ஜூன் 2018
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஏப்ரல் 2026
    • கட்டுரை
      புதிய மலேசியா
      கர்நாடகம்: புதிய அரசு சோதனையில் வெல்லுமா?
      ஸ்டெர்லைட் போராட்டத்தின் வரலாறு
      மீசை எனும் மயிர்
      லண்டனில் கார்ல் மார்க்ஸ்
      பழைய பேப்பர்
    • அஞ்சலி - பாலகுமாரன் (1946 -2018)
      காதலாகிக் கனிந்து...
    • கதை
      உண்ணாமுலை
      புதைகுழி
      சமாதானத்தின் கதை
    • EPW பக்கங்கள்
      கார்ல் மார்க்ஸ்:
      ஆளுநர்களின் முடிவெடுக்கும் அதிகாரம்
    • திரை
      பிரேதங்களினால் கட்டுடைக்கப்படும் அரசுகள்
    • கடிதங்கள்
    • மதிப்புரை
      எஞ்சி நிற்கும் பாவனைகள்
      இன்னாத உலகத்தில் இனியவை காண்க
    • தலையங்கம்
      நின்று கொல்லும் அரசு
    • கவிதை
      நந்திக் கடல் அருகே
      அருணி கஷ்யப் கவிதை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2018 அஞ்சலி - பாலகுமாரன் (1946 -2018) காதலாகிக் கனிந்து...

காதலாகிக் கனிந்து...

அஞ்சலி - பாலகுமாரன் (1946 -2018)
போகன்சங்கர்

எழுத்தாளர் பாலகுமாரன் சமீபத்தில் மறைந்தார். நீண்ட காலமாகவே அவரது உடல்நிலை சீர்கெட்டிருந்தது. அதைப்பற்றித் தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது தெரிவித்துக்கொண்டுதான் இருந்தார். இளமையில் ஓயாது பிடித்த சிகரெட்கள்தான் அவரது உடல்நலம் கெடக் காரணம் என்ற தகவல் அவரது எண்ணற்ற கட்டுரைகள் மூலம் உலகுக்குத் தெரியும். பாலகுமாரனின் பிரபலத்துக்கு அவரது இந்த ‘தனது வாழ்வை, வெற்றியை, தோல்வியை, காதலை, கள்ளக்காதலை, புகைபிடிக்கும் பழக்கத்தை, வத்தக்குழம்பு பிடிக்காததை’ நேரடியாகவோ புனைவுகளின் மூலமாகவோ வாசகர்கள் முன் வைத்துக்கொண்டே இருந்தது காரணமாக இருக்கலாம். நாம் ஒரு வாழ்க்கையுடன் உரையாடலில் இருக்கிறோம் என்ற தோற்றத்தை அவர்களுக்கு அது அளித்தது.

தமிழ்ப்பரப்பில் வெகுசிலரே இப்படி ஒரு தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்கள். பாலகுமாரன் மறைந்ததும் அவரது வாசகர்கள் பலர் கண்ணீர் விட்டழுதார்கள். தங்கள் வாழ்க்கையை மாற்றிச் சீரமைத்த ஆசானை அவர்கள் இழந்துவிட்டதாக உணர்ந்தார்கள். இதனால் சிலரது கேலிக்கும் உள்ளானார்கள். பாலகுமாரனின் இலக்கிய இடம் என்ன என்பது மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குள்ளானது. அவர் முற்றிலும் ஒரு வணிக எழுத்தாளர் என்று சிலர் புறம் தள்ளினார்கள். மாத நாவல்களிலும் பெரிய பத்திரிகைகளிலும் தொடர்கதை எழுதிய இரண்டாம்தர கேளிக்கை எழுத்தாளர் என்றும் சொன்னார்கள். அவர்களே, அவர் பார்ப்பனிய சிந்தனை

களைத் தந்திரமாகத் தனது பிரதிகளில் நுழைத்த எழுத்தாளர் என்றும்

சொன்னார்கள்.

சுஜாதா, பாலகுமாரன் இருவரது பெயர்களும் தீவிர இலக்கிய வட்டாரங்களில் அதிகம் வெறுக்கப்

பட்டவையாக ஒரு காலத்தில் இருந்தன. சுஜாதா இதை அவருக்கே உரிய புத்திசாலித்தனத்தோடு சமாளித்தார். பிரதிக்கு வெளியே அவர் எழுதியவை, பேசியவை எல்லாமே இன்று அவருக்குச் சற்றே தயக்கத்துடன் வழங்கப்படும் இலக்கிய இடத்தை நோக்கியே அமைந் திருந்தன. பாலகுமாரன் இதற்கு முயலவே இல்லை. இவ்வளவுக்கும் அவர்கள் இருவருமே சிற்றிதழ்கள் வட்டத்திலிருந்து மேல்க்கிளம்பிச் சென்றவர்களே. பாலகுமாரன் தனது முன்னோடியாக ஞானக்கூத்தனையும் ஜானகி ராமனையும் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர். இது அவருக்குச் சில சங்கடங்களைக் கொண்டுவரவும் செய்தது. ஜானகிராமனின் மெலிந்தபிரதிதான் பாலகுமாரன் என்ற குற்றச்சாட்டு இன்னமும் கூறப்படுகிறது. ஆனால் இவரும் ஆண் பெண் உறவுகளின் சிடுக்குகளைப் பற்றி எழுதினார் என்பதுவும் சில வார்த்தைப் பிரயோகங்களும் தவிர இருவரது பயணங்களிலும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஜானகிராமனின் உலகம் பெரும்பாலும் வீழ்ந்து வந்த ஒரு நிலவுடைமைச் சமுதாயத்தின் உலகம். அவரது கலை எவ்வளவு உச்சத்திலும் ஒரு கருணைமிக்க மிராசுதாரின் கலையே. பாலகுமாரனின் வாழ்வுலகமோ நடுத்தர வர்க்கத்தின் அபிலாசைகளுடன் மிக நெருக்கமாய்ப் பின்னிப் பிணைந்தது. முதல் தலைமுறையாக டெலிபோன் துடைக்கிற பெண்ணாகவோ வங்கியில் குமாஸ்தாவாகவோ மருத்துவமனையில் செவிலியாகவோ வேலை செய்ய இறங்குகிற பெண்ணின் காதலையும் காமத்தையும் ஏக்கங்களையும் பேசுவது. பாலகுமாரன் இந்த அகவாழ்க்கையை விரிவாக விதம்விதமான புறப்பின்னணிகளில் எழுதினார். வணிகர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர் நிறைய கதைகள் எழுதி இருக்கிறார். வெவ்வேறு விதமான வணிகங்கள் குறித்த அவற்றின் நுட்பமான தகவல்களுடன் அவர் எழுதிய நாவல்கள் நிறைய இருக்கின்றன. அவரது வாசகர்களில் பலர் வணிகர்கள்.

பாலகுமாரனின் முதல் நாவல் அவரது தொழிற்சங்க வாழ்க்கையையும் அதன் மீதிருந்த அவரது தொடக்ககாலப் பற்று விலகுவதையும் விவரிக்கிற ‘இரும்பு குதிரைகள்’. இன்றளவும் அவரது சிறந்த நாவல் அதுவே என்று வாதிடுவோர் உண்டு. டாபே தொழிற்சாலையில் பதினேழு வருடங்கள் பணிபுரிந்தவர். அதன் மிகப்பெரிய வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுக் கடும் வன்முறைக்கு உள்ளானவர். அவர் அங்கிருந்து விலகி மெதுவாக அயன் ராண்டின் கேபிடலிசத்தை நோக்கி நகர்வதை அவர் எழுத்துக்களில் தெளிவாகக் காணலாம். அயன் ராண்டின் மீதான வியப்பை அவர் நேரிடையாகவே தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். மறுபுறம் எல்லா சிந்தனைகளையும் உள்வாங்கி விவாதிக்கிற, விவாதித்த சிற்றிதழ் உலகம், உலகின் ஒரு பாதியை வென்று ஆண்டுகொண்டிருந்த ஒரு சிந்தனையைப் பற்றிக் கனத்த மவுனம் சாதித்தது என்பதைக் கவனிக்கவேண்டும். இந்த வாழ்க்கைநோக்கு நகர்வு அவரிடத்தில் மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல. அது பொதுச் சமூகத்திலும் பிரதிபலித்த ஒன்றே . அதைத் துல்லியமாக அவதானித்துத் தனது சிந்தனைகளில் பொருத்திக்கொண்ட ஒரு எழுத்தாளர் என்று அவரைச் சொல்லலாம். இடதுசாரி லட்சியவாதம் கடும் பின்னடைவைச் சந்தித்த காலகட்டம் இது என்பதையும் சேர்த்து நாம் அவதானித்தால் அவரது பிரபலத்துக்குக் காரணம் என்னவென்பதும் விளங்கும். இடதுசாரி மனப்பான்மை கொண்ட பெரும்பாலான சிற்றிதழ்கள் அவரை நிராகரித்ததும் இந்த வழியில் இயல்பானதே; ஆம் அதற்கு இலக்கியம் தவிர வேறு காரணங்கள் இருந்தன. பாலகுமாரனின் இந்த நகர்வின் தொடர்ச்சியாகவே பின்னால் அவரது ஆன்மீக அலைக்கழிப்புகளும் நிகழ்ந்தன. கூட்டு மானுட விடுதலை பேசும் இசங்களிலிருந்து விலகித் தனி மனித விடுதலையை முன்வைத்த நவயுகக் குருமார்களின் காலகட்டமும் இதுவே என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஓஷோ, ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்றோர் சிந்தனைகள் ஆன்மீகத்தில் மட்டுமில்லாது இலக்கியம் அரசியல் போன்ற தளங்களிலும் ஆதிக்கம் செலுத்திய கால கட்டம் இது. அவர்கள் புரட்சி போன்ற இடதுசாரி சொற்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தினர்.பாலகுமாரன் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாரை இந்தப் பாதைகளில் வந்துதான் கண்டுகொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஒருவகையில் அவர் தானும் ஒரு புதுயுகக் குரு என்ற இடத்தை அடையவே விரும்பினார் என்று படுகிறது. அவரது இறுதிக் காலச் செயல்பாடுகளும் படைப்புகளும் போதிக்கிற தன்மையிலேயே அமைந்திருக்கின்றன. அவர் எழுத்துச்சித்தர் என்றுகூட அழைக்கப்பட்டார்.

பாலகுமாரன் ஒருபோதும் அசோகமித்திரன் போன்றோ சுந்தரராமசாமி போன்றோ ஆகிருதியான எழுத்தாளர் அல்ல. ஆனால் அவர் புகழ் உச்சியில் இருந்த காலத்தில் அவ்வாறு மயங்கிய கூட்டம் இருந்தது. ஆகவே அவர்களுக்குக் கடுமையாக சில விசயங்களைச் சொல்லவேண்டி இருந்தது. ஆனால் இப்போது அந்த மயக்கம் இல்லை. இனிமேல் அவரது எழுத்துகள் பற்றிய சரியான நிதானமான மதிப்பீடு உருவாகலாம்.

கட்டுரை தலைப்பு பாலகுமாரனின் நாவல் ஒன்றிலிருந்து

மின்னஞ்சல்: bohanth@gmail.com


 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.