டிசம்பர் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      டிரம்ப்: இரண்டாம் வருகை
      இசைபட வாழ்தல்
      ஔவையின் கவித்துவம்
      கோஹினூர்: ஒரு சாபத்தின் கதை
    • கதை
      துணை
      சங்கடம்
      கொம்பு
    • பாரதியியல்
      ஸ்நேஹலதையின் தற்கொலை புதிதாகக் கண்டறியப்பட்ட பாரதியின் படைப்பு
    • அஞ்சலி: வி.டி. ராஜ்சேகர் (1932-&2024)
      தலித் குரலைச் சர்வதேசமயமாக்கியவர்
    • கற்றனைத்தூறும்-1
      மாணவர்கள் என்ன கற்கிறார்கள்?
    • அஞ்சலி: ராஜ் கௌதமன் (1950&2024)
      தனிப் பயணி தனித்துவப் பயணி
    • பதிவு
      இயல் விருது 2024
    • தொடர் 80+
      நம்பி மூத்த பிரான்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      சி.வை.தா & உ.வே.சா எதிரெதிர் நிறுத்தித்தான் விவாதிக்க வேண்டுமா?
    • மதிப்புரை
      இடைவெளியை நிரப்பும் ஆய்வு
    • முன்னுரை
      குரலில் எதிரொலிக்கும் வாழ்வின் கதை
    • பதிவு: அரவிந்தன் 60
      ஒரு நாள் போதுமா?
    • கவிதைகள்
      றாம் சந்தோஷ் வடாற்காடு கவிதைகள்
    • தலையங்கம்
      இதழ் 300
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு டிசம்பர் 2024 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

‘மதுவிலக்கும் இராஜாஜியும்’ கூடுதல் தகவல்கள்

நவம்பர் 2024 இதழில் ஜெ. பாலசுப்ரமணியம் எழுதிய ‘மதுவிலக்கில் தலித்துகளும் காந்தியர்களும்’ கட்டுரையின் மூலம் அக்காலச் செய்திகள் பலவற்றை அறிந்துகொள்ள முடிந்தது.

ஆனால் இராஜாஜி 1925இல் அன்றைய சேலம் மாவட்டம் புதுப்பாளையத்தில் (தற்போது நாமக்கல் மாவட்டம்) காந்தி ஆசிரமத்தை ஆரம்பித்து, 1929வரை அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மது ஒழிப்பிற்காகச் செய்த பிரச்சார யுக்திகளையெல்லாம், கவனக்குறைவாக உப்புச் சத்தியாகிரக நடைப்பயணத்தோடு தொடர்புபடுத்திவிட்டார் கட்டுரையாளர்.

1926இல் சுயராஜ்யக் கட்சியின் ஆதரவில் டாக்டர் பி. சுப்பராயன் தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது இராஜாஜி பகுதி அளவிலான மதுவிலக்கு அமுல்படுத்தும் மசோதா ஒன்றைச் சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆனால் சென்னை மாகாண அரசாங்கத்தால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

1929இல் அகில இந்திய மதுவிலக்குச் சங்கத்தின் கௌரவப் பொதுச் செயலாளரானார். விமோசனம் என்ற தமிழ் மாத இதழுடன், இந்திய மதுவிலக்குச் சங்கத்தின் ஆங்கில இதழான புரொஹிபிசன் என்ற மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இதழின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தார். தொடர்ந்து இராஜாஜி எடுத்துக் கொண்ட முயற்சிகளை ஒட்டி, திருச்செங்கோடு தாலுகாவில் 31 கடைகளையும், ராசிபுரம் தாலுகாவில் 22 கடைகளையும் 1929 இறுதியில் அரசு மூடியது. சுமார் மூன்று ஆண்டுகள் மூடியிருந்த கடைகள் அரசால் மீண்டும் திறக்கப்பட்டன.

1937இல் சென்னை மாகாண ஆட்சியில் அமர்ந்த இராஜாஜி, 1937 அக்டோபர் 1 முதல் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை அமுலுக்குக் கொண்டு வந்தார். தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார். சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதை கவர்னர் எர்ஸ்கைன் இங்கிலாந்து அரசருக்கு எழுதினார். அரசரின் காரியதரிசி கவர்னருக்கு எழுதிய கடிதத்தில், ‘அரசர், இராஜாஜியைப் பாராட்டியதைக் குறிப்பிட்டு மதுவிலக்கைப் பற்றிய செய்தி அவரை மிகவும் கவர்ந்தது’ என்றும் எழுதியிருந்தார்.

மாகாணம் முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தும் முன்பே, இரண்டாம் உலகப் போரில், இங்கிலாந்து அரசின் தன்னிச்சையான போக்கை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவின்படி 1939, அக்டோபர் 30ஆம் நாள் இராஜாஜி அமைச்சரவை பதவி விலகியது.

அதன் பிறகு சுதந்திர இந்தியாவில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராகப் பொறுப்பேற்ற பின், சென்னை மாகாணம் முழுவதிலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு தனது வாழ்நாளில் மதுவிலக்கை அமுல்படுத்தத் தீவிர முயற்சிகள் எடுத்த இராஜாஜி 1971ஆம் ஆண்டு, திமுக அரசு மதுவிலக்கைத் தளர்த்துவதாக அறிவித்ததும், கொட்டும் மழையிலும் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று, அரசின் முடிவைத் திரும்பப் பெறுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். ஆனால் அது பயன் தரவில்லை. மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டிருந்த காலத்திலேயே அவர் இயற்கை எய்தினார்.

சீ. இளங்கோவன்
சேலம்.

இரா. திருநாவுக்கரசுவின் ‘அறச்சீற்றத்தின் அழியா முகம்’ ஃபாசிசத்தின் கோர நடவடிக்கைகளுக்கு ஆளாகி உயிரை இழந்த பேராசிரியர் சாய்பாபா அவர்களின் மரணம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதாகும். கடுமையான வினாக்களை எழுப்பி வந்த இன்னும் சில அறிவுஜீவிகள் சிறையில் உள்ளனர்.

வெளியில் இருந்தால் இவர்கள் உருவாக்கும் கருத்துகள் தங்கள் கோர முகங்களைக் கிழித்தெறியும் என்பதாலேயே ஆட்சியாளர்கள் இவர்களை வெளியில் வரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

தாமதப்படும் நீதி என்பார்கள். இங்கோ சட்டத்தை வைத்துக்கொண்டு அநீதி கைகளை விரித்துப் பரந்து நிற்கிறது. அறிவுஜீவிகள்மீதான கொடுமைகளுக்கு எதிரான செயல்பாடுகள் பரந்த அளவில் இல்லை. ஒரு குறிப்பிட்ட பகுதி, அதுவும் மிகச் சிறிய அளவில், மட்டுமே அதன் தாக்கத்தை உணர்ந்தது. இது துரதிர்ஷ்டவசமானது.

தனது கட்டுரையின் நிறைவுப் பகுதியில் இடதுசாரிகள் மீதான விமர்சனத்தைக் கட்டுரையாளர் வைத்துள்ளார். பின்பகுதிக்கு முதலில் வருகிறேன். “ஜோதிபாசு பிரதமர் ஆவதை மிக உக்கிரமாகத் தடுத்த அவரது கட்சியின் அறிவுஜீவிகளுக்கு” என்கிறார். அக்கட்சியின் நிலைப்பாடு என்ன? தங்களால் கொள்கைரீதியான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றால் அந்த ஆட்சியில் பங்கேற்க முடியாது.

1996ஆம் ஆண்டில் அக்கட்சிக்கு இருந்தது வெறும் 32 மக்களவை உறுப்பினர்கள்தான். அந்த எண்ணிக்கையை வைத்துக்கொண்டு எப்படி ஆட்சி அதிகாரத்தில் கொள்கைரீதியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?

கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டும்தான் இதுவரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றுள்ளது. ஆட்சியில் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அளவிலான எண்ணிக்கை இருந்ததால் அந்தப் பங்கேற்பு இருந்தது. மத்தியில் அல்லது வேறு எந்த மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றதே இல்லை. கட்சியின் நிலைப் பாட்டை உக்கிரமாக அல்ல, உறுதியாகப் பின்பற்றியது.

மேலும், மதவாதத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு குறுங்குழு முதலாளித்துவத்தை மானசீகமாக வரவேற்பதா என்று வினா எழுப்புகிறார். ஜோதிபாசு யாருடைய ஆதரவில் பிரதமராக ஆகவிருந்தார்? அங்கும் பிற முதலாளித்துவக் கட்சிகள்தானே?  மதவெறியை எதிர்க்க முன்வரும் முதலாளித்துவக் கட்சிகளோடு கைகோத்துச் செயல்படும் உத்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டுமல்ல, பிற இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு தனி நபர்களும் கடைப்பிடிக்கிறார்கள். இன்றைக்கு பிகாரில் மக்களின் பிரச்சினைகளைப் பல்வேறு தளங்களில் சிபிஐ (எம்.எல்) விடுதலைக் கட்சியினரால் ஓங்கி ஒலிக்க முடிகிறதென்றால், அதற்கு இந்த உத்திதான் காரணமாகும்.

இப்போது சிறையிலுள்ள அறிவுஜீவிகளின் விடுதலைக்காக மைய அரசியல் தளத்திலிருந்து எழுப்பப்படும் குரல்கள் இடதுசாரிகளுடையதேயாகும். அவற்றை நிராகரிப்பது நியாயத்திற்கான குரல்களை மட்டுப்படுத்துவதில்தான் முடியும்.

கணேஷ்
கோவை.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.