குறுவெட்டி
சிறுகதை
குறுவெட்டி
குமாரசெல்வா
நனைப்பு காணாத புத்தம் உடுப்பு, பாடப்புத்தகங் களின் அட்டையிலுள்ள பெயின்ட், தாள்களின் மணம்; பல்கூசும் நாற்றம். நனைக்கும் மழையில் பெரிய லீவைக் கரைத்துவிட்டுப் பள்ளிக்கூடம் செல்லும்போது அடிக்கும் நாற்றம்தான் இப்போதும் அடிக்கிறது. வேலியோ, புதர்களோ அருகில் உள்ளதா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். சீமை கொன்னையும், வேம்பும் நிறைந்த மாவட்டத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் பூச்சிமுட்கள் தாராளமாகக் குருத்திருந்தன. இதுபோன்ற இன்னொரு வளாகத்தில்தான் நான் படித்த பள்ளிக் கூடமும் இருந்தது. அதை நினைத்தால் இந்த வயசிலும் கைகால் விறைக்கும். முன்னால் விரிந்து கிடந்த புத்தகத் தில் கண் சிவந்த முயல்குட்டியும், மாம்பழமும். அவை தந்த அனுபவத்தில் பெயர் மறந்து போயிற்று. கை மணிக்கட்டில் பென்சில் கம்பு கொ