செப்டம்பர் 2018
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      கலைஞர் நினைவுகள் இனியவையும் இன்னாதவையும்
      வரலாறு விடுதலை செய்யும்
      தலித்துகளுக்கும் திராவிட அரசியலுக்குமான கடைசிக் கண்ணி
      திரை எனும் கொல்லிப்பாவை
      அசோகமித்திரனின் மானுடப்பக்கம்
      1924 – காவிரி பெருவெள்ளமும் பேரழிவும்
      அமெரிக்கக் கல்வி- ஆசிய மாணவர்கள் ஒதுக்கப்படுகிறார்களா?
    • கதை
      கோதைமங்கலம்
      இல்லாமல் போவது
    • அஞ்சலி
      குல்தீப் நய்யார் (1924-&2018)
      வி.எஸ். நைபால் (1932-2018) பின்காலனிய உலகின் வீடற்ற மனிதன்
    • EPW பக்கங்கள்
      வரமா சாபமா?
      காவல்துறையைக் கண்காணித்தல்
    • பதிவு
      ஓய்வற்ற இயக்கம்
    • திரை
      வெள்ளை அமெரிக்கா
    • கடிதங்கள்
    • மதிப்புரை
      துயரத்தின் சின்னம்
    • கவிதைகள்
      இசை
    • தலையங்கம்
      வெள்ளம் புகட்டும் படிப்பினைகள்
    • கவிதை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2018 EPW பக்கங்கள் காவல்துறையைக் கண்காணித்தல்

காவல்துறையைக் கண்காணித்தல்

EPW பக்கங்கள்

காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை நிலைகுலைந்தபோதிலும் அதன் சீர்திருத்தம் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறது.

முதன்முறையாக இந்தியாவில் இரண்டு காவலர்களுக்குக் கேரளாவில் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் இறந்தது தொடர்பான வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது; மற்ற மூன்று காவலர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2005இல் உதயகுமார் என்ற இளைஞர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்குக் கடந்த மாதம் மத்திய புலனாய்வுக் கழக (சிபிஐ) நீதிமன்றத்தால் காவலர்கள் தண்டிக்கப்பட்டனர். காவலில் இருக்கும்போது நடக்கும் மரணம் தொடர்பாக இந்தியாவில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத சூழலில், இந்த 13 ஆண்டுகளில் இத்தகைய விவகாரங்களில் தண்டனையை உறுதிபடுத்துவதற்கான பல அம்சங்கள் இப்போது ஒன்றுதிரண்டு வந்திருப்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும். சட்டப்பூர்வமான நடவடிக்கை, பதில் சொல்லும் பொறுப்பு ஆகிய விஷயங்களில் காவல்துறை காட்டும் அலட்சியம், ஏளனம், காவல் சீர்திருத்தம் குறித்து 2006இல் உச்ச நீதிமன்றம் தந்த வழிகாட்டுதல்களை, மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவது போன்ற அம்சங்களை ஏற்கெனவே கணக்கிலடங்காத வழக்குகள் நமக்கு எடுத்துக்காட்டியிருப்பதைப்போல் இந்த வழக்கும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த வழக்கில் நீதி விசாரணை நடத்திய அதிகாரி காட்டிய தளராத முயற்சியும் மருத்துவரின் பிரேதப்பரிசோதனையும் முக்கியமானவை. மாநில அரசு தனது பங்கிற்கு வட்ட ஆய்வாளரைத் தற்காலிக வேலைநீக்கம் செய்தது. குற்றவியல் காவல் துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ததுடன் சித்திரவதை செய்த இரண்டு காவலர்களையும் கைது செய்தது. அரசுத் தரப்பின் முக்கிய சாட்சிகள் எதிராகத் திரும்பிவிட்டபோது உதயகுமாரின் அம்மா சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உதாரணமாக இருக்கத்தக்க வகையில் சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கை நடத்தியது. இத்தகைய வழக்குகளில், அதாவது காவலில் இருக்கும்போது சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்படுவது பற்றிய வழக்குகளில் நமக்குத் தெரிந்த தடைகள் பல வருகின்றன: சாட்சிகள் எதிராகத் திரும்புவது அல்லது பின்வாங்குவது, தங்களுக்குத் தரப்படும் நெருக்கடியின் காரணமாக காவல்துறையைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் வண்ணம் பிரேதப்பரிசோதனை அறிக்கையை மருத்துவர்கள் தருவது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக விசாரணைகள் செய்வது, சட்ட உதவிகளையும் நிதி உதவிகளையும் பெற முடியாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இருப்பது ஆகிய தடைகள்.
தேசிய காவல் ஆணையத்தின் ஐந்து அறிக்கைகளும் கடந்த பல ஆண்டுகளாகத் தலைசிறந்த நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் தலைமையில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் அளித்த அறிக்கைகளின் பரிந்துரைகளும் 2006இல் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களைப் பெருமளவு பிரதிபலிக்கின்றன. காவல்துறை சீர்திருத்தம் கேட்பாரற்று இருந்த அந்தக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிர்ணயகரமான தீர்ப்பு என்று புகழப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களில் தங்களுக்குத் தேவையானதை - உகந்ததை மட்டும் அமல்படுத்துவது, பிறவற்றைப் புறக்கணிப்பது என மத்திய - மாநில அரசுகள் நடந்துகொண்டதால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உருவாக்கிய நம்பிக்கையும் பொய்த்துப்போனது. இந்த வழிகாட்டுதல்களில் சில காவல்துறை விஷயத்தில் அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தைக் குறைப்பதாக இருப்பதால் இவற்றை அமல்படுத்துவதில் அரசுக்குத் தயக்கம். இந்த வழிகாட்டுதல்கள் அமலாக்கப்படுவதைத் தனது கண்காணிப்பின் கீழ் என்று உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியிருந்தால் விளைவு வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
பல்வேறு குழுக்களின் அறிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களும் முழுமையான ஆலோசனையை வழங்குகின்றன.  1861ஆம் ஆண்டின் காவல் சட்டத்தை ஒழித்துப் புதிய ஒன்றை இயற்றுவது, வேலைக்கு ஆளெடுக்கும் (உச்சபட்ச அதிகாரிகளை நியமிப்பது உட்பட) முறைகளை மேம்படுத்துவதன் மூலம் காவல்துறையைச் சுதந்திரமானதாக்கி அரசு நிர்வாகத்தின் குறுக்கீடு இல்லாது பார்த்துக்கொள்வது, இடமாற்றம், பணி உயர்வு ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டுவருவது, புலனாய்வுப் பிரிவையும் சட்ட-ஒழுங்குப் பிரிவையும் பிரிப்பது, காவல்துறைக்கு எதிரான புகார்களை விசாரிக்க தனி அமைப்பை உருவாக்குவது ஆகியவை இவற்றுள் அடங்கும்.
காவல்துறை என்ற நிறுவனத்தின் மீதான பொதுமக்களின் பார்வை, அதன் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஆகியன முற்றாகக் குலைந்து போகாதிருப்பதையும் காவல் சீர்திருத்தம் குறித்த பிரச்சாரம் உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொன்னால் குற்றங்களின் வீதம், காவல்துறையினாலும் நீதிமன்றங்களாலும் முடிக்கப்படும் வழக்குகள், காவல்துறையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் சதவீதம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், சிறை குறித்த புள்ளிவிவரங்கள், அட்டவணைப்படுத்தப்பட்ட சாதிகள்/பழங்குடியினர், பெண்கள் - குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்ற வழக்குகளை முடித்தல் என ஆறு பெரும் பிரிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட ‘இந்தியாவில் காவல்துறையின் நிலை’ என்ற 2018ஆம் ஆண்டு அறிக்கையில் காவல்துறையின் செயல்பாடுகள் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருப்பது தெரியவருகிறது. காவல்துறையின் பாகுபாடான செயல்பாடு என்பது பெரும்பாலும் வர்க்கத்தின் அடிப்படையில் இருப்பதும், அதையடுத்து பால், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் இருப்பதும் தெரிகிறது. பொதுமக்களில் காவல்துறை பற்றிய அச்சம் அதிகமாக இருப்பது சிறுபான்மை மக்களிடம்தான், அதிலும் முஸ்லிம்களிடம்.
காவல்துறை சீர்திருத்தம் அமலாவது என்பது இவ்வளவு மோசமாகவுள்ள சூழ்நிலையில் தனது 2006ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக அமல் செய்யவேண்டும், அப்படி செய்யாத மாநிலங்கள் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக தண்டிக்கப்படும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
நிறுவனங்களில் சார்பு நிலவுவது என்பது உலகளாவிய புலப்பாடு. அமெரிக்காவில் சிகாகோ காவல் படையானது நிறச் சார்புடன், பாகுபாட்டுடன் நடந்துகொண்டு அதீதமான படைகளைப் பயன்படுத்துவதையும்,  அங்கு ‘மறைக்கும் கலாச்சாரம் மிகப் பரவலாக’ இருப்பதையும் நீதித் துறை வெளியிட்ட 2017ஆம் ஆண்டு அறிக்கை குறிப்பிடுவதை சிகாகோ காவல் சீர்திருத்தம் காட்டுகிறது. வெள்ளை அதிகாரி ஒருவர் கறுப்பு இளைஞர் ஒருவரை கொன்றதையடுத்து இது நடந்தது. பதில் சொல்லும் பொறுப்பு பெடரல் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் அமலாக்கப்படுவதற்கான விரிவான திட்டம் ஒன்றை சிகாகோ அரசும் காவல்துறை அதிகாரிகளும் வகுத்தனர்.
உதயகுமார் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை வழங்கியபோது குற்றம்சாட்டப்பட்டவர்களின் செயல்கள் காவல்துறை நிறுவனத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் என சிபிஐ நீதிபதி கூறினார். ‘இந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால் அது சமூகத்தின் சட்ட ஒழுங்கைப் பாதிக்கும். அத்தகைய நிலை மிகவும் ஆபத்தானது’ என்றும் அவர் குறிப்பிட்டார். தாபங் திரைப்படத்தில்  வரும் காவலர் ‘லஞ்சம் வாங்குபவர்’ என்றாலும் ஏழைகளுக்குப் பெரிதும் உதவுபவர். இது திரைப்படத்தில் மட்டும்தான். யதார்த்தம் வேறு. காவல்துறை சீர்திருத்தம் வேகமாக நடந்தாக வேண்டும்.  
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஆகஸ்ட்11, 2018
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.