தலையங்கம்

இந்தியாவின் வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குப் பிழைப்புத் தேடி வரும் தொழிலாளர்களை முன்னிருத்தி விவாதங்கள் உருவாகியிருக்கின்றன. உணவகங்கள், சந்தைகள், கட்டுமானப் பணிகள் என உடல் உழைப்புசார் பணிகளில் வடமாநிலத் தொழிலாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இவர்களின் வரவால் தமிழ்நாட்டு மக்

கடிதங்கள்

‘ ‘இலக்கியவாதியின் மொழியியல்’ பயணம் எனும் பேராசிரியர் இரா. அறவேந்தனின் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். அது மொழியியல் பேராசிரியர் சு. இராசாராம் பற்றியதாயிருப்பதால் இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்ப வேண்டிய கடமையை நான் உணர்ந்து எழுதுகிறேன். நான் எழுதுவதற்கு இரண்டு காரணங்கள்

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்

வேங்கை வயல் பற்றி எழுத நினைத்த போது முதலில் பெரும் தயக்கம் உருவானது. இவ்வாறெல்லாம் நடந்தது என்று மீண்டும் சொல்வதைத் தாண்டிப் புதிதாய் என்ன சொல்லிவிட முடியும் என்ற எண்ணமே அந்தத் தயக்கத்திற்கான காரணம். இங்கு தலித்துகள் தாக்கப்படுவது, அவமானப்படுத்தப்படுவது, அவற்றை மீண்டும் எடுத்துக் கூறுவது என்று எ

பதிவுகள்
ப. சரவணன்

பன்னாட்டுப் புத்தகச் சந்தை, உலக அளவில் ஃபிராங்ஃபர்ட், லண்டன், பாரிஸ், பெய்ஜிங், ஷார்ஜா, இஸ்தான்புல், ஜாகர்த்தா, தில்லி உள்ளிட்ட இருபது நகரங்களில்தான் நடந்துள்ளது. அந்த நகரங்களின்  வரிசையில் இப்போது சென்னையும் இணைந்துள்ளது. சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற 46ஆவது புத்தகச்

கதை
சிவசங்கர் எஸ்.ஜே

ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி   ‘சிராயன்குழிக்குப் போறியளா இல்ல பள்ளியாடிக்கா?’ ‘மூத்தவன் எப்ப வாரான்?’ ‘குட்டி பொறப்பிட்டுட்டாளா?’ ‘லே.. குழி வெட்ட செல்லியாச்சா?’  போஸ் அண்ணன் கேட்டுக்கொண்டிருந்தான். நேற்று இரவு முத்த

கட்டுரை
பெருமாள்முருகன்

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை சென்ற ராகுல்காந்தியின்  ‘இந்திய ஒற்றுமை நடைப்பயண’த்தில் பங்கேற்கும்படி 2022 நவம்பர் 22இல் எனக்கு மின்னஞ்சல் அழைப்பு வந்தது. சமத்துவமின்மை, பிரிவினை, சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிராகச் சமூக மனச்சாட்சியைத் தூண்டும் விதத்தில் மக்களோடு உரையாடல் நட

கட்டுரை
க. திருநாவுக்கரசு

“இந்த அடிப்படை உரிமைகள் பலவும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் பார்வையிலிருந்து இயற்றப்பட்டிருக்கின்றன” -சோம்நாத் லகிரி, அரசமைப்பு அவை விவாதத்தின்போது. பேச்சு, கருத்து, ஊடக சுதந்திரம் ஆகியவற்றைப் பொருத்தவரை இந்தியாவில் மிகப் பெரும்பாலானவர்கள், ஏன் அனைவரும் என்றுகூடச் சொல்லிவிடலாம், தங

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தரஜா

திருக்குறள், திருவள்ளுவர் பற்றிப் பேசும்போது மிகையான உரிச்சொற்களில் எழுத வேண்டும் என்று எழுதப்படாத விதியிருக்கிறது. அத்துடன் மேல்நாட்டினரின் ஒப்புகை இருந்தால் இன்னும் நலம். எடுத்துக்காட்டாக இரண்டைத் தருகிறேன். திருவள்ளுவர் ‘வார்த்தைகளின் வாத்தி’, ‘அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளில

கட்டுரை
கார்த்திக் ராமச்சந்திரன்

‘ ‘பின்னை மனிதம்’ என்றொரு பதம் வெகுநாட்களாகவே புழக்கத்தில் உள்ளது. பின்னை மனிதம் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஆய்வுத்துறையாகும்.  மெய்யியல், அறிவியல் தொழில்நுட்பம், விமர்சனக் கோட்பாடு, பண்பாட்டு ஆய்வுகள் என வெவ்வேறு துறைகளின் ஆய்வுமுறையை இது எடுத்துக்கொள்கிறது. இந்த ஆய்வுகள்

தொடர் 80+
செ. ரவீந்திரன்

1981ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தேன். அங்கு எனக்கும் முன்னரே பணியாற்றிய இந்திரா பார்த்தசாரதி என்னைக் கல்லூரி முதல்வரிடம் அறிமுகம் செய்துவைத்துத் தமிழ் விரிவுரையாளராகச் சேருவதற்கு உதவிபுரிந்தார். தில்லியில் தாகூர் பாரத் நாடகசபையின் தயா

வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
பழ. அதியமான்

மன்னத்து பத்மநாபன் வைக்கம் போராட்டம் (2020 )பற்றிய  முழு விவர நூலை உருவாக்கிய காலத்தில் நான் மேற்கொண்ட பல்லூர்ப் பயணங்களைக் கவனித்திருந்தார் கண்ணன். நூல் வெளிவந்தபோது நான் சேகரித்த பல விவரங்கள் நூலில் இடம் பெறாததைச் சுட்டினார். நூலின் குவிமையத்திற்குள் வர இயலாததால் அவற்றை நான் சேர்க்காதத

பாரதியியல்
ய. மணிகண்டன்

(1928)                                             (1948) “புதியன விரும்பு” என்ற பாரதி, “வேதம் புதுமை செய்” என ஆத்திசூடியில் முழக்க மிட்டார். வேதம் புதுமை

கவிதை
ஜீவன் பென்னி

ஓவியம்: மு. நடேஷ்   1. ஒரு ஆடையை வரைகிறேன்! எப்போதும் போல் அது உனக்கு சிறியதாகயிருக்கிறது. கூர்மையான ஒரு சொல்லின் தீண்டல் போல் நீ சிரிக்கப் பழகியிருக்கிறாய். ஒரு உடலை வரைகிறேன்! முன்னெப்போதும் போலில்லாமலது உன் ஆன்மாவிற்கு மிகப் பொருத்தமாக அமைந்து விடுகிறது.

கட்டுரை
பா. வெங்கடேசன்

எட்வர்ட் சைத் தன்னுடைய புகழ்பெற்ற ‘கீழைத்தேயவியல்’ நூலில், ஒரு ஐரோப்பியருடைய பார்வை அவரினத்தவருடைய சொல்லாடற்பண்பிற்கும் ஒரு கீழைத்தேயத்தவருடைய சொல்லாடற் பண்பிற்கும் இடையிலான வேறுபாட்டை இப்படி வரையறுப்பதாகக் குறிப்பிடுகிறார்: “ஐரோப்பியர் பகுத்தறிவுவாதி. உண்மை பற்றிய அவருடைய அ

கட்டுரை
அரவிந்தன்

அனுபவம் இன்றிப் படைப்பு இல்லை. அனுபவத்தில் இரண்டு வகை. ஒன்று சுயமாக வாழ்ந்து பெற்ற அனுபவம். இன்னொன்று, பார்த்து, கேட்டு கிடைக்கும் அனுபவம். சுய அனுபவங்களைப் படைப்பாக்குவது ஒப்பீட்டளவில் எளிது.  புற அனுபவங்களைப் படைப்பாக்கும் போது அவற்றை ஒரு படைப்பாளி எந்த அளவுக்கு ஆழமாக உள்வாங்கி அகவயப்படுத

கவிதை
செந்தி

ஓவியம்: மு. நடேஷ்   ஆயிரத்து மூன்று இரவுகளை எழுதிப் பார்க்கும் ஒருவன்    பதின்ம வயதொன்றில் அவனது அவ்விரவுகள் விழித்தே கிடந்தன. ஒரு கூடை மல்லிகைப் பூக்களும் ரோஜா பதியங்களும் அவனது இரவுகளில் வந்து போவது சகஜமான ஒன்றாக இருந்தது. ஒருமுறை அவனை மேற்குத்தி

மதிப்புரை
எஸ். செந்தில்குமார்

விளக்கும் வெளிச்சமும் (சிறுகதைகள்) விமலாதித்த மாமல்லன் வெளியீடு:  சத்ரபதி வெளியீடு,  MIG 6/13, TNHB 1500 MSB, சோளிங்கநல்லூர், சென்னை. ரூ. 180 விமலாதித்த மாமல்லன் எழுதிய ஒளி, உயிர்த்தெழுதல் ஆகிய இரு கதைகளும் இன்றளவும் வாசிக்கப்படுகின்றன. ‘ஒளி’ எனும் சிறுகதை தற்க

திரை
ப்ரஸன்னா ராமஸ்வாமி

லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் அநாயாசமாகத் தொகுக்கப்பட்ட உள்ளடுக்குகளைப் போர்த்தியிருக்கும் எளிமைபோலத் தோன்றும் வடிவத்தைக் கொண்டது. ‘கதை’ என்று மேலோட்டமாகப் பார்த்தால், ஜேம்ஸ் என்னும் பாத்திரத்தினுடைய கனவோ

மறுமொழி
சித்ரா பாலசுப்ரமணியம்

‘ ‘தீண்டாமை யாத்திரையில் ஒலித்த ஒடுக்கப்பட்டோரின் குரல்’ குறித்து ஜனவரி காலச்சுவடு இதழில் (277) பிரசுரமாகியிருந்த என்னுடைய கட்டுரைக்கு வந்த எதிர்வினைக் கடிதத்தை பிப்ரவரி இதழில் படித்தேன். மகிழ்ச்சி. எதிர்வினை எப்போதும் முக்கியத்துவம் உடையது. கண்டுகொள்ளாமல் போவதைவிட அதைப் பொர

உள்ளடக்கம்