தலையங்கம்
ஆசிரியர் குழு

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற ஹரியானா, மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தல்கள் பலரும் எதிர்பாராத முடிவுகளைக் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக மகாராஷ்டிரத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்குப் பெரு வெற்றி கிடைக்குமென்றோ காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் சரிவு ஏற்படுமென்றோ யாரும

கடிதங்கள்

டிசம்பர் 2024 இதழில் வெளியான சுகுமாரனின் ‘இசைபட வாழ்தல்’ கட்டுரையையும் அதனைத் தொடர்ந்து டி.எம். கிருஷ்ணாவின் குரலில்  எதிரொலிக்கும் ‘வாழ்வின் கதை’ என்ற கட்டுரையையும் படித்தேன்.பெரியாரைப் புகழ்ந்து பாடியதாலோ அம்பேத்கரைப் போற்றிப் பாடியதாலோ கர்நாடக சங்கீதத்தின் மாண்பு

கட்டுரை
மருதன்

முதல்நிலைத் தரவுகளைக் கொண்டு, தக்க ஆய்வு முறையியலைப் பின்பற்றி எழுதப்படும் கல்விப் புலன் சார்ந்த படைப்புகள் எளிமையாகவும் சுவையாகவும் இருப்பதில்லை. எளிமையாகவும் சுவையாகவும் எழுதும் பலர் தரவுகள் குறித்தோ ஆய்வு முறையியல் குறித்தோ கவலை கொள்வதில்லை. இது கிட்டத்தட்ட உலகம் முழுவதும் நிலவும் வழக்கம். தம

உரையாடல்
பழ. அதியமான்

ஆ.இரா.  வேங்கடாசலபதியுடன் பா. மதிவாணனும் கரு. ஆறுமுகத்தமிழனும் உரையாடியதன் பதிவு திருச்சி வானொலியில் 03.08.2024இல் ஒலிபரப்பானது. அந்த உரையாடலில்  வரலாற்று ஆய்வுபற்றியும் வ.உ.சி.யைத் தான் கண்டடைந்தது பற்றியும் வேங்கடாசலபதி பகிர்ந்துகொள்கிறார். உரையாடலின் பகுதி இது. எது உங்களை அவ்வளவு

அஞ்சலி: ஜாகிர் ஹுசைன் (1951-2024)
சுகுமாரன்

  இசை வாழ்க்கையின் தொடக்க நாட்களைப் பற்றி நேர்முகமாகக் கேட்கப்பட்ட எல்லாத் தருணங்களிலும்  பதிலாக, உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் இரண்டு சம்பவங்களை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். “சங்கீதம் ததும்பிக்கொண்டிருக்கும் குடும்பப் பின்னணியில் பிறந்த எனக்கு  இயல்பாகவே இசை வாய

அஞ்சலி: ஜெயபாரதி (1946-2024)
தியடோர் பாஸ்கரன்

  குறிஞ்சி மலர்வதைப்போல தமிழில் அரிதாகவே அழகியல்ரீதியாக அணுகக்கூடிய திரைப்படங்கள் தோன்றுகின்றன. 1953இல் ஃபிரஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோவின் பிரபல நாவல், தமிழில் ‘ஏழைபடும் பாடு’ என்ற தலைப்பில் மறக்கப்பட்ட மேதை கே. ராம்நாத்தின் இயக்கத்தில் வந்தது. அடுத்து ஜெயகாந்தனின் &lsq

கவிதைகள்
சுகுமாரன்

அத்துவானச் சிறு செடி அத்துவானச் சிறு செடி கதிர்த் தகிப்பில் துவண்டும் பனிக்காற்றில் உறைந்தும் மழைச் சீற்றத்தில் நடுங்கியும் பெரும்புயலில் தத்தளித்தும் மண்ணைத் துறக்காமல்  வீறாப்புடன் நின்றது. இன்று பார்க்கிறேன் சின்னஞ்சிறு மஞ்சள் பூவுடன் கொஞ்சலாக அசைகிறது இத்தனை இடர் தாண்டி

பதிவு
க. மோகனரங்கன்

பெங்களூரைச் சேர்ந்த மம்தா சாகர் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர், கல்வியாளர் எனப் பன்முகச் செயல்பாடு களைக் கொண்டிருப்பவர். தன்னுடைய எழுத்துகளுக் காகச் சர்வதேச அளவிலான அங்கீகாரமும் விருதுகளும் பெற்றிருப்பவர். அவர் முன்னெடுப்பில் 2013ஆம் ஆண்டிலிருந்து  கவி மாலை என்று பொ

பதிவு
தாமரை

அம்பைக்கு எண்பது வயது பிறந்ததைக் கொண்டாடும் வகையில் ‘அம்பை 80’ என்னும் தலைப்பில் கடந்த 28-11-2024 அன்று ஒருநாள் கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. காலச்சுவடு அறக்கட்டளை, மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ் உயராய்வு மையம், கடவு ஆகியவை இணைந்து நடத்தின. ஸ்ரீராம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் உத

கற்றனைத்தூறும்-1
சாரா அருளரசி

நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் கல்விக்கு அடிப்படைப் பங்கு உண்டு. அதுவே, மனிதர்க்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது; வாழ்வுக்கு வளம் சேர்க்கிறது. ஆனால் அறிவை வளர்ப்பதும் மனத்தை விரிவாக்குவதுமே கல்வியின் அடிப்படை நோக்கம். இப்படிச் சொல்லலாம், வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துவது கல்வியன்று, வாழ்க்கையே

கட்டுரை
பாவண்ணன்

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் புகுமுக வகுப்புத் தேர்வை எழுதிய மாணவரொருவர் முடிவுக்காகக் காத்திருந்தார். அந்த வட்டாரத்திலேயே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுக் கல்லூரிக்குச் சென்ற முதல் மாணவர் அவர். அவருடைய அம்மா, அப்பா, உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அனைவருமே அவருடைய தேர்வு முடிவ

சிறப்புப் பகுதி
36+
பொறுப்பாசிரியர்

இது காலச்சுவடு பத்திரிகையின் 301ஆவது இதழ்.  36ஆம் ஆண்டின் தொடக்கம். மாற்று இதழ் ஒன்று இத்தனை நீண்டகாலம் தொடர்ந்து வெளியாவது அரிது. அவ்வாறு தொடர்ந்து வரக் காரணங்கள் அந்த இதழின் பங்களிப்பும் அதற்கு வாசகர்களிடமிருந்து கிடைத்த ஏற்புமே ஆகும். 36 ஆண்டுகளில் வெவ்வேறு பண்பாட்டுத் துறைகள் சார்

சிறப்புப் பகுதி
சு. இராசாராம்

காலச்சுவடு இதழை முப்பத்திஆறு ஆண்டுகளுக்கு முன் சுந்தர ராமசாமி தொடங்கினார். சு.ரா.,  மொழிக்கும் மொழிநடைக்கும் கூருணர்ச்சி மிக்கவர். தமிழ்ப் படைப்புக்களில் சமகாலத் தமிழும் இயல்பான மொழிநடையும் இடம்பெற வேண்டும் என்று அவர் விரும்பினார். தம் கட்டுரைகளிலும் புனைவுகளிலும் கையாண்ட மொழி தமிழகப் படைப்

சிறப்புப் பகுதி
சுனில் கிருஷ்ணன்

தமிழ்ச் சூழலில் காந்தியம் குறித்த உரையாடலில் காலச்சுவடின் பங்களிப்பை இந்தத் தருணத்தில் மதிப்பிடுவதே என் கட்டுரையின் நோக்கம். இதன் பொருட்டுச் சில நாள்களாகப் பழைய இதழ்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். காலச்சுவடில் என் எழுத்து முதல்முறையாக வெளியானது காந்தியின் பொருட்டுதான். 2014 ஏப்ரல் இதழில் அருந்ததி

சிறப்புப் பகுதி
ஜெ. பாலசுப்பிரமணியம்

காலச்சுவடு நான் இளங்கலை புகுந்த ஆண்டில் (1998) அறிமுகமானது. அதுவும் நூல் வடிவில் 1992இல் வெளியான சிறப்பிதழ் மூலமே அது நிகழ்ந்தது. தீவிர இலக்கிய வாசிப்பிற்கான இதழாக அறியப்பட்ட காலச்சுவடு புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்தியதோடு அவ்வழியில் சிந்திக்கவும் வைத்தது என்பதே உண்மை. திருநெல்வேலிக்குள் கையில்

சிறப்புப் பகுதி
சித்ரா பாலசுப்ரமணியன்

காலச்சுவடின் நீண்ட பயணத்தை வலசை வரும் பறவைகளின் பயணத்தோடு ஒப்பிடலாம் எனத் தோன்றுகிறது. இதழைத் தொடங்குதல் எளிது. தொடங்குதலும் தொடங்கிய கருத்தமைவுகளோடே தொடர்தலும் அரிது. சற்றே நீண்ட இவ்விதழின் பயணத்தில் சூழலியலைப் பொறுத்தவரை காலச்சுவடின் பங்களிப்பு என்ன எனப் பார்ப்பது சுவாரஸ்யமானது. சூழலியல் இன

கதை
சுஜாதா செல்வராஜ்

என் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. அதன் சத்தம் மூடிய கதவுகளைத் தாண்டி வெளியில் கேட்டுவிடுமோ என்று அஞ்சும்படியான பேரோசை . என் வாழ்வின் மிக மோசமான ஐந்து நிமிடங்கள் அவை. யாரோ கதவைத் தட்டும் ஓசை. நானும் சந்ருவும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. நாங்கள் உடைகளைச் சரிசெய்து கொண்டு எழுந்து நிற்கிறோம்.

நேர்காணல்: செந்தீ நடராசன்
சந்திப்பும் புகைப்படங்களும் அரவிந்தன்

நாகர்கோவிலில் பிறந்த சுப்பையா நடராசன் என்ற செந்தீ நடராசன் முக்கியமான கல்வெட்டாய்வாளர். ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தமிழக அரசு நல்லாசிரியர் விருது பெற்றவர்; பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கல்வெட்டுகள்மீது தற்செயலாகத் தொடங்கிய ஆர்வம்  அவரைக் கல்வெட்டுகள் குறித

கவிதைகள்
சல்மா

வீடு நீண்ட காலம்  வசிக்க நேர்ந்த வீட்டிலிருந்து  வெளியேறத் தேவை  கதவில்லை ஒரு உடையாத இதயம் ஷெல்பிலிருந்து  கீழிறங்கிய புத்தகங்கள் கழற்றப்பட்ட மின்விசிறிகள் அமர்த்திவைக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி இவற்றிற்கு மத்தியில்  உறக்கம் நழுவிய ஓர் இரவு புத்தகங்

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தரஜா

காலச்சுவடின் புத்தாண்டு இதழ்களில் முந்திய வருடத்தில் வெளிவந்த சில நூல்கள்பற்றித் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். இந்தத் தடவையும் அதைத்தான் செய்யப்போகிறேன். ஆனால் ஒரு வித்தியாசம்; 2023இல் வந்த புதிய புத்தகங்கள் பற்றியதல்ல இந்த எழுத்து. சென்ற ஆண்டில் நான் வாசித்த எழுத்துக்கள் எல்லாம் 19-20ஆம் நூற

புத்தகப் பகுதி

சென்னை புத்தகக் காட்சி 2025ஐ முன்னிட்டு வெளியாகவிருக்கும் புதிய நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இவை.   நபிகள் நாயகம் சில முக்கியக் குறிப்புகள்   (கட்டுரைகள்) ஜியாவுதீன் ஸர்தார் தமிழில்: முடவன் குட்டி முகமது அலி ரூ.200     ஹுதைபியா

புத்தகப் பகுதி

தங்க நகைப் பாதை (நாவல்) மு. குலசேகரன் ரூ. 550   காலை வேளையில் தென்னந்தோப்பு மிகவும் குளிர்ந்தது. திட்டுகளாகத் தரையில் நிழல் பரவியிருந்தது. உச்சிவேளையில் மண் வெப்பமடையும். பச்சையோலைகள் ஆவியுமிழும். காய்ந்த ஓலைகள் பற்றியெரியத் துடிக்கும். மாலைவரை தோப்பு உலை போலிருக்கும். எதிர்

பதிவு

மூன்றாவது ஆண்டாக கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் மொழிபெயர்ப்பாளருக்கான ‘அ. முத்துலிங்கம் விருது–2025’க்கான விருது  என். கல்யாண்ராமனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கான பட்டயமும் ரூ. ஒரு லட்சமும் ரொக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது. தமிழுக்கு அவர் தொடர்

புத்தகப் பகுதி

குற்றமும் அநீதியும் (அனுபவம்) வி. சுதர்ஷன் தமிழில்: ஈசன் ரூ. 290 ஒருநாள், ஐ.பி. இயக்குநரிடமிருந்து அனூப்பிற்கு ஒரு குறிப்பு வந்தது. லால் பஹதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக  உயர் பயிற்சியகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், அனூப் பயங்கரவாதம், தீவிரவாதம், கிளர்ச்சி பற்றி உரை நிகழ்த்த வேண்டும்

பதிவு

தமிழியல் திறனாய்வு உலகின் தனிப்பெரும் ஆளுமை பேராசிரியர் முனைவர் க. பஞ்சாங்கம் பெயரிலமைந்த ‘பஞ்சு பரிசில் 2024’ விருதுத் தேர்விற்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது ரூபாய் 10,000, நினைவுக் கேடயத்தையும் சான்றிதழையும் உள்ளடக்கியதாகும். க. பஞ்சாங்கத்தின் பிறந்த நாளையொட்டி 2025 பிப்

கட்டுரை
அ.கா. பெருமாள்

நாட்டார் கலைகள் சிலவற்றிற்கு முறைப்படுத்தப் பட்ட பனுவல் உண்டு (மெலட்டூர் பாகவத மேளா; இரண்ய நாடகம்). தென்னிந்திய தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் ராமாயணக் கதைகள் முழுவதும் வால்மீகியைப் பின்பற்றியதல்ல. ஆந்திர தோல்பாவைக்கூத்து தெலுங்கு ரங்கநாத ராமாயணக் கதையை மூலமாகக் கொண்டு நடத்தப்படுகி

கவிதைகள்

  1. கரப்பான் பூச்சிகள் கழிவறையில் மலம் கழித்துக்கொண்டிருந்தன கறைபடிந்த என் கழிவறையை நெடுநாட்களுக்குப் பிறகு சுத்தம் செய்திருந்தேன். குமட்டலை உண்டுபண்ணியது கரப்பான் பூச்சிகளின் மலம். அதன் பிறகு ஒரு முறிந்துவிழும் மரக்கூட்டில்  எனது இருப்பிடத்தைச் சருகுக் குச்சிகளைக் கொண்டு கட்டத் த

கதை
வஜ்ர சந்திரசேகர; தமிழில்: எழுத்துக்கினியன்

என் முதுகின் பின்னால் கடலலை மோத, முகம் நெருப்பை நோக்கியபடி மொழிபெயர்க்கிறேன்: அதிகமும் கவிதைகள். இப்போ மொழி, கலாச்சாரங்கள் அனைத்துமே கடலுக்கும் புயல்களுக்கும், புகைமூட்டங் களுக்கும் தொற்றுநோய்களுக்கும் நெருப்புக்கும் இரையாகும் கட்டத்துக்கு வந்துவிட்டன.  இன்னும் உயிரோடிருக்கும் ஒரு சிறிய

நேர்காணல்: அமோஸ் கோல்ட்பெர்க்
சந்திப்பு: எலியாஸ் பெரோஸ்

காஸா மீதான இஸ்ரேலின் போரைக் கடுமையாக விமர்சிப்பவர் இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் அமோஸ் கோல்ட்பெர்க். இப்போரை இன அழித்தொழிப்பு (genocide) என்றே அழைக்கிறார். இவ்வாறு அழைப்பது ஏன் சரி என்று கூறும் அவர், இந்த யதார்த்தத்தை ஏன் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விளக்குகிறார். அக்டோபர் 7ஆம் த

புத்தக மதிப்புரை
சுப்பிரமணி இரமேஷ்

கற்றதால் (நாவல்) ஆர். சிவகுமார் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669 கே.பி. சாலை நாகர்கோவில்-1   பக். 208 ரூ. 260   தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவகுமார். உலக இலக்கியங்கள் பலவற்றைச் சிரத்தையுடன் தமிழுக்குக் கொண்டுவந்தவர். இவர், ஆங்கிலப்

கதை
யுவன் சந்திரசேகர்

என்னைப் போன்று எண்பது களின் வெகுஜனப் பத்திரிகை வாசகராய் நீங்கள் இருக்கும் பட்சத்தில், ‘தமிழ் மறவன்’ என்ற பெயர் உங்களுக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கும். எந்த நடிகருக்கு யார் யாருடன் தொடர்பு, எந்த நடிகைக்குக் குடிப்பழக்கம் உண்டு என்கிற மாதிரியான முக்கியத் தகவல்களும் திரைத்துறைக்குப் ப

புத்தக மதிப்புரை
தியடோர் பாஸ்கரன்

நிச்சலனத்தின் நிகழ்வெளி (கட்டுரைகள்) புதுவை இளவேனில் வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், 2024 9, பிளாட் 1080 A, ரோஹினி பிளாட்ஸ் முனுசாமி சாலை கே,கே, நகர் மேற்கு சென்னை-78 பக். 232 ரூ. 600   1839இல் லூயி தாகர் என்ற பிரெஞ்சு நாட்டவர், முதல் ஒளிப்படத்தை உருவ

உள்ளடக்கம்