தலையங்கம்
ஆசிரியர் குழு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்தையொட்டி நாடு முழுவதும் விவாதம் நடந்துவருகிறது. உதயநிதியின் விமர்சனத்தைத் தமிழகத்தின் திராவிட, முற்போக்கு சக்திகள் ஆதரிக்கின்றன. தமிழ

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்

courtesy: wikimedia commons சனாதன தர்மம் என்ற சொல் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சாரார் அது இந்து மதத்தின் உயரிய கருத்துகளைக் குறிப்பது, பண்டைய காலத்திலிருந்தே புழக்கத்தில் இருக்கிறது என் கிறார்கள். சிலர், இல்லை அது இந்து மதத்தின் பழமைவாதிகள் (குறிப்பாக பிராமணர்கள்) பிடித்துக் கொ

வரைசொல்
மு. இராமனாதன்

அ. முத்துலிங்கத்தின் எழுத்துகள்  எளிமையானவை. ஆனால் அது ஏமாற்றும் எளிமை. தெளிந்த நீரோடையின் மேற்பரப்பில் பார்த்தால் அதன் ஆழம் குறைவாகத் தோன்றுமே, அதைப் போல. இவருடைய படைப்புகளை வாசிக்குந்தோறும் அந்த நீரோடையின் ஆழம் கூடிக் கூடி வந்ததை உணர்ந்தேன். இதை அவ்வப்போது எழுதலானேன். அப்படி எழுதியவற்றில் தேர

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தரஜா

அரைத் தூக்கத்திலிருந்த நூல் உலகத்தை எண்ணிமப் புத்தகங்கள் உசுப்பிவிடும் முன் சராசரி இந்தியர்களின் வீட்டு அலமாரிகளை இரண்டு புத்தகங்கள் அலங்கரித்தன. ஒன்று தொக்கையான தொகுதிகள் கொண்ட பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், மற்றது ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி. வீட்டுக்காரர் என்ன மாதிரியானவர் என்பதை உலகிற்கு அறிவிக்க

கதை
பெருமாள்முருகன்

ஓவியங்கள்: செல்வம் திருமணத்திற்கு  ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தாள் நிலவி. எங்கே என்றாலும் சரி, தன்  ‘குள்ளு’ம் தன்னோடு வருவான். முப்பதைக் கடக்கும் குமராசு எந்த நிபந்தனைக்கும் இணங்கும் மனநிலையில் இருந்தான். பின்புலம் நிழலான புகைப்படம்போல நிலவியின் பளிச்சிட்ட முகமும் கேக்

அஞ்சலி: ஈடித் கிராஸ்மன் (1936-2023)
என்னெஸ்

‘திகார்டியன்’ இதழின் சிறப்புச் செய்தியாளர் சூசன்னா ரஸ்டினுக்கு அளித்த நேர்காணலில் (2014) தனது மொழிபெயர்ப்பில் மிகவும் பிடித்த வார்த்தை ‘என்றென்றும்’ என்று குறிப்பிட்டார் ஈடித் கிராஸ்மன். காப்ரியேல் கார்சியா மார்க்கேசின் ‘காலரா காலத்தில் காதல்’ நாவலின் இறுதி அத்திய

திரை
ரதன்

கிறிஸ்தோபர் நோலன் இன்று உலகின் மிக முக்கியமான ஹொலிவூட் இயக்குநர். இவரது கதை சொல்லும் முறை நேர்க்கோட்டில் அமையாது தொகையற்றிருக்கும். துண்டு துண்டாக ஒழுங்கற்றிருக்கும் எதிரொலிகளாகவும் சம்பவங்களின் நினைவுகளாகவும் இடைச் செருகல்களாவும் இருக்கும். அடையாளச் சிக்கல்கள், ஒழுக்க மீறல், தார்மீகப் பிரச்சினைகளை

நினைவில் சுரா
அரவிந்தன்

‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கோட்டயத்தில் 1937, 38, 39இல் நடந்த கதை. இந்த நாவலில் ஐந்து குடும்பங்கள் வருகின்றன. இதைக் கதை என்று சொல்வதைவிடவும் கதைகள் என்று சொல்வதே பொருத்தமானது. பல பாத்திரங்கள், பல வாழ்க்கைகள், பல கதைகள் கொண்ட நாவல் இது.

சுரா கடிதங்கள்

சுந்தர ராமசாமி நாகர்கோவில், 29.12.93. அன்புள்ள சிவராமன், சௌகரியமாக வந்து சேர்ந்தேன். பஸ் பயண சிரமம் கூடிக்கொண்டேபோகிறது. நீங்களும் சென்னையிலிருந்து திரும்பியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் ஊர் திரும்பியதும் லல்லிக்குக் கடிதம் எழுதினேன். மதுரை வர வசதி தெரிவித்து பதில் கடிதம் இன்னும்

கவிதைகள்
லாவண்யா சுந்தரராஜன்

ஓவியம்: மு. நடேஷ் மதுக்குடுவை உனக்குக் கையளிக்கப்பட்ட  மதுக்குடுவை அதனுள்ளே நிறைந்திருப்பது மகிழ்ச்சியா மறதியா? மிடறு மிடறாய்க் கொண்டாடிக் குடித்த மது போதை மட்டுமா?   சரிதான் காலியான அந்தக் குடுவையை ஏரி நோக்கி எறிந்திடாதே   அதற்கிருக்கும் தாகத்துக்கு மொத்த ஏரிய

நூல் அறிமுகம்
சு. இராசாராம், அ.கா. பெருமாள்

தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு (ஆய்வு நூல்) சு. இராசாராம் அ.கா. பெருமாள் (பதிப்பாசிரியர்கள்) ரூ. 730 தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு மிகத் தொன்மையானது. இவ்வுறவு தமிழ் இனம், மொழி, அரசியல், பண்பாடு, நாகரிகம் முதலானவற்றோடு தொடர்புடையது. இவ்வுறவின்வழிப் பன்னெடுங் காலமாகப் பல்வேறு மொழி வகைமை

கதை
மலேசியா ஸ்ரீகாந்தன்

ஓவியங்கள்: ரவி பேலட்   கணவனைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சியில் உள்ளம், கலவியில் திளைத்த உடலாய் நிறைந்திருந்தது. மலேசியாவிற்குப் புறப்பட்டு வர சரியாக ஒரு வாரமிருக்கையில் கோவிட் பெருந்தொற்றால் ரத்தாகிப் போன விடுமுறை இது! மீண்டும் கைகூட மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டி வந்தது. அந்தக் க

கவிதைகள்
பா. ராஜா

ஓவியம்: மு. நடேஷ் அப வாதம் அல்லது காற்றில் அசையும் தொங்கட்டான்கள் ஒரு சொல்லைப் பிடித்து தொங்குதல். ஒரு சொல் பிடித்துப்போய் தொங்குதல். ஒரு சொல்லை சொல்லச்சொல்லி தொங்குதல். சொல்லி விட்ட ஒரு சொல்லுக்காக தொங்குதல்.   வெள்ளைச் செம்பருத்தி துளியூண்டு காலி நிலத்தில் நட்

கட்டுரை
சுப்பிரமணி இரமேஷ்

     இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுதப்பட்ட நவீனத் தமிழ்க் கவிதைகளில், கவிஞர்கள் தங்களைத் தாங்களே சுயவிமர்சனம் செய்துகொள்ளும் தன்மை கூடுதலாக இருப்பதைக் காணலாம். சமூகப் பிரச்சினைகளுக்குள் தங்களைத் தாங்களே உட்படுத்திக்கொண்ட கவிஞர்கள், தங்களை விமர்சிப்பதன் மூலமாக இச்சமூகத்தின் போதாமை

சிற்றிதழ்
செந்தூரன்

கலைமுகம் (கலை இலக்கிய, சமூக இதழ்) 75 பவள இதழ் இலங்கை விலை ரூ. 1200 வெளியீடு: திருமறைக் கலாமன்றம் 238, பிரதான வீடு, யாழ்ப்பாணம், இலங்கை தொலைபேசி : 009421222393 யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றம் சார்பில் 1990இலிருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது கலைமுகம் கலை, இலக்கிய, சமூக இதழ். 2010ஆ

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்  (முதல் ஐம்பது ஆண்டுகள்)  ச. தமிழ்ச்செல்வன் வெளியீடு:  பாரதி புத்தகாலயம் 7 இளங்கோ சாலை,  தேனாம்பேட்டை,  சென்னை-18 பக். 896 ரூ. 895   தமிழ்ச் சிறுகதைகள் குறித்த வரலாறும் பார்வைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து கவனப்படுத்தப்பட

உள்ளடக்கம்