ஜனவரி 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      வேர்களை அறுக்க முடியாது
      பேக்கரிக்காரரே, பேக்கரிக்காரரே, எனக்காக ரொட்டி சுடுங்களேன்...
      ஓமைக்ரானை வரவேற்கலாமா?
      நோயச்சத்தில் கல்வி முன்னும் பின்னும்
      கல்வியைத் தொற்றிய கொரோனா
      கல்வி இனி?
      அழிவின் தொடக்கத்தில்
      தமிழ் சினிமா எனும் மாமத யானை
      நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
      மகாராஜா வீழ்த்தப்பட்ட கதை
      கெம்பின்ஸ்கி ஹோட்டல்
      உள்ஒதுக்கீடு 10.5% உயர்நீதிமன்றச் செய்தி என்ன?
    • கதை
      நான் கொன்ற பெண்
      நிலவுண்ணும் மண்
      அத்தாட்சி
      ஈர்ப்பு விசை
    • சிறப்புப் பகுதி பொருநைப் பக்கங்கள்
      இயற்கையும் எழுத்தும்
      நம் காட்டுயிர்: சீரழிக்கப்பட்ட பாரம்பரியம்
      கிருஷ்ணனும் அவர் காமிராவும்
      மகராசாவின் வெள்ள நாக்குட்டி
      கிருஷ்ணனின் செய்தி
    • உரையாடல் : கணேஷ் தேவி-டேவிட் ரீச்
      நாம் ஹரப்பனின் குழந்தைகள்
    • பத்தி
      கடைசிப் பக்கங்கள்
    • புத்தகப் பகுதி
      எப்படி இருக்கப்போகிறது எதிர்காலம்?
      சுகிப்பும் எதிர்ப்பும்
      உண்மையான காதலன்
      தமிழும் அறபும்
    • வினோத் துவா (1954 - 2021)
      காட்சி ஊடகத்தின் முதல்வர்
    • 25 (1996 - 2021) ஆண்டுகள்
      25 (1996 - 2021) ஆண்டுகள்
    • கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      ஊடகம் - அரசு - நீதி
    • அசாமியக் கவிதைகள்
      சற்று முன்பு நாம் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்?
    • ஞானபீட விருதுகள்
      நீல்மணியும் மாஸோவும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2022 சிறப்புப் பகுதி பொருநைப் பக்கங்கள் மகராசாவின் வெள்ள நாக்குட்டி

மகராசாவின் வெள்ள நாக்குட்டி

சிறப்புப் பகுதி பொருநைப் பக்கங்கள்
மா. கிருஷ்ணன்

கிருஷ்ணனின் கோட்டோவியத்திற்கு எடுத்துக்காட்டு. அவரது நாய் சொக்கியின் படம்.

கதை

புலிவீரப்பட்டி ஜமீன்தாரின் தோட்டம் நீண்டு போதுமான அகலமற்று இருந்தாலும், செடிகள் அடர்ந்துள்ளன: அன்று ஜமீன்தாருடன் தோட்டத்தைச் சுற்றிவருகையில், “இதென்ன கத்தரிப்பாத்தி போல் நெடுகச் செடிகள் செறிந்திருக்கின்றனவே” என்று நான் எண்ணினேன். போகுமிடமெல்லாம் ஜிம்மி என்ற கறுப்புச்சடை நாயும் எங்கள் பின் வந்துகொண்டிருந்தது. ஜமீன்தாருக்கு நாய்களிடத்தில் அபார வாஞ்சை. தம் தகப்பனார் காலத்திலிருந்து கிழக்கு மூலையிலிருந்த குதிரை லாயங்களை அழித்து, சுமார் இருபது நாய்களுக்கு இடம் போதுமானபடி, நாய்க் கொட்டில்களாகக் கட்டியிருந்தார். தன்னிடம் ஏற்கெனவே மூன்று வேட்டை நாய்கள் இருப்பதாகவும், தினுஸுதினுஸாக நாய்கள் வாங்கிக் கொட்டில்களை நிரப்பப் போவதாகவும் அவர் என்னிடம் சொன்னார். புதுக்கொட்டில்களையும் வேட்டை நாய்களையும் பார்ப்பதற்காகவே, தோட்டத்தைக் கடந்து நாங்கள் காலைச் சூரியனை நோக்கி நடந்துகொண்டிருந்தோம்.

“இந்த சிம்மியை வாங்கி இப்பம் ரெண்டு வாரமாகலை, அதுக்குள்ள என்ன விஸ்வாஸமா நம்ம பின்னோடயே வருது பாத்தீகளா! சாதி ஒஸந்த சாதியில்லே? அதுதான்...” எதிரிலொரு வேலையாள் கைகூப்பி நிற்பதைக் கண்டு, அவர் ‘ஜிம்மி’யின் பிரஸ்தாபத்தை நிறுத்தி “என்னடா?” என்றார்.

சேவகன் கூப்பிய கைகளை இன்னும் கூப்பினான். “மாமா வந்திருக்காக, மகராசாவக் கண்டு போகணுமாம்” என்று தாழ்ந்த குரலில் அவன் பதில் மொழிந்தான். 

“இப்பம் ரொம்ப வேலையா இருக்கேன். நேரமில்லைன்னு தெரியலே? பின்ன ஏன் குண்டாங்களுதையாட்டமா வளியிலே வந்து நிக்கறெ, களுதை” என்று ஜமீன்தார் சீறிவிழவே, அவன் இருக்குமிடம் தெரியாதபடி மறைந்துவிட்டான்.

இதென்ன ஆச்சரியம் என்று நான் நினைத்தேன்: ஏனென்றால், இந்த மாமாவை எனக்கு நன்றாகத் தெரியும். இவர் ஜமீன்தாருக்கு மிகவும் வேண்டியவர். ஏதோ ஓர் எட்டினமுறையில் இவர் ஜமீன்தாருக்கு உறவு - ஆகையினாலேதான் இவருக்கு ‘மாமா’ என்ற பட்டம். ஆனால் நெருங்கிய பந்துக்களிடங்கூட, இவர்களுக்குள் இருந்த தோழமையைக் காணமுடியாது. மாமா பதினெட்டு மைல்களுக்கு அப்பாலிருந்த ஒரு கிராமத்திற் குடியிருந்தார்; மாதத்திற் கொருமுறை ஜமீன்தாரைப் பார்ப்பதற்கு வருவார். அன்று புலிவீரப்பட்டியில் இருந்துவிட்டு, மறுநாள் சன்மானங்களுடன் ஊருக்குப் போவார். இவர் ஜமீன்தாருக்கு மூத்தவர்; அறுபது அறுபத்தைந்து வயதானவராயிருந்தும், நல்ல கம்பீரமான தோற்றமுடையவர். முறுக்கிய வெண் மீசை, பருத்துத் திரண்ட புயங்களுக்கேற்ற பொற்காப்புகள், அன்றுதான் தோய்த்து வெளுத்த தலைப்பாகை - இவைகளில்லாமல் இவரைக் காணமுடியாது. எழுதப் படிக்கத் தெரியாதிருந்தும், உலக அனுபவத்திலே தேர்ச்சி பெற்றவர்; வெகுசாதுரியமாகப் பேச வல்லவர். இவர் ஜமீன்தாரிடத்தில் மிகப் பணிவுடனும் ஆதரவுடனும் நடந்துகொள்வார்; அவர் சந்நிதியில் உட்காரமாட்டார்; உரக்கப் பேசமாட்டார்; வாய்விட்டுச் சிரிக்கக்கூட மாட்டார். ஜமீன்தாரும் இவரை மதிப்புடன் பாராட்டுவார். மறைவில் இவர் ஜமீன்தாரைத் தூற்றியதன் பயனாக, சில நாட்களாக இவர்களுக்குள் மனஸ்தாபம் என்றும், இனி புலிவீரப்பட்டிக்குள் மாமா காலெடுத்து வைக்கக்கூடாதென்று ஜமீன்தார் கட்டளையிட்டு விட்டாரென்றும் ஊரில் யாரோ சொன்னதைக் கேட்டிருந்தும், அதுமட்டும் நான் நம்பவில்லை. இத்தனை நாட்களாகத் தங்கள் நட்பிற்குப் புறமில்லாதபடி நடந்துகொண்ட மாமா திடீரென்று இதற்கு இடங் கொடுப்பாரென்று நான் எண்ணவில்லை. ஆனால் அப்பொழுது, ஜமீன்தாரின் வெறுப்பையும் அவர் உதடுகள் துடித்ததையும் கண்டபொழுது, நான் கேள்விப்பட்டது உண்மைதான் என்று அறிந்தேன்.

தான் ஜிம்மியைப் பற்றிச் சொல்லவந்ததை ஜமீன்தார் சொல்லாதிருந்துவிடவே, நாங்கள் பேசாது வேட்டை நாய்களை நோக்கி நடந்தோம். கொட்டில்களினருகில் செடி மறைவாக யாரோ இருப்பதுபோல் தோன்றிற்று - கிட்டிய பின்புதான் இன்னாரென்று புலப்பட்டது. காப்புங் கையுமாகக் கும்பிட்டுக்கொண்டு, மாமா எங்கள் வழியில் நின்றார்.

“மகராசாவக் கும்பிடறேன்” என்று அவர் சொன்னதைக் கேட்காதவர்போல, ஜமீன்தார் மேல் நடந்தார்: “மகராசா புதுசா வாங்கின நாய் இதுதானோ?” என்று ‘ஜிம்மி’யைச் சுட்டிக்காட்டி அவர் கேட்டதும் ஜமீன்தார் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. ‘ஜிம்மி’யுடன் மாமா எங்களைப் பின்தொடர்ந்ததையும், ஜமீன்தார் கவனிக்காதவர்போல் இருந்துவிட்டார்.

கொட்டில்களின் வெளியில் தங்கள் மெலிந்த உடல்களை எடுத்துக்காட்டும்படிக் கனத்துள்ள சங்கிலிகளால் மூன்று கோம்பை நாய்கள் கட்டியிருந்தன.

“அதோ நடுவில் குந்திக்கிட்டிருக்கிறதே, அதுதான் ரொம்ப சாதி - முந்தாநாள் ஒரு ஆட்டுக்குட்டியக் கிளிச்சுப் போட்டிடுச்சு” என்று ஜமீன்தார் என்னிடம் சொன்னார். சிறிது நேரம் நாய்களை உற்றுப்பார்த்துக்கொண்டு நாங்கள் மௌனமாய் நின்றோம். முடிவில் மாமா மெல்லக் கமறிவிட்டு என்னை நோக்கித் திரும்பினார்.

“நம்ம மகராசாவுக்கு நாயின்னா என்ன கிறுக்குன்னு உங்களுக்குத்தான் தெரியுமே - இந்தத் தோட்டம் என்னென்ன நாயெல்லாமோ பாத்திருக்குது. ஆனாலும் அப்பம் அரண்மனையிலிருந்த ஒரு வெள்ள நாக்குட்டிக்கு ஜதை நான் கேட்டதுமில்லெ பாத்தது மில்லெ” என்று அவர் ஆரம்பித்தார்.

“அந்த நாக்குட்டி நல்ல சுத்த வெள்ள நிறம் - சும்மா - பால்போலிருக்கும். சீம நாய் சாதி: அதென்னமோ பேர் மறந்து போச்சுது. அந்த சாதிக்கு - மகராசாவுக்கு ஒரு வேளை க்யாபகமிருக்கலாம்.”

ஜமீன்தார் சுழித்த புருவங்களுடன் பூமியை நோக்கிய வண்ணமாயிருந்தார்; தம் கைப்பிரம்பால் ஒரு புல்மூட்டினைக் குத்திக்கொண்டிருந்தார். மாமா மேலும் பேசலானார்.

“அந்த நாக்குட்டி யிருந்திச்சே, அது காலெல்லாம் தூண்போலிருக்கும். காது லேசாத் தூக்கிக்கிட்டிருக்கும். வால் கத்தி மாதிரி. அதை மகராசா ஆசப்பட்டு வாங்கி, அவுகளே பேர்வெச்சு எப்படிப் பிரியமா வளத்து வந்தாக! பாளாப்போன மறதி யெனக்கு அந்த நாக்குட்டி பேர்கூட மறந்துபோச்சுது. என்ன ‘டைகரா?’ ஆமாம், ‘டைகர்’னு பேர்.”

ஜமீன்தார் திடீரென்று தலைநிமிர்ந்தார். ‘சாக்கி’ என்று கர்ஜித்துவிட்டு மறுபடியும் கீழிருக்கும் புல்லாந் தரையி லாழ்ந்துவிட்டார்.

ஆமாமாம் - சாக்கி, அதுக்கு சாக்கினு பேரில்ல சாக்கிதான். இந்த சாக்கிக்கு என்ன ரோசந் தெரியுமா? என்ன, நானு அரமனையில் எத்தனை நாயோ பாத்திருக்கேன், பெரிய பெரிய வேட்ட நாயெல்லாம் மகராசாகிட்ட யிருந்தில்லெ! முயல் வேட்டை, மான் வேட்டை, பன்னி வேட்டைக்குக்கூடச் சரியான நாயில்லெ? ஆனா எந்த நாயானாலுங் காக்காயப் பிடிச்சு நீங்க பாத்திருக்கீகளா? இருக்காது. காக்காயெ குண்டு வெச்சுச் சுட்டாக்கூட விளாது - அம்மாஞ் சுருசுருப்பு காக்காய்க்கு. ஆனா, இந்த சாக்கி ஒருநாள் ஒரு காக்காயப் பிடிச்சுடிச்சு, மகராசாவே இதுக்கு சாக்கி! சாக்கி மகராசா காலுங்கிட்டப் படுத்துக்கிட்டு தூங்கறாப்பல இருந்திச்சு - காக்கா அதோ அந்த மருதாணிச் செடியிருக்குதே. அம்மாந் தூரத்திலே மேஞ்சுக்கிட் டிருந்திச்சு. திடீரின்னு ஒரே தவ்வில தவ்வி, சாக்கி அந்தக் காக்காய லபக்கின்ன கவ்விப் பிடிச்சுடிச்சு - அவ்வளவுதான்.”

இந்த அதிசயத்தை எடுத்துரைத்துக்கொண்டே நாய் பாய்ந்த விதத்தை விளக்கும்பொருட்டு மருதாணிச் செடியை நோக்கிக் குதிப்பதுபோல் மாமா பாவித்தார். ‘ஜாக்கி’ காகத்தைப் பிடித்த வரலாறு முடிவதற்கு முன்பே, ஜமீன்தாரின் புருவச்சுளிப்பு மறைந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை நினைத்தோ, அல்லது மாமா தாவுவது போல் நடித்ததைக் கண்டோ, அவர் கொல்லென்று சிரித்துவிட்டார்.

“ஹோ, ஹோ, ஹோ! அந்த - ஹீம் - குடுகுடுப் பாண்டிய வெரட்டிச்சே - ஹோ, ஹோ - அது நெனவிருக்குதா?” என்று ‘ஜாக்கி’யின் செயல்களை மேலும் விளக்கிக் கூறுமாறு, ஜமீன்தார் மாமாவைத் தூண்டினார்.

“அதக்கூடவா மறந்துட்டேன் - நல்லா நெனவிருக்குது. மகராசா, தோட்டத்தில சாக்கியோட இப்படி லாத்திக்கொண்டிருந்தாக. அப்பம் ஒரு குடுகுடுப்பாண்டி.” 

ஆனால் இந்தக் கதையைக் கேட்காமலே நான் வந்துவிட்டேன். அதற்குமேல் நான் அங்கு இருப்பது சரியல்ல என்று எனக்குத் தோன்றிற்று. மனஸ்தாபப்பட்டு, பிறகு ‘சாக்கி’யின் திருவிளையாடல்களை நினைத்து உற்சாகமடைந்து கூடும்’ இவர்களுடன் நானும் இருப்பது-

ஏதோ சாக்குச் சொல்லி அவசர விடை பெற்றுக் கொண்டு நான் வந்துவிட்டேன்.

(தினமணி பிரசுரமாக 1944இல் வந்த ‘முன்னிலா’ என்ற நூலில் இடம் பெற்ற கதை)

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.