மே 2019
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      விளிம்புநிலை மக்கள் வரலாறும் உ.வே.சாமிநாதையரும்
      பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள்
      மேற்கத்தியப் பல்கலைக்கழகமும் இனவாதமும்
    • கதை
      இங்கே நிறுத்தக்கூடாது
      வென்றவள்
    • அஞ்சலி: இயக்குநர் மகேந்திரன் (1939 – 2019)
      அழகுகளில் உறைந்தவர்
    • அஞ்சலி: இயக்குநர் மகேந்திரன்
      ஓடாத நதியின் ஓடம்
    • இனஅழிப்பின் 10 ஆண்டுகள்
      காய உருக்கள்
    • நேர்காணல்: ரொமிலா தாப்பர் / மருதன்
      வரலாறு என்றால் என்ன?
    • EPW பக்கங்கள்
      தேர்தல் அறிக்கைகளின் அரசியல்
    • திரை
      புதுமையின் நாஸ்டால்ஜியா
    • கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?
    • மதிப்புரை
      முன்பின் தெரியாத வாழ்க்கை
    • தலையங்கம்
      மீண்டும் படரும் காரிருள்
    • இன அழிப்பின் 10 ஆண்டுகள்
      இளைய நெஞ்சிலே
      நிலானியின் கோட்டோவியங்கள்: எல்லையுரு, எதிர்ப்பு, அடையாளம்
      முரண்பாடுகளின் நினைவு அரிச்சுவடி
      போரும் கூத்தும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2019 EPW பக்கங்கள் தேர்தல் அறிக்கைகளின் அரசியல்

தேர்தல் அறிக்கைகளின் அரசியல்

EPW பக்கங்கள்
தமிழில்: க. திருநாவுக்கரசு

நடந்துகொண்டிக்கும் பொதுத்தேர்தலுக்காகப் பெரும்பாலான தேசிய கட்சிகளும் மாநில அளவில் முக்கியத்துவம் கொண்ட கட்சிகளும் தங்களது அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கைகளில் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான விஷயங்கள் சொல்லப்படுவதால் இத்தகைய அறிக்கைகளை மக்கள் ஒரு சடங்காகவே பார்க்கின்றனர். ஆனாலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எந்தெந்த விஷயங்களுக்கு முதன்மையளிக்கின்றன, அவற்றின் சித்தாந்தச் சாய்வுகள் என்னென்ன என்பதை இந்த அறிக்கைகள் மூலம் மதிப்பிட இயலும். முந்திய தேர்தல்களில் அக் கட்சிகள் அளித்த வாக்குறுதிகளுக்கும் இப்போது தேர்தல் நடக்கிறபோது அந்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவற்றிற்கும் இடையிலான இடைவெளிகளை, வேறுபாடுகளைக் கண்டறிய இந்த ஆவணங்கள் உதவுகின்றன. அறிக்கைகளையும் கட்சிகளையும் மதிப்பிடுவதற்கு அவை தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தினவா என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் முக்கியமான அளவுகோலாக இருக்கிறது. (எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளை அலசி ஆராய்வதில் மையநீரோட்ட ஊடகங்கள் காட்டும் உற்சாகத்தை ஆளும் கட்சியின் அறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்தி அது கடந்த ஐந்து ஆண்டுகளில் உண்மையில் என்ன சாதித்தது என்பதை ஆராய்வதில் காட்டுவதில்லை என்பது வேறு விஷயம்.) ஆனால், இந்த அளவிற்குத் தேர்தல் அறிக்கைகளைக் கீழிறக்குவது மேலாளர் அணுகுமுறையைப் போன்றது. அரசியல் கட்சிகள் என்பன வெறும் சேவைகளை அளிக்கும் கருவிகள் என்ற அரசியல்நீக்கம் செய்யப்பட்ட கருத்தாக்கத்தையே இது அளிக்கும். தேர்தல் அறிக்கைகளின் அரசியலானது செயல்படுத்தப்படக்கூடிய வாக்குறுதிகள் என்பதைத் தாண்டி பிரச்சாரத்தையும் சித்தாந்தக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன. ஓர் அரசியல் கட்சியை அதன் செயல்படுத்தப்படக்கூடிய முழக்கங்களைத் தாண்டி அதன் பிரச்சாரம், சித்தாந்த முழக்கங்களின் அடிப்படையிலும் மதிப்பிட வேண்டும். இந்த விஷயத்தில் இப்போது போட்டியிலுள்ள முக்கியமான அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் என்ன சொல்லுகின்றன?

2014 மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட தேர்தல் முடிந்த பின்னர் பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டதிலிருந்தே அது தேர்தல் அறிக்கைகளை முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை என்பது தெரிகிறது. இந்த முறையும் பாஜகவின் அறிக்கை மிகுந்த யோசனைக்குப் பிறகு, வாக்காளர் மத்தியில் நல்ல ஆதரவு பெறத் தொடங்கியுள்ள காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கான எதிர்வினையாக அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. எனினும் கட்சியினுடைய சங்பரிவாரத் திட்டங்களை இந்த அறிக்கை வெளிப்படுத்துவதுடன், வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிற அதே நேரத்தில் அதன் பிரிவினையையும் பிளவுவாத தேர்தல் பிரச்சாரத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறது. குடிமக்கள் தேசியப் பதிவேடு, குடியுரிமை (திருத்த) மசோதாவைத் தேசிய அளவில் அமல்படுத்துவது, அரசமைப்புச்சட்டப் பிரிவு 370ஐ நீக்குவது என்பன தேசம், தேசியம் பற்றிய பாஜகவின் உள்ளார்ந்த பாகுபாடான பார்வையைக் காட்டுகின்றன. வளர்ச்சி தொடர்பான விஷயத்திலும் வேலைகளை உருவாக்குவது பற்றிய பிரச்சினையைத் தவிர்த்துவிட்டுச் சொந்தமாகத் தொழில் தொடங்குவது தொடர்பான வீறாப்புப் பேச்சில் தஞ்சம் புகுந்திருக்கிறது. இது இன்றைய தேதியில் செய்யப்பட வேண்டிய முக்கியமான பணியை நேரடியாக மறுப்பதாகும். பெண்களை வலிமை கொண்டவர்களாக ஆக்குவது பற்றிச் சொல்லப்படும் வழக்கமான சொற்களைத் தவிர்த்துச் சமமான வேலைகளுக்குச் சமமான ஊதியம் பற்றி எந்தப் பேச்சுமில்லை. பாலின சமத்துவம் குறித்த வாக்குறுதி, முஸ்லிம் பெண்களைப் பாதிக்கிற நடைமுறைகளுடன் நின்றுவிட்டது. சிறுபான்மையினருக்காக ‘முதலைக் கண்ணீர்’ வடிக்கப்பட்டபோதிலும் ‘கண்ணியத்துடனான வளர்ச்சி’ என்ற ஒரு வரிக்கு அப்பால் இதுகுறித்து எதுவும் சொல்லப்படவில்லை; தேசம் குறித்த பாஜகவின் கருத்தாக்கத்திற்குச் சிறுபான்மையினர் எப்படி இரண்டாம்பட்சமானவர்களாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே பாஜகவின் கவனமானது ராமர் கோயில், சபரிமலை விவகாரங்களில் குவிந்திருக்கிறது. இங்குதான் பாஜகவின் ஆட்சி அரசமைப்புச்சட்ட மக்களாட்சிக்குப் பெரும் ஆபத்தாக இருக்கிறது. “மத நம்பிக்கைகளுக்கு அரசமைப்புச்சட்ட ரீதியான பாதுகாப்பை அளிக்க கட்சி முயலும்” என்று தேர்தல் அறிக்கை கூறுவது அரசமைப்புச்சட்ட விழுமியங்களைத் தூக்கியெறிவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பாகும்.
முதலில் தேசத்தின் பாதுகாப்பு என்ற பாஜகவின் அணுகுமுறைக்கு மாறாக காங்கிரசானது வேலை வாய்ப்புகள், மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்த பிரச்னைகளைத் தேசியப் பிரச்சினைகளாகக் கருதி அவற்றிற்கு முதன்மையளித்திருக்கிறது. நவீன தாராளமயம் என்ற வட்டத்திற்குள் இருந்தபோதிலும் குறைந்தபட்ச வருமான உறுதித் திட்டம்,  விவசாயத்திற்கென தனி பட்ஜெட் ஆகியவை காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது மக்களாட்சி அம்சங்களுக்குக் கொஞ்சமேனும் மதிப்பளிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. கும்பல் கொலைகள், கலாச்சாரக் காவல் கும்பல்கள் ஆகியன உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான ஆபத்துகள் என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டிருப்பது புத்துணர்வை அளிக்கிறது. இதை ஏதோ சட்ட - ஒழுங்குப் பிரச்சனையாகப் பார்ப்பதாகக் கருதிவிடக் கூடாது. இத்தகைய கும்பல்களால் தேச ஒற்றுமைக்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்திருப்பது பன்மைத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதைக் காட்டுகிறது. குடிமைச் சுதந்திரங்களுக்குக் கடப்பாடு கொண்டிருப்பது (அல்லது குறைந்தபட்சம் அப்படிக் கூறியிருப்பது) காங்கிரசைப் பாஜகவிட மிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தேசத் துரோகச் சட்டத்தையும் அவதூறு வழக்கு சட்டத்தையும் ஒழிப்ப தாக வாக்குறுதியளித்திருப்பதும் ஆயுதப் படைகளின் (சிறப்பு அதிகார) சட்டம் 1958ஐ மீள்பார்வைக்கு உட்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருப்பதும் இந்தியாவை ஆயுதப் படைகளின் அரசாக மாற்றுவதிலிருந்து தடுக்கும் காங்கிரசின் எண்ணத்தைக் காட்டுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்களின் சொல்லாடலை தேசத்தை அருவமான கருத்தாக்கமாகப் பார்ப்பதற்கும் யதார்த்தத்தில் உண்மையாக வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கும் இடையிலான போட்டியாக மாற்றினால் காங்கிரசின் தேர்தல் அறிக்கை பயனுள்ள ஓர் அரசியல் கருவியாக இருக்கும். 

மாற்று சமூக - பொருளாதாரப் பாதைக்கான தங்களது கொள்கைரீதியான கடப்பாட்டுடன் சங் பரிவாரத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் தீரத்தாலும் கம்யூனிஸ்டுக் கட்சிகளின் அறிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்தல் ரீதியாக கம்யூனிஸ்டுகளின் பலம் குறைந்திருப்பதைக் கருத்தில் கொள்கையில் இந்த அறிக்கைகளின் முக்கியத்துவம் இவை நடக்குமா என்பதில் இல்லை. மாறாக, இவை மக்கள் இயக்கங்களுக்கான அடிப்படைகளாக அமைவதற்கான ஆற்றலில்தான் இருக்கின்றன. கம்யூனிஸ்டுக் கட்சிகளின் கோரிக்கைகளை காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஓரளவேனும் ஏற்க வேண்டிய கட்டாயத்தை இத்தகைய மக்கள் இயக்கங்களே உருவாக்கின. இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) கூறியிருக்கும் தேசிய நகர்ப்புற வேலை உறுதித் திட்டம், சமாஜ்வாதி கட்சியின் பெரும் பணக்காரர்கள் மீதான கூடுதல் வரிகளுக்கான முன்மொழிவு மக்கள் இயக்கங் களுக்கான உள்ளுறை ஆற்றலைக் கொண்டுள்ளன.

அரசியல் கட்சிகளைத் தாண்டித் துப்புரவுப் பணியாளர்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை உயிர் வாழ்வதற்கான உரிமையை முன்னிலைப்படுத்தியிருப்பது அரசியல் அமைப்பிற்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்குமான அற முறையீடாகும். வெற்றுத் தேசியத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இதை மக்களிடம் எடுத்துச்செல்வது அவற்றின் கடமையாகும்.

தலையங்கம், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, ஏப்ரல் 13, 2018

தமிழில்: க. திருநாவுக்கரசு

மின்னஞ்சல்: thiru.jnu@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.