷிக்கலைக் இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராயின் திரை நறுக்குகளைக் கொண்டு காட்சித் தொகுப்பு ஒன்றை உருவாக்கினார். ராய் படங்களின் காட்சிகள் எதுவும் அமெரிக்காவில் இல்லாத நிலையில், அவர் பிரிட்டிஷ் ஒல
ஓவியம்: மு. நடேஷ் பதம் தன்னிச்சையாக உறைந்த பனிச் சிற்பங்களின் உட்குரல் வடிவங்களுக்குச் சாயமிடுகிறாய் ஏந்துகின்ற மெய்வடிவங்களின் உள்ளேயும் வெளியேயும் பொறிகள் நிறத்தின் ஏழு பாலைகள் நீ இப்போது ஏழு நிறம் சூழ்ந்த உடல் நான் அதிர்ந்து கொண்டிருக்கிறது ஏ
ஓவியம்: றஷ்மி மெதுவாகக் கழற்றிய காதணிகள் இரண்டையும் சிறியதொரு டிஷ்யூ காகிதத்தில் வைத்து மடித்துத் தனது சின்னச் சின்ன பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டியில் வைத்தாள் நிர்மலா. அவ்வளவு காலமும் பெரியதொரு பாரத்தைச் சுமந்துகொண்டு வந்து அப்போதுதான் கீழே இறக்கிவைத்திருக்கும் காது
றெஜி சிறிவர்த்தன (1922-2004) தனது 82ஆவது வயதில் 2004 டிசம்பர் 15இல் மறைந்தார். டிசம்பர் 15 அவர் நினைவு நாள். அவர் தன் எண்பதாவது பிறந்தநாளுக்கு எண்பது அடிகளில் எழுதிய கவிதை ‘Birthday Apology and Apologia’ சுவாரஸ்யமானது. அதன் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது. அவர் கவிதை எழுதுவதற்குப்
தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை எழுதியவர்களுள் ஸ்ரீநேசன் குறிப்பிடத்தக்கவர். 1997இல் ‘சிக்கல்’ என்ற இவரது முதல் கவிதை கனவு இதழில் பிரசுரமாகியிருக்கிறது. அதனையே தொடக்கமாகக் கருதினால் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை எழுதி வருகிறார். ‘காலத்தின் முன் ஒரு செடி’ (2002
அறிவியல் நிர்மாணிக்கும் உலகம் பருண்மையானது. தொட்டுணரக்கூடியது. தர்க்கப்பூர்வ நிரூபணங்கள் கொண்டது. நிரூபணங்களாக நிறுவப்படக்கூடியவற்றை மட்டுமே நம்ப வேண்டும் என்று வலியுறுத்துவது. மாற்றுத் தர்க்கங்களை அவநம்பிக்கையோடு அணுகுவது. மறுபுறம், ஆன்மவியலும் மீமெய்யியலும் வனைந்து அளிக்கும் உலகமோ புகைமூட்டமான
(சூடாமணி நிகண்டு) தமிழ் நிகண்டுகளில் மண்டலபுருடர் இயற்றிய ‘சூடாமணி நிகண்டு’ மக்கள் வழக்கில் மிகுதியான செல்வாக்குப் பெற்று விளங்கியது. சொற்பொருள் கூறும் நூலை ‘உரிச்சொல்’ என்று வழங்கிவந்த தமிழ் மரபிற்கு நிகண்டு என்ற சொல்லினை முதன்முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டு
ஓவியம்: மணிவண்ணன் விஜய் வேலையில் மும்முரமாக இருக்கிறார். விஜய்யின் உண்மையான பெயர் தெரியாது. கடையின் பெயர் ‘விஜய் சலூன்’. ஆகவே, ஊரவர்களுக்கு அவர் விஜய். இப்போது வெட்டிக்கொண்டிருக்கிறவருக்கு வேலை முடிய இன்னும் ஐந்து நிமிஷமாவது ஆகும். அதன் பிறகு இன்னொருவர், உள்ளே நாளிதழ் படித்தபடி
ஓவியம்: டிராட்ஸ்கி மருது எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் இலக்கியப் பங்களிப்புகள் குறித்துத் திருச்சிராப்பள்ளி வானொலியில் 44 ஆண்டுகளுக்கும் முன் ஒலிபரப்பான ஒரு நேர்காணலின் எழுத்து வடிவம் இது. எழுத்தாளர் வல்லிக்கண்ணனிடம் அழகிரிசாமி குறித்து கி. ராஜநாராயணன் கேள்விகள் கேட்டு விவரங்கள் பெறுமாற
ஜீன் மெஷின் (அறிவியல்) வெங்கி ராமகிருஷ்ணன் தமிழில்: பேரா. சற்குணம் ஸ்டீவன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை. நாகர்கோவில் - 1 பக். 320 ரூ. 395 2009ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டவர்களில் ஒருவர் வெங்கி எனப்படும் வெங்கட்ராமன் ர
திருக்குறள் பகுப்பாய்வுக் கோவை பழநிச்சாமி. மு வெளியீடு: பாலாஜி இண்டர்நேஷனல் பதிப்பகம், புதுதில்லி பக், 440 ரூ. 400 செறிவும் ஆழமும் மிகுந்த கூரிய உயர்நிலை ஆய்வுகளுக்கு அகரவரிசைப் பெயர்-தலைப்பு-பக்கப் பட்டியல் (index), கலைச்சொல் விளக்கக் கோவை (glossary
46ஆவது சென்னைப் புத்தகக் காட்சி ஜனவரி 6ஆம் தேதி யிலிருந்து 22ஆம் தேதிவரை நடைபெற்றது. காலச்சுவடு அரங்கு கலாபூர்வமாகவும் வாசகர்கள் தங்கள் ரசனைக்கேற்பப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கத் தோதான வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது. வாசகர்களும் எழுத்தாளர்களும் காலச்சுவடு அரங்கின் வடிவமைப்பைப் பாராட்டினார்கள்.
காலச்சுவடு ஜனவரி-2023 இதழில் “தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோரின் குரல்” தலைப்பில் வந்த கட்டுரை, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய அம்பேத்கர், காந்தியின் தீண்டாமை ஒழிப்பின் மீதும் தீண்டாதார் மீதான அவருடைய பார்வை, செயல்பாடுகளின் மீதும் வைத்த விமர்சனங்களை முன்வைக்காதது வியப்பைய
பெண்களின் உருவத்தைச் சிலையாகவோ ஓவியமாகவோ வரைந்து பொதுவெளியில் வைக்கும்போது படைப்புகளின் உடை, நகை, உருவத் தோற்றத்தில் பிடிபட்டிருக்கும் இயக்கத்தின் அந்தக் கணம் (கோவிலுக்குப் போதல், கூடை முடைதல், சமைத்தல், பாசி மணி கோத்தல், புத்தகம் படித்தல், பேனா - காகிதம் அல்லது கணினியுடன் இருத்தல் போன்ற இயக
-
கட்டுரைCASIகதைஉரையாடல்தொடர் 80+கலைநேர்காணல்: கே. நல்லதம்பிஎதிர்வினைமதிப்புரைகவிதைகள்தலையங்கம்பதிவு: சென்னைப் புத்தகக் காட்சி 2023கவிதை