தூத்துக்குடி பொங்கியெழுந்ததன் காரணம்
ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன.
தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் மே 22ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பல காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட காணொளிகளில் நாம் பார்த்ததைப் போல் காவல்துறையானது கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முறைகள் எவற்றையும் பயன்படுத்தாமல் குறிபார்த்துச் சுடுகிறவர்களைப் பணியில் அமர்த்தி மக்களைச் சுட்டுத்தள்ளியது இந்தப் பல காரணங்களுள் முதன்மையானது, வெளிப்படையானது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் கடந்த காலங்களில் நடந்த இத்தகைய விசாரணைகளைப் போலவே இந்த விசாரணையும் மக்களின் கோபத்தையோ உயிரிழந்தவர்களின்