மார்ச் 2020
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      பெண்களால் வீழும் இந்துத்துவம்
      அடையாளத்திலிருந்து அடையாளமின்மைக்கு
      எந்நாளும் அழியாத கவிதை
      கலைப் படைப்புகளும் இடைவெளிகளும்
      சைவதூஷண பரிகாரம்: யூதர்கள் சைவர்களான கதை
    • உரை
      பெண்ணின் பெருங்கதை
    • கதை
      தொடுகறி
      அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்
      நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை
    • நினைவு
      இணரூழ்த்தும் . . .
    • பதிவு
      மண் விடுதலை வேண்டும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      எழுத்தின் இனவரைவு
    • கவிதைகள்
      கவிதைகள்
      தேநீர் கவிதைகள்
      ஒவ்வொரு சின்ன அர்த்தத்தையும் திறந்து பார்த்தல்
    • தலையங்கம்
      உரிமை மறுக்கும் கீதம்
    • நேர்காணல்: கணேஷ் தேவி
      ஒரு மனிதனாக உயர்வது எப்படி?
    • கவிதை
      உன்னைப் பார்க்கத்தான்
      ‘நாம் பார்ப்போமே’
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2020 தலையங்கம் உரிமை மறுக்கும் கீதம்

உரிமை மறுக்கும் கீதம்

தலையங்கம்

இலங்கையின் இரண்டாவது சுதந்திர தினம் 1949 பிப்ரவரி 4ஆம் நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. அதற்குப் பின்னான காலங்களில் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட்டு வந்தது. ரணில் - மைத்திரி ‘நல்லாட்சி அரசு’ 2016ஆம் ஆண்டிலிருந்து இரு தேசிய மொழிகளிலும் கீதம் பாடப்படுமென அறிவித்தது. இது தமிழர்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்தும்; இதன்மூலம் இணக்கம், ஐக்கியத்திற்கான முன்னெடுப்புகள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களான ராஜபக்சே குழுமம் இனி தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என அறிவிப்பை வெளியிட்டது. 72வது தேசியதினத்தில் அதை நிறைவேற்றியது. இந்த நடவடிக்கை சிறுபான்மை மக்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இலங்கை அரசியல் அமைப்பின் மேல் அச்சத்தையும் அவநம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது; கடந்தகால அரசுகள் சிறுபான்மையினர் நலன்களை முன்னிறுத்தியதில்லை என்பதே வரலாறு. இப்போது ஏட்டளவிலானவற்றையும் அழிப்பதில் அரசு இறங்கியிருக்கிறது. இதன்மூலம் சிங்கள, பௌத்த ஆதாயங்களை முதன்மைப்படுத்தி ஒற்றை இன, மொழி, மத நலன்களே முன்னெடுக்கப்படும் என்பது வெளிப்படை. இந்தச் செயல்பாடுகள் மூலம் பெரும்பான்மை இன, மதமே தனக்குப் பிரதானமான தென்று அரசு எண்ணுகிறது. சிறுபான்மையினர் மைய விவகாரங்களிலோ தேசிய அரசியலிலோ உரிமைகோர முடியாது எனும் நிலைப்பாட்டை அரசு கைக்கொண்டுள்ளமை அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது.

தமிழில் தேசியகீதம் பாடப்படுவதால் தமிழர்களுக்கோ, தமிழ் முஸ்லிம்களுக்கோ, இதர சிறுபான்மை மக்களுக்கோ உடனடி லாபங்கள் ஏற்படப்போவதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை அதன் கடந்தகால அரசியல் முரண்கள், பிடிவாதங்கள், மத இன மேலாதிக்கக் கட்டுமானங்களை விட்டு இறங்கிச் சிறுபான்மை மக்களுடன் உரையாடலைத் தோற்றுவிப்பதான பாவனையை ‘நல்லாட்சி அரசு’ உருவாக்கியது. ஆனால் தற்போதைய அறிவிப்பும் செயல்பாடும் அரசு எந்தவிதத்திலும் சிறுபான்மையினருடன் இணக்கம் கொள்ளத் தயாராக இல்லையென்பதையே காட்டுகிறது.

1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசால் தனிச் சிங்கள மொழிச் சட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டங்கள், கலவரங்கள், கொலைகள், காணாமல்போதல்கள், அச்சுறுத்தல்கள் என்று மனித உரிமைகளுக்கு எதிரான பல்வேறு அழிமதிகள் ஏற்பட்டன. சிங்களவர்-தமிழர் இடையே ஏற்பட்ட முதல் சட்ட முரண் இது. தனிச் சிங்களச் சட்டத்துக்கெதிராக எழுந்த போராட்டங்களைத் தொடர்ந்து 1958ஆம் ஆண்டு கல்வி, போட்டித் தேர்வுகள், அலுவலக மொழி, வடக்கு-கிழக்கில் அரச நடவடிக்கைகளுக்குத் தமிழ்ப் பயன்பாடு எனத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1978ஆம் ஆண்டு 13ஆம், 16ஆம் திருத்தச் சட்டங்கள் மூலம் அரசமொழிகள் பற்றிய அடிப்படைச் சட்டத்தில் சிங்களம், தமிழ் இரண்டு தேசிய அலுவலக மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத்தான் ‘நல்லாட்சி அரசு’ தமிழில் தேசியகீதம் என்ற இணக்க நடவடிக்கையை முன்னெடுத்தது.

நாட்டில் பிறந்த அனைவருக்கும் மொழியுரிமை அடிப்படையானது. தமிழில் தேசியகீத மறுப்பு அடிப்படை உரிமை மீறலாகவே கருதப்படும். ஒரு மொழியைப் பிரதானப்படுத்திப் பல்லின, மத மக்கள் வாழும் தீவைத் துண்டாட நினைப்பது இலங்கை அரசு எழுபது வருட வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

கோத்தபய அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாப்புப் பரப்புரைக்காகத் தெருவோரச் சுவர்களில் வரைந்த ஓவியங்கள் இனவாதத்தைத் தூக்கிப்பிடிக்கும்படியும் சிறுபான்மைச் சமூக மக்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் வகையிலும் அமைந்துள்ளன. சிங்கள அரசர்கள், அவர்களின் பெருமிதங்கள், வாள்வீச்சுகள், வெற்றிக்கூச்சல்கள் ஆகியவற்றையே இவை சித்தரிக்கின்றன. அதேபோல் தமிழ்ப் பெண்கள் கடவுச்சீட்டுக்கு பொட்டு வைத்துக்கொண்டு புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற அதிகாரபூர்வமற்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. இவையெல்லாம் சிறுபான்மை தேசிய மக்களை அச்சத்துக்குள்ளாக்குவதற்கான தாக்குதல்களே. சர்வதேச அளவில் இன்றைக்கு நிகழக்கூடிய பெரும்பாலான போராட்டங்கள் ஒற்றைமையத்துக்கு எதிரானவையாய் இருப்பதை இலங்கை அரசு உணரவே இல்லை.

பெரும்பான்மை மக்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் தேர்தல் நலன்களை முன்னிருத்தி சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துவது ராஜபக்சேக்களின் அரசியல் தந்திரத்தின் செயல் வடிவமாகும். இவர்களின் அரசு நவீன ஜனநாயகத் தத்துவத்தை மதிக்கவும் இல்லை, அதன் முக்கியத்துவத்தை உணரவும் இல்லை. அவர்கள் மன்னராட்சி முறைக்குத் திரும்ப நினைக்கிறார்கள். இப்போக்கு ஜனநாயக முறைக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும். சிறுபான்மையினர் தனியாக இல்லை. அவர்களும் சிங்கள மக்களோடு இணைந்தே இலங்கையில் வாழ்கிறார்கள். அவர்கள்மீது அரசு மேற்கொள்ளும் வல்லாதிக்கப்போக்குகளைக் காலப்போக்கில் சிங்கள வாக்காளர்களுமே விரும்பமாட்டார்கள். இனவாத நலன்களையும் அதிகாரத்தையும் கைக்கொண்டு நிலைத்த மன்னர் ஆட்சிக்கு அடிகோலும் காலம் இதுவல்ல.

இலங்கை அரசின் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ச 2020 பிப்ரவரி 7ஆம் தேதி, ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தியப் பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பில் இருநாட்டு உறவு, பொருளாதாரம், பயங்கரவாத ஒழிப்பு, தமிழர்களுடனான இணக்கத்தை ஏற்படுத்துதல், மீனவர்கள் பிரச்சினைகள் போன்றவை குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. “ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும். அமைதியாக வாழ்வதுடன், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அவர்களுடைய இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றுமென்று நம்புகிறேன்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

தொடர்ந்து நேர்காணல் அளித்த மஹிந்த “இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு. இலங்கையின் ஒட்டுமொத்த அபிவிருத்தி, பாதுகாப்பு குறித்துப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம், தங்கள் நாட்டுடனான உறவுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைக்கும் என நம்புகிறேன்,” என்று கூறியிருந்தார். இலங்கைத் தமிழர்கள் நலன்பற்றிய மோடியின் கோரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை என்பதை இந்தக் கூற்று எடுத்துக்காட்டுகிறது.

இதற்கு முன்பு ஜனாதிபதிப் பொறுப்பேற்றவுடன் இந்தியா வந்த கோத்தபய ராஜபக்சேவிடமும் இதேபோன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கை அரசு அதற்கும் எவ்வித முக்கியத்துவமும் அளித்ததாகத் தெரியவில்லை.

பிராந்தியத்தில் பலமான அரசாக இருக்கும் சீனாவுடன் நெருக்கமான தொடர்பைப் பேணும் குடும்பத்தினராக ராஜபக்சேக்கள் இருந்தார்கள். இலங்கையின் அறுபது வீதமான கடன்தொகையைச் சீன அரசிடமிருந்து இலங்கை அரசு பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கான இலங்கைப் பிரதமர் வருகைகூடக் கடனுக்கான கெடுவை நீட்டிப்பதற்கே என்று பிபிசி தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்திய அரசும் தன் அதிகார நலன்களை முன்னிருத்தி இந்த அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறதே ஒழிய சிறுபான்மையினரின் நலன்களைப் பேணுவதற்காக அல்ல என்பது வெளிப்படை.

முழுமையான சிங்களப் பௌத்த மேலாதிக்க அரசை நிறுவி அரசியல், அதிகார ஆதாயங்களைத் தேடிக்கொள்வதில் மிக நேரடியான நிலைப்பாட்டை கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ளது. முந்தைய அரசுகளின் வழிமுறையிலேயே தொடரும் இந்த விலக்கிவைப்பு சிறுபான்மையினரிடம் அரசுமீதான அவநம்பிக்கையை வலுப்படுத்தவே செய்யும்.

பூகோளரீதியான பொருளாதார அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஒரு நிலப்பகுதியில் அன்றாட இனக்குழப்பங்களும் முரண்களும் சிறுபான்மைத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் மிகக் கடுமையான பாதுகாப்பற்ற சமூகமாகவே உணரச் செய்யும். இதை நிரூபிக்கும்வகையில் அமைச்சர்களின் தொடர்பேச்சுகளிலும் பரப்புரைகளிலும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்புகளும் வெளிப்பட்டவாறே இருக்கின்றன. இந்தச் சமநிலையற்ற நிலை மத, இனவாதத் தரப்புகளுக்கு உரம் அளிக்கும். இந்த அடிப்படைவாதத் தரப்புகளின் எதேச்சதிகார நடவடிக்கைகள் நாட்டின் அமைதிமீது நிகழ்த்தப்பட்ட உளவியல் போர் என்றே கருதவேண்டியிருக்கிறது. தொடர்ந்து நடத்தப்படும் இந்த உளவியல் தாக்குதல் புலம்பெயர்ந்த சமூகத்தினரிடமும் என்றைக்குமே திரும்பமுடியாது என்ற அந்நியப்படுத்தப்பட்ட நிலையை உருவாக்கும்.

இலங்கை அரசின் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கைக் கண்டிப்பதும் அதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வைப்பதும் இந்தியாவினதும் சீனாவினதும் அவசியமான பணிகள். ஆனால் இன்றைய இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் நிகழ்ந்திருக்கும் அரசியல் திருப்பமும் இந்துத்துவ அரசியலும் இதற்கான முன்னெடுப்பைச் செய்யுமென்று நம்ப முடியாது. இறுக்கமான ஒற்றை நெறியைப் பரப்புவதிலும் வரலாற்றைத் திரிப்பதிலும் இந்திய - இலங்கை அரசுகளுக்குள் அதிக வேறுபாடுகள் இல்லை.

75 விழுக்காடு சிங்கள மக்கள் வாழும் நாட்டில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசில் 92 வீதமானோர் சிங்களம் பேசும் தரப்பைச் சேர்ந்தவர்கள். கோத்தபய அரசு தன்னை அறுதிப்பெரும்பான்மைச் சிங்களமக்களின் அரசு என வெளிப்படையாகவே பிரகடனப்படுத்திச் செயல்பட்டு வருகிறது. சிங்கள பௌத்த வாக்காளர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவராக பதவியேற்பு விழாவிலே அறிவித்த கோத்தபய அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.