பாரதியும் ‘கற்பக’மும்
பாரதியும் ‘கற்பக’மும்
பாரதி நினைவு நூற்றாண்டு
ய. மணிகண்டன்
ஓவியம்: ஆதிமூலம்
பாரதி எழுதிய கவிதைகள் அவர் வாழ்ந்த காலத்தில் பெரிதும் பத்திரிகைகளின் வாயிலாகவே வெளிப்பட்டன. சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, கர்மயோகி, சூரியோதயம் ஆகிய அவர் செயல்பட்ட இதழ்களிலும், விவேகபாநு, ஞானபாநு, தேசபக்தன், நியூ இந்தியா (New India) ஆகிய தொடர்புடையோர் நடத்திய இதழ்களிலும் அவர் கவிதைகள் வெளிவந்தன.
ஆனால் பாரதிதாசனும் பாரதிதாசனின் நண்பர் காசி ஈ. லக்ஷ்மண் ப்