நவம்பர் 2018
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
அக்டோபர் 2025
    • கட்டுரை
      ஓநாய்களை ஓடவிரட்டும் தருணம்
      அன்னா பெர்ன்ஸின் 'பால்காரன்'
      மொழி காலத்தின் பிரதிநிதி, 4ஜி கதைகள் & 3டி பார்வை
      மீட்கப்பட்ட செப்புச்சிலைகள்
      காந்தியால் பிறந்த தலித்துகளுக்கான பள்ளிகள்
    • கதை
      மூன்று சம்பவங்கள்
      ஏழூ முப்பத்தாறு
      மயக்கம் தெளிந்தபிறகு
      கலையரசி
      வரையறுத்தல்
      இமய விடியல்
    • EPW பக்கங்கள்
      கோயில் நுழைவுச் சிக்கலும் நடைமுறை அரசியலும்
      பெண்களை எப்படி நம்புவது?
    • திரை
      பரியேறும் பெருமாள்: தமிழ்த்திரையில் தெற்கு
      மனைவி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
      எதிர்வினை: த. உதயச்சந்திரன் பார்வைக்கு
    • கவிதைகள்
      அவமானம், ஒரு குடிமகனின் குறிப்புகள் , தளும்பும் கணம்
      இரவுப் பிராணி, அறைகளின் விடுதலை
      ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்துவந்த சாலைகள்
    • தலையங்கம்
      மறுக்கப்படும் பொதுவெளிகள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு நவம்பர் 2018 கடிதங்கள் எதிர்வினை: த. உதயச்சந்திரன் பார்வைக்கு

எதிர்வினை: த. உதயச்சந்திரன் பார்வைக்கு

கடிதங்கள்
குருசாமி மயில்வாகனன்

அக்டோபர் 2018 காலச்சுவடு இதழை முன்வைத்து:

“அறிவியல் பார்வை என்று குறிப்பிட வருவது அறிவியல் பாடத்தில் மட்டுமல்ல, மொழிப் பாடங்களிலும்கூட. மொழிப் பாடங்களிலும் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே நாம் எதையும் சொல்ல வேண்டும் என்பதைக் கவனமாக முடிவு செய்தோம். ஏனென்றால் மிக முக்கியமாக நம்முடைய வரலாற்றைப் புரிந்து கொண்டதிலும் வரலாற்றுச் சொல்லாடலிலும் கற்பனை சேர்ந்துள்ளதாக விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆகவே, எழுதப்படும் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது சான்றுகள் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் மாற்றுக் கருத்துகள் இருப்பின் அவற்றையும் பதிவு செய்ய வேண்டும்” என நேர்காணலின் முதல் கேள்விக்குப் பதிலாக, உதயசந்திரன் குறிப்பிடுகின்ற அவரது இரண்டாவது கொள்கைக்கு மாறாக அமைந்துள்ள ஒரு பாடத்தையும் அதிலும் சில குறிப்பிட்ட அம்சங்களையும் மட்டும் சுட்டிக் காட்டுவதே இக்கடிதத்தின் நோக்கம்.

ஆறாம் வகுப்பு - தமிழ்ப் பாடநூல் - பகுதி: விரிவானம் - இயல்: ஏழு - தலைப்பு: வேலுநாச்சியார் - பக்கங்கள் 155 முதல் 158 வரை.

1. “காளையார்கோவிலில் நடந்த போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந் தார்,” எனப் பக்கம் 155இல் உள்ளது. இது தவறான தகவலாகும். எதிர்பாராத நிலையில் சூழ்ச்சியால் மன்னர் கொல்லப்பட்டார் என்பதுதான் சரியானது. பார்க்க எனது ‘ஒப்பனைகளின் கூத்து’ (சிவகங்கை வரலாற்றை முன்வைத்து ஓர் ஆய்வு) நூல்.

2. “ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும் பெண் கள் படைப்பிரிவுக்குக் குயிலியும் தலைமை ஏற்றனர்,” 

எனப் பக்கம் 157இல் உள்ளது. இதுதான் மிக முக்கியமானது.

யார் இந்தக் குயிலி? 1813 முதல் 2018 வரை சிவகங்கை வரலாறு குறித்து வெளிவந்துள்ள, இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படாத ஓர் ஆங்கில நூல் உள்பட, ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட சுமார் அறுபது நூல்கள் எமது வசம் உள்ளன. அவற்றுள் மூன்று நூல்கள் ஏற்கெனவே 1960களில் தமிழக அரசின் பாட நூல்களாக இருந்தவை. அவை எதிலும் இந்தக் குயிலி எனும் பெண்ணும் இடம் பெற்றதில்லை, அப்போது சிவகங்கையில் போர் நடந்ததாகவும் அந்நூல்கள் குறிப்பிட்டதில்லை.

தமிழகத்தின் இடதுசாரிய, திராவிட, இந்தியத் தேசிய, தமிழ்த் தேசிய, தலித்திய, முற்போக்கிய அறிவுசீவிகளால் கூறப்பட்டு வருகின்ற, குயிலி உண்மையில் வரலாற்று ஆதாரமற்றவள். ஜீவபாரதி என்பவரின் ஓராண்டுத் தொடர்கதையாலும் 2000ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை வந்துள்ள பதினான்கு பதிப்புகளின் சுமார் இருபதாயிரம் நூற் பிரதிகளாலும் கடந்த இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து பரப்பப்பட்டு வந்துள்ள ஒரு கற்பனைப் பாத்திரம்தான் இந்தக் குயிலி. இந்தக் கற்பனைக்குச் சிவகங்கையில் 25.50 லட்சம் ரூபாய்க்கு நினைவுத் தூணையும் வைத்துவிட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

மேலும் ஒரு தகவல், ‘ஜீவபாரதியின் வேலு நாச்சி யார் நாவலில் பெண்ணியச் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்த புதுக் கோட்டை மாவட்டம், சந்தைப்பேட்டை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி மு.கீதா என்பவர் தற்போதைய பாடநூலாசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ள இருபத்தைந்து ஆசிரியர்களில் ஒருவராவார்.

சிவகங்கை வரலாற்றோடு குயிலி மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்படுகிறாள், சாதி எனும் கயிற்றால். குயிலியின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் சிவகங்கை வரலாற்றிற்கு ஏற்பட்டுள்ள இந்தப் பரிதாப நிலைக்கு இது குறித்த உதயசந்திரனின் அறிக்கைதான் முடிவுகட்ட வேண்டும். எதிர்பார்க்கிறேன்.

குருசாமி மயில்வாகனன்

சிவகங்கை

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.