தலையங்கம்
ஆசிரியர் குழு

வென்றவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. தோற்றவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். இதுதான் இந்தத் தேர்தல் முடிவு நிகழ்த்தியுள்ள ஆச்சரியம். மீண்டும் அறுதிப் பெரும்பான்மையோடு மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் என்ன நடக்குமோ என்று அஞ்சியவர்கள் ஆசுவாசமடைந்திருக்கிறார்கள். நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய அளவுக்குச் சூழ்ந

தலையங்கம்-2
ஆசிரியர் குழு

கமல் சந்திரா இயக்கத்தில் அஷ்வினி கல்சேகர், அன்னு கபூர், பரிதோஷ் திரிபாதி, மனோஜ் ஜோஷி ஆகியோரின் நடிப்பில் ‘ஹமாரே பாராஹ்’ எனும் திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாவதாக இருந்தது. திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானபோதிருந்தே படத்தில் இஸ்லாமியச் சமூகத்தை இழிவுபடுத்தும், நிந்திக்கும் காட்சிகளும்

செவாலியே விருது: வாழ்த்துரை

காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணனுக்கு பிரெஞ்சு அரசின் உயரிய செவாலியே விருது வழங்கும் விழா ஜூன் 5ஆம் தேதி புதுதில்லி பிரெஞ்சுத் தூதரகத்தில் நடைபெற்றது. விருது வழங்கிய மைக்கான காரணத்தைக் கூறும் அறிக்கையை பிரெஞ்சுத் தூதர் தியெரி மத்து வாசித்தார். அதன் தமிழாக்கத்தை இங்கே தருகிறோம். கண்ணன் சு

செவாலியே விருது: ஏற்புரை கண்ணன்

பிரான்சின் இந்தியத் தூதுவர் தியெரி மத்து (Thierry Mathou) அவர்களே, சகாக்களே, நண்பர்களே... இன்று எனக்கு செவாலியே பட்டம் அளிக்கப்பட்டது பெறுமதியான கௌரவம். இது காலச்சுவடு பதிப்பகம் தொடங்கப்பட்ட 30ஆவது ஆண்டு. இத்தனை ஆண்டுகளிலும் நான் மகிழ்ச்சியுடனும் அர்ப்பணிப்புணர்வுடனும் மன நிறைவுடனும் பணியாற்றி யி

கட்டுரை
க. திருநாவுக்கரசு

2024 பொதுத் தேர்தல் பல வழிகளிலும் 1977 பொதுத் தேர்தலுக்கு நிகரானது. நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு மார்ச் 3ஆம் வாரத்தில் நடத்தப்பட்ட 1977 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது மட்டுமல்ல, இந்திரா காந்தி தனது கோட்டையான ரேபரேலியிலும் அவரது மகன் சஞ்சய் காந்தி அமேதியிலும் படுதோல்வியடைந்தனர்.

கட்டுரை
 சச்சிதானந்தன் சுகிர்தராஜா

2024 தேர்தல்களின் ஆண்டு. இலாப நோக்கற்ற அமெரிக்க அரசு சாரா அமைப்பான தேசிய ஜனநாயக நிறுவனத்தின் கணக்குப்படி இந்த வருடம் மட்டும் 64 நாடுகளில் பொதுத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. உலக மக்கள்தொகையில் பாதிப்பேர் வாக்குச் சாவடிக்குப்போவார்கள். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட 10 நாடுகளில் எட்டு - பங்களாதேஷ், பி

அஞ்சலி: பண்டிட் ராஜீவ் தாராநாத் (1932-2024)
அம்ஷன் குமார்

ராஜீவ் தாராநாத்துக்கு அப்போது எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். அவரிடம் ஒரு கேமரா தரப்பட்டிருந்தது. புகைப்படம் எடுக்க வேண்டும் என்கிற சிறுவனின் ஆசையை  நிறைவேற்ற அவரது தந்தை, தந்தையின் மாணவர்கள், நண்பர்கள் ஆகியோர் வரிசையாக கேமரா முன்வந்து நின்றார்கள். பிரேமுக்குள் எல்லோரும் வந்துவிட்டாலும் ராஜீவ

கட்டுரை
ஜே.ஆர்.வி. எட்வர்ட்

‘நீட் தேர்வு மீதான மாணவர்களின் குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமானவை. ஒருவர் மோசடி செய்து மருத்துவரானால் சமூகத்தில் அதன் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். நீட் முதலான தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான குழந்தைகளின் உழைப்பையும் நேர்மையான முயற்சிகளையும் உண்மையான லட்சியங

தொடர் 80+
தியடோர் பாஸ்கரன்

1952 ஆம் ஆண்டு. தாராபுரம் போர்டு உயர்நிலைப் பள்ளியில், திமுக பேச்சாளர் நெடுஞ்செழியன் உரை நிகழ்த்திவிட்டுக் கரூர் செல்வதற்காகப் பள்ளியை ஒட்டியிருந்த பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றார். குறுந்தாடிப் பெரியார் என்று அறியப்பட்ட அவர் அப்போது தாடி வைத்திருந்தார். நானும் சில நண்பர்களும் அவரை வழியன

கவிதைகள்
ந. சிவநேசன்

ஒரு இலையை எப்படி வர்ணிப்பது? பச்சை அல்லது இளமை மஞ்சள் அல்லது  களிமண் நிறச்சருகு அல்லது எறும்புக்கூடு வனைந்த இலை அல்லது பனித்துளிர்  அல்லது பசுமை அல்லது காற்றை உயிர்ப்பிப்பது அல்லது வெறும் இலை அல்லது கொய்வதற்கு முன்பிருந்த உதிர்வதற்கு முன்பிருந்த ஒன்றென முயன்றேன் பிரமாதம

புத்தகப் பகுதி

களிநெல்லிக்கனி ஔவையார் கவித்துவத் திரட்டு (கட்டுரைகள்) இசை ரூ.230 காலச்சுவடு புதிய வெளியீடாக  கோவை புத்தகக் காட்சியில்  வரவிருக்கும் ‘களிநெல்லிக்கனி’ என்னும் நூலிலிருந்து  சில பகுதிகள் நல்வழி: எண்பது கோடி நினைப்புகள் ‘நல்வழி’ நீதி

கடிதங்கள்

அன்புள்ள காலச்சுவடு ஆசிரியருக்கு வணக்கம். வாசகர் கடிதம் பக்கத்தைக் கடந்த சில இதழ்களில் தொடர்ந்து கிடைக்கக் காணோம். இனிவரும் இதழ்களில் பார்க்க முடியுமா என்றும் தெரியவில்லை. கோபாலகிருஷ்ணன் மின்னஞ்சல் வழி ஜூன் 2024 இதழில் வெளிவந்த அரவிந்தனின் சத்திய சோதனை சிறுகதையை வாசித்தேன்; எனக்கு மிக

நேர்காணல்: மருத்துவர் கு. சிவராமன்
சந்திப்பு: அரவிந்தன்

சிவராமன் நவீன அறிவியலின் கண்ணோட்டத்தோடு அணுகுகிறார். தஞ்சை சரபோஜி சரஸ்வதி மகால் நூலகத்தில் ஓலைச்சுவடிகள் வாசிப்புப் பயிற்சியில் சான்றிதழ் பயிற்சி பெற்றவர். 2001முதல் 2010வரை ‘ஹெல்த் இந்தியா’ என்ற தன்னாார்வ அமைப்பின் இணை இயக்குநராகச் செயல்பட்டார். 2020 ஏப்ரலில் தமிழக அரசு கொரானா நோய்த

பதிவு
சிவபிரசாத்

சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் பயணித்தவரும், தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து செம்மையாக்கம் பற்றிய புரிதலை உருவாக்க முயன்றவருமான பேராசிரியர் நஞ்சுண்டன் மறைந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அவரின் மரணத்திற்குப் பிறகு அவர் எழுதி நூல் வடிவம் பெறாத சிறுக

கதை
எஸ். ஜெயா (தெலுங்கு)

ஓவியங்கள்: செல்வம்   தமிழில்: கௌரி கிருபானந்தன் “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? போயும் போயும் லதாவையா கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாய்? காதலும் பைத்தியமும் ஒன்றுதான் என்று சொல்வார்கள். ஆனால் கல்யாணமும் பைத்தியமும் ஒன்றுதான் என்று சொல்லவில்லை.” சங்கர், முரளியைக் கேலி

கவிதை
நா. விச்வநாதன்

ஓவியம்: ஆதிமூலம்   வாசம் எழுந்து கனைத்தது பறக்கத் தயாரானது ஐயனார் கோயில் வண்ணக் குதிரை வயதுக் கணக்கேதும் இல்லை உற்சாகம் புரிந்தது உற்பதம் பார்த்து பேரண்டத்தின் அத்தனை அழகுகளிலும் நீந்திக் கரைந்து தன்  சொந்த இடத்திற்கே வந்து உட்காரும் வல்லமை முக்கியமானது.

கதை
ஹேமி கிருஷ்

ஓவியங்கள்: செல்வம் நல்ல தூக்கத்தில், கனவுகளுக்கு அப்பாற்பட்ட சூன்யமான உலகத்தில் ஆழ்ந்திருந்தேன். திடீரென எவருடைய விரல்களோ என் முகத்தைத் தடவியபோது மூளை= விழித்துக்கொண்டது. இருப்பினும் தூக்கத்திலேயே கிடந்தேன். அவ்விரல்கள் எனது வலது கைவிரல்களைக் கோத்துக்கொண்டன. அந்நிய உணர்வுகளை உணர்ந்த என் கை அன

கவிதைகள்
அம்மு தீபா

மலையாளத்திலிருந்து தமிழில்: சுஜா   விடிகாலையில் இடது கையில்  சூரியனைத் தூக்கிப் பிடித்து வலது கை வெட்டுக்கத்தியால் நடுவில் ஓங்கி வெட்டி இரண்டு துண்டுகளாக்கி அதில் ஒரு துண்டை எடுத்துத் துருவத் தொடங்கினாள்.  கீழே உள்ள தட்டில் உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கிறது வெள

மதிப்புரை
கணேஷ் வெங்கட்ராம்

ரூமியின் ருபாயியாத் (கவிதைகள்) தமிழில்: ரமீஸ் பிலாலி வெளியீடு சீர்மை பதிப்பகம், பு.எண் 280, ப.எண் 238/2 இரண்டாம் தளம்,  காயிதே மில்லத் சாலை திருவல்லிக்கேணி, சென்னை- 5 பக். 324 ரூ. 520 ருபையாத் அல்லது ருபாயியாத்தை உமர் கய்யாம் எழுதினார். மஸ்னவியை ரூமி எழுதினார். ருபாயியாத், மஸ

உள்ளடக்கம்