தலையங்கம்
ஆசிரியர் குழு

கர்னாடக இசைக் கச்சேரிகளுக்குக் கூட்டம் வருவது அரிதல்ல. அதுவும் சென்னையில் நடைபெறும் மார்கழி இசை விழாவின்போது மியூசிக் அகாடமி போன்ற முன்னணி இசை மையத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் ரசிகர்கள் பெரும் திரளாக வருவதும் வழக்கம்தான். ஆனால் கடந்த டிசம்பர் 25ஆம் தேதியன்று காலை நேரக் கச்ச

தலையங்கம்-2
ஆசிரியர் குழு

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி கடந்த டிசம்பர் 23ஆம் தேதியன்று பல்கலை வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தமிழக அளவில் பேசுபொருளானது. பல்கலை வளாகங்களில் மாணவிகளின் பாதுகாப்புக் குறித்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு ஊடகங்களும் கேள்விகளை எழுப்பின. அரசியல் களத்திலும் மரபார்ந்த ஊடகங்க

கடிதங்கள்

ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘வ.உ.சி., வரலாறு: ஒரு தேடலின் பயணம்’ என்ற உரையாடல் வ.உ.சி. பற்றிய பல அரிய தகவல்களைத் தேடி எடுத்துப் பொதுவெளிக்குக்கொண்டுவருகிறது, சலபதியின் பணி மிகவும் போற்றத்தக்கது. அவர் வ.உ.சி.யை நோக்கித் தீவிரமாகச் செல்ல காரணமாக, அவர் படித்த பள்ளிப் பாட நூலில் வ.உ.சி.யின் பெயர

நிகழ்வு

01-01-2025 ‘என் உயிர்த்தோழனே’ வெளியீடு 02-01-2025 ‘திண்ணைப் பேச்சு’ வெளியீடு 03-01-2025 ‘தங்கநகைப் பாதை’ வெளியீடு 04-01-2025 ‘நபிகள் நாயகம்’ வெளியீடு 07-01-2025 ‘வாழ்வின் தாள முடியாத மென்மை’ வெளி

உரை

வரலாற்றைச் சொல்லும் வாடிவாசல் வாடிவாசல் கிராஃபிக்ஸ் நாவல் வெளியீட்டு விழா தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு பற்றிய நவீன செவ்வியல் படைப்பான சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் வரைகலை வடிவில் வெளியாகியுள்ளது. கேரள ஓவியர் அப்புபனின் உயிர்த் துடிப்புள்ள ஓவியங்களால் உருவாகி

கட்டுரை
ஜே.ஆர்.வி. எட்வர்ட்

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகளின்போது (2021) அவரது சாதனைகளைப் பாராட்டிய சிலர், அவரது அரிய கண்டுபிடிப்பு ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டனர். அந்த அரிய கண்டுபிடிப்பு: டாக்டர் மன்மோகன் சிங்! கேட்பதற்கு முரணாகத் தோன்றலாம். நரசிம்ம ராவ் பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கு முன்

அஞ்சலி: எம்.டி. வாசுதேவன் நாயர் (1933 - 2024)
சக்கரியா

எம்டியை நான் முதலில் சந்தித்தது 1968இல். ஜான் ஆப்ரஹாமுக்கு எம்டியுடன் நெருங்கிய பழக்கமிருந்தது. ஒருநாள் ஜான் என்னிடம் கேட்டார். ‘எம்டியைச் சந்தித்திருக்கிறீர்களா?’ நான் சொன்னேன். ‘இல்லை’. அப்படியாக ஒருநாள் நானும் ஜானும் காஞ்சிரப்பள்ளியிலிருந்து எம்டியைப் பார்க்கப் போனோம். நான

அஞ்சலி: ஷ்யாம் பெனகல் (1934-&2024)
எஸ். ஆனந்த்

எதிர்ப்பின் கவிஞன் (Poet of Resistance) என்று அழைக்கப்படும் ஷ்யாம் பெனகல் எழுபதுகளுக்குப் பின் அறியப்படும் இந்தியப் புதிய அலைத் திரைப்பட முன்னோடிகளில் முக்கியமானவர். இணை சினிமா என்கிற நல்ல சினிமாவுக்கான பகுப்பில் அற்புதமான படைப்புகளை அளித்தவர். திரைப்படக் கலை அவர் உயிராக இருந்தது. 1976இல் ஐந்து லட்ச

பதிவு
பழ. அதியமான்

பெரியார் நினைவிடம், வைக்கம் வைக்கம் நூற்றாண்டு விழா (12.12.2024)நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைக்கத்தில் இறங்கும்போது காலை 7:15. ஊர் தொடங்கும் இடத்திலிருந்த பெரியார் நினைவகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.  மங்கல இசை, மலர் அலங்காரம்,  காவல் துறையின் குவிப்பு, கழுத்தில் அடையாள அட்டைகள் தொங்

பதிவு
து. கலைச்செல்வன்

அரசு கல்லூரிகளைப் பற்றிப் பொதுப்புத்தியில் இருக்கும் ஒழுக்கம், கல்வி, அறிவுநிலைசார்ந்த நடுத்தர வர்க்க ஒவ்வாமைக்கு எதிர்நிலையில்  பல நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் ஒன்றாகத் திருச்சி தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழாய்வுத்துறையும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து நடத்திய பெருமாள்முர

கற்றனைத்தூறும்-3
சாரா அருளரசி

அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை அடைவதற்கும் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்குமான வழிமுறையே கல்வி. இப்படியெழுதும்போதே இன்றைய கல்வி, அடிமைத்தளைகளைப் பெருக்குவதாகவும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் ஆழங்கால் படுத்துவதாகவும் மாறியிருப்பதும் மாற்றப்பட்டிருப்பதும் நம் கவனத்தைக் கோருகின்றன.

கதை
குமாரநந்தன்

ஓவியம்: மணிவண்ணன் இடது கையில் நங்கூரம் போன்ற ஒரு வடிவத்தை டாட்டூ போட்டுக்கொள்வதற்காக அவன் அந்த அறையில் காத்திருந்தான். அவனுக்கு முன்னால் இருந்தவன் வத்தலாய், அதே சமயம் கொஞ்சம் முரட்டுத்தனமானவனாய்த் தெரிந்தான். கீழ் உதட்டை இறுக்கிக் கடித்தபடி, கையில் எழுதப்படும் பெயரையே அவன் ஆசையோடு பார்த்துக்க

ஆடுகளம்: ரவிச்சந்திரன் அஸ்வின்
தினேஷ் அகிரா

பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரரின் ஓய்வறிவிப்பு, அவருடைய ஆளுமையை எப்படிப்பட்டது என்று உணர்த்தும்படி அமையும். எந்தவொரு சலனமும் இல்லாமல் ஓய்வை அறிவித்த ராகுல் திராவிட்டும், யாரும் எதிர்பார்க்காதபோது டெஸ்டிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்த தோனியும் இந்தக் கூற்றுக்கு வலு சேர்க்கிறார்கள். அவர்களுடைய ஓய்வறிவிப்பு

கவிதைகள்
டோனி பிரஸ்லர்

Coutesy: Sethu Book Art Project மாலை தாத்தாவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது அவர் காணாமல் போகிறார் இதுவரை சுற்றாத ஊரில் மறைந்திருக்கும் சந்துகளைக்  கண்டுபிடிக்கிறோம்  யாரோ ஒருவர் யாரோ வீட்டில் அவருக்குச் சோறு போட்டிருக்கிறார் ‘அதுவே தன் தாய் வீடு அங்கே தானிருப்பேன்&

36+
ஜெ. சுடர்விழி

‘இத்திசைதான் எல்லை இலது’ ஜெ. சுடர்விழி ‘தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ்’ என்கிற முதல்வரியோடு 1988இல் சுந்தர ராமசாமியால் தொடங்கப்பெற்ற காலச்சுவடு இதழ், சில நெருக்கடிகள் காரணமாக எட்டு இதழ்களில் நின்று போக, 1994  அக்டோப

கட்டுரை
ஈஸ்வரி

2024 டிசம்பர் 14, இந்திய வெகுமக்கள் திரைப்பட உலகின் மேதையாக விளங்கிய ராஜ் கபூரின் நூறாவது பிறந்த நாள். இந்திய இடதுசாரித் திரைப்பட இயக்கத்தின் முக்கியப் பிரதிநிதியாகவும் உலகளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படக் கலைஞராகவும் விளங்கிய கபூர் ‘ஆவாரா’ திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம்

கதை
மாஜிதா

ஓவியம்: செல்வம் சாம் என்னை விருந்திற்கு அழைத்த செய்தி, நிறுவனத்தின் ஒவ்வொரு அறையிலும் மணிக்கு எண்பது மைல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. அவளுக்கென்ன, இப்படியெல்லாம் வாடிக்கையாளர்கள் வாய்த்த அதிர்ஷ்டக்காரி, சாமிடம் இருக்கும் கிளாஸிக் கார்களைப் போல அவளும் ஒரு வின்டார்ஜ் சட்டத்தரணியாக நிலைத்திருப

கட்டுரை
கார்த்திக் ராமச்சந்திரன்

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் முனைவர் பட்ட ஆய்வு பயில்பவர்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2021 ஆம் ஆண்டு கணக்கின்படி 3,206 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளனர். தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சி எந்த அளவிற்கு அதிகரித்துள்ளதோ அதே அளவிற்கு வணிகமாக்கலும் அதிகரித்துள்ளது. தரமற்ற முனைவர் பட்ட ஆய்வுகள்

மறுபதிப்பு
தி. ஜானகிராமன்

தனது எழுத்துலக வாழ்க்கையில் தி. ஜானகிராமன் மிக அரிதாகவே நேர்காணல்கள் அளித்துள்ளார். அவற்றுள் ஒன்று நூலகம் இதழுக்கு வழங்கிய இந்த நேர்காணல். நூலக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் 60-70களில் வெளியான இதழ் நூலகம். அதன் ஆசிரியர்: குண்டூசி கோபால். எழுத்தாளர் சந்திப்பு வரிசையில் நூலகம் (பிப்ரவரி 1970) இதழ

மதிப்புரை
கிருஷ்ணமூர்த்தி

மணல் சமாதி (நாவல்) கீதாஞ்சலி ஸ்ரீ தமிழில்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி வெளியீடு:  காலச்சுவடு பதிப்பகம் 669 கே.பி. சாலை நாகர்கோவில் - 1 பக். 605 ரூ. 750 ‘சமாதி’ எனும் சொல்லுக்குப் பொது வழக்கில் இறந்தவர்களைப் புதைத்து வைக்கும் மேடு என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. பௌத்த மதத்த

உள்ளடக்கம்