மார்ச் 2020
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      பெண்களால் வீழும் இந்துத்துவம்
      அடையாளத்திலிருந்து அடையாளமின்மைக்கு
      எந்நாளும் அழியாத கவிதை
      கலைப் படைப்புகளும் இடைவெளிகளும்
      சைவதூஷண பரிகாரம்: யூதர்கள் சைவர்களான கதை
    • உரை
      பெண்ணின் பெருங்கதை
    • கதை
      தொடுகறி
      அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்
      நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை
    • நினைவு
      இணரூழ்த்தும் . . .
    • பதிவு
      மண் விடுதலை வேண்டும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      எழுத்தின் இனவரைவு
    • கவிதைகள்
      கவிதைகள்
      தேநீர் கவிதைகள்
      ஒவ்வொரு சின்ன அர்த்தத்தையும் திறந்து பார்த்தல்
    • தலையங்கம்
      உரிமை மறுக்கும் கீதம்
    • நேர்காணல்: கணேஷ் தேவி
      ஒரு மனிதனாக உயர்வது எப்படி?
    • கவிதை
      உன்னைப் பார்க்கத்தான்
      ‘நாம் பார்ப்போமே’
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2020 மதிப்புரை எழுத்தின் இனவரைவு

எழுத்தின் இனவரைவு

மதிப்புரை
தேவமைந்தன்

மதிப்புரை

எழுத்தின் இனவரைவு

தேவமைந்தன்

கிராவின் கரிசல் பயணம்
(கட்டுரைகள்)
பக்தவத்சல பாரதி

வெளியீடு

காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. ரோடு, நாகர்கோவில் 1
பக். 256, ரூ. 275

‘கிராவின் கரிசல் பயணம்’ என்கிற இந்தப் புத்தகம், வாசிக்க வாசிக்க இனவரைவியல் அறிவை உருப்பெருக்கித் தந்தது. பக்தவத்சல பாரதி உருவாக்கிய - ‘பண்பாட்டு மானிடவியல்’ பற்றியும்; ‘தமிழர் மானிடவியல்’ குறித்தும் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ குறித்தும் வலைத்தளங்களில் எழுதியிருக்கிறேன். ஆனால் பக்தவத்சல பாரதியின் சிற்சில நூல்களைப் பார்க்கிற வாய்ப்புக்கூட எனக்கு இல்லாமல் போயிற்று. ‘இலங்கை இந்திய மானிடவியல்’ ‘இலங்கையில் சிங்களவர்’ என்ற இரண்டு நூல்கள் அச்சிலவற்றுள் அடங்கும். இவரிடத்தில் பேசிவழிப் பேசிய பொழுதில்தான், ‘சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்’ என்ற இவருடைய முகமையான புத்தகத்தையும் தெரியவந்தது.

‘கி.ரா.வின் கரிசல் பயணம்’ புத்தகத்தை நண்பர் நாயகர் புத்தகக் காட்சியில் வாங்கிவந்து விருப்பமுடன் தந்தார். இரண்டு சால் ஓட்டியும் நிறைவடையாமல் பொழுதுபோன பின்னாலும் வாசிப்புழவு செய்தவண்ணம் இருக்கிறேன். இந்தப் புத்தகத்தின் வெளியீடு, இதன் எழுத்துப் பிரம்மனின் எழுத்துகளுடன் தோளோடு தோள் சேர்த்துச் செல்வதையும் உணர்கிறேன். 253ஆம் பக்கத்திலே பக்தவத்சலபாரதி தன்னுடைய பின்னுரையை, அதாவது நூலுக்குள்ளான ஒட்டுமொத்தமான தன்னுடைய முடிப்புரையை நிறைவுசெய்யும்போது, எனக்கொரு விளக்கமுடியாத பெருஞ்சோர்வு உண்டானது. இந்தச் சோர்வு சிறிதே முரணும் வியப்புக்கும் இடம் தருவது. சில புத்தகங்களைப் படிக்கும்பொழுது, “முடியாதா, இந்தப் புத்தகம் சட்டுப்புட்டென முடியாதா,” என்ற சோர்வு போல்வதன்று இது. பகரமாக, “ஐயோ, இந்தப் புத்தகம் முடிந்துவிட்டதே,” என்ற வெறுமையால் விளையும் சோர்வு. பொது வாசிப்புக்கான புத்தகமா இது என்றால்... நம்முடைய பாரதி எழுதியபடி பார்க்கும்போது - இந்தத் துறையிலுள்ள இளைஞர்கள், குறிப்பாக மற்றவர்களை விடவும் இனவரைவியல் துறையில் ஈடுபடக் கூடியவர்களே இதைப் படிக்க வேண்டும். முழுமையாக ஆழம் கண்டு வாசிக்கக்கூடிய அனைவருக்குமே இது சொத்து. நுனிப்புல் மேயும் வழக்கம், இன்றைய சமூக வலைதளங்களால் - இளைஞர்களுக்குள் மிகவும் ஆழமாக வேரூன்றிவிட்டது. ‘எழுத்துகளாலான இரண்டுவரிகளுக்கு மேல் ஈடுபாட்டுடன் படிக்கமாட்டேன்,’ என்று அடித்துச் சொல்லுகிற தலைமுறை உருவாகிவிட்டது. ‘நீயே சுருக்கமாகச் சொல்... எங்களுக்கு வேறு வேலை இல்லையா,’ என்று கேட்கும், இலேசானவற்றை மட்டுமே விழையும் மொபைல் மூளைகள் மிகுந்துவிட்ட தலைமுறை நிகழ்கிறது. ஆனால் இந்தப் புத்தகம், வேலையற்றுப் பொழுதைப்போக்க விரும்புபவர்கள் தொட முடியாததுதான். மிக ஆழமான ஒரு தரிசனம், அளவற்ற அகலமுடைய காட்சியைத் தேடும் வாசகருக்கு உரியது. கனபரிமாணமற்ற இயற்கை அனுபவம் நிரம்பியதொரு படைப்பாளியின் விசுவாசத்தைக் குறித்த வினாக்குறி வியப்புக் குறியாகவே மாறிப் போகும் அதிசயம் இந்தப் புத்தகத்தில் நிகழ்ந்துள்ளது. பொத்தாம் பொதுவாக எழுதிச் செல்லாமல், வரையறுக்க முடியாத படைப்பாளியின் நோக்கினை/கோட்பாட்டை சுதேசி இனவரைவியல் அடிப்படையில் ஆவணப்படுத்துவது இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

கி.ரா.வின் மொழியிலும் எழுத்துகளிலும் நம்முடைய தமிழ் நிலமும் நீரும் நிலைத்திணை வகைகளும் விலங்கினங்களும் மக்களும் சாதிகளும் வரலாறும் கிராமங்களும் (இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்) பொலிவதை ஆய்ந்து விளங்கப்படுத்தும் நூலிது. குறிப்பாக, மஞ்சள்நீர்ச் சடங்கு பற்றிய எனக்கிருந்த பெரும் குழப்பம், பக்தவத்சல பாரதியின் இந்தப் புத்தகத்தில் வரும் ‘பூப்பும் பதின்பருவமும்’ என்ற இயலால் துப்புரவாகத் தீர்ந்தது. சாதி வேறுபாடு இல்லாமல்~ வெள்ளாளர், மற்ற சாதிச் சமூகங்களைச் சேர்ந்தவர்களை மாமன் மச்சான் உறவு கொண்டாடும் அதிசயம் இதிலே விளக்கமாகிறது. பால், பாலியல், பாலுறவு தொடர்பான செய்திகளைப் பேசவே கூச்சப்பட்டு வாழ்க்கையைத் தொடுதிரைமேல் தொலைத்துப் போகவிடுகின்ற இந்தத் தலைமுறைக்கும் ஆசானாக கி.ரா. விளங்குவதைக்கூட இனவரைவியல் அடிப்படையிலேயே பக்தவத்சலபாரதி வெளிப்படுத்துவதுடன் ஆவணப்படுத்தியுமிருக்கிறார். விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக இருந்த காலம் மாறி இன்றைக்கு விவசாயிகளே வாழ்வாதாரம் தேடுகிற நிலை உருவாகிவிட்டதையும் கி.ரா. வழிநின்று பதிகிறார். ‘குடியானவர்’ என்று நம்மை நாமே அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய மெய் நிலையை அறியாமல் தடுமாறி, திரிபுக் கலாச்சாரத் திகைப்பூண்டை மிதித்து நிற்கிற நம்மை, உண்மையில் நாம் யார் என்று கி.ரா. வழிவிலகாமல் அடையாளப்படுத்துகிறார்.

கி.ரா.வின் இசை ஞானத்தை மிக ஆழமாக, வரைவுக் கோட்பாடுகளை மீறாமலும் வெறும் முகத்துதியாக மொழியாமலும் இசைஞானம் வந்ததை ஆய்வுரீதியாக நின்று பக்தவத்சல பாரதி விளக்கும் இயல் பேரற்புதமானது. எனக்கு இதுவரை தெரியாத பல செய்திகளை அதில் நான் கண்டுகொண்டறிந்தேன். சுரங்கத்துக்குப் பக்கத்தில் இருந்துவிடுவதாலேயே அந்தச் சுரங்கத்தை அளவீடு செய்துகொள்ள முடியுமா என்ன? அதை ஒரு சுரங்கவியல் நுட்பமறிந்தவர் விவரிக்கும் பொழுதுதானே அறிந்துகொள்ள முடியும்.

அதுபோலவே இன்னொன்று, தான் பயன்படுத்திய, இன்றும் கரிசல் மக்கள் புழங்குகிற கரிசல் நிலச் சொற்களை அகராதிப்படுத்தி, மிகவும் சிறப்பான முறையில் தொகுத்து ‘வட்டார வழக்கு அகராதி’ உருவாக்கியதன் மூலம் சிறந்த அகராதித் தொகுப்பாளராகவும் கி.ரா. திகழ்வதை ஆய்வியல் அடிப்படையில் பாரதி இந்தப் புத்தகத்தில் பதிந்திருக்கிறார். அண்ணல் காந்தியினுடைய கனவிலிருந்து கி.ரா.வின் நனவுவரை சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் சீரழிந்து கிடக்கும் எளிய கிராம மக்களை இனவரைவியல் ரீதியாக வகைப்படுத்தவும் தவறவில்லை. புதியதொரு புத்தகமெழுதியல் முறை வகுத்துக்கொண்டு, ஒவ்வோர் இயலுக்குமானதொரு பின்னுரை வகுத்து, அவ்வவ்வியலின் கருத்துகளைச் சுருங்கத் தொகுத்து நமக்கு நல்கிவிடுகிறார் பாரதி. அப்படியும் நிறைவடையாமல், நூல் இறுவாயில் நூலின் புறநடையாக, பாரியதொரு பின்னுரையை உருவாக்கி வைத்திருப்பதிலும் பக்தவச்சல பாரதி உயர்ந்து நிற்கிறார். பள்ளிக்கூடம் தொடர்பான கி.ரா.வின் கல்விநிலை மெய்ம்மை, சிறிய வயதிலேயே உறவுகள் ரீதியாகவும் உடம்பு ரீதியாகவும் உற்ற கொடுமை, வெள்ளெழுத்துப் பார்க்கிற வயதில் புதிதாய் இலக்கிய உலகில் விழுந்து எழுதத் தொடங்கிய படைப்புத் தொடக்கமும் தொடர்தலும், இயற்கைத் தாயிடம் பெற்றுக்கொண்ட தவஞானம், ரசிகமணிபால் கொண்ட ஈர்ப்பு நிலைநிற்றல், கி.ரா.மறுவாசிப்பில் நண்பர் பஞ்சாங்கம் எட்டிய நிலை மேலும்கூடிப் பெருக்கெடுத்தோட வேண்டிய பேரகத்தியம், தொகுப்புகளில் பேரா.சிலம்பு நா.செல்வராசுவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு, கி.ரா.முறையியல், கி.ரா.வின் மொழிச் செயல்பாடு, கடிதமெழுதுவதிலும் கி.ரா.வின் தனிப்பாடுகள்; கைநமைச்சல் தீர அவர் எழுதிக் குவித்த கடிதங்கள் குறித்த தீப. நடராஜனின் ஆவணம், தன் மண்ணிலிருந்து உயிர்த்தெழுந்துகொண்டேயிருக்கும் கி.ரா.வின் வாய்மொழி மரபு, ‘கிராமமற்ற கி.ரா.’ என்ற கருதுகோளின் முழுமையான இன்மை கிராமவியல் கலாச்சாரத்தினூடு கி.ரா.வின் தொடர் தன்னிருப்பு எல்லாவற்றையும் பக்தவத்சல பாரதி பேய்வலிமையுடன் இப்புத்தகத்தில் அழுந்தப் பதித்துள்ளார்.

இரத்தினச் சுருக்கமாக மொழிந்தால் கி.ரா.வின் கரிசல் இருப்பெனும் உன்னதத்தை, இனவரைவியல் நோக்கில், ‘முதைச்சுவல் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந்தாங்கு,’ கி.ரா.வை வாசிக்கும் விசுவாச வாசகர்களின் ஆழ்மனத்துள் அடுக்குக் கல்வெட்டுகளாய்ச் செதுக்கிவிட்டார் முனைவர் பக்தவத்சல பாரதி.

மின்னஞ்சல்: karuppannan.pasupathy@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.