ஜனவரி 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      வேர்களை அறுக்க முடியாது
      பேக்கரிக்காரரே, பேக்கரிக்காரரே, எனக்காக ரொட்டி சுடுங்களேன்...
      ஓமைக்ரானை வரவேற்கலாமா?
      நோயச்சத்தில் கல்வி முன்னும் பின்னும்
      கல்வியைத் தொற்றிய கொரோனா
      கல்வி இனி?
      அழிவின் தொடக்கத்தில்
      தமிழ் சினிமா எனும் மாமத யானை
      நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
      மகாராஜா வீழ்த்தப்பட்ட கதை
      கெம்பின்ஸ்கி ஹோட்டல்
      உள்ஒதுக்கீடு 10.5% உயர்நீதிமன்றச் செய்தி என்ன?
    • கதை
      நான் கொன்ற பெண்
      நிலவுண்ணும் மண்
      அத்தாட்சி
      ஈர்ப்பு விசை
    • சிறப்புப் பகுதி பொருநைப் பக்கங்கள்
      இயற்கையும் எழுத்தும்
      நம் காட்டுயிர்: சீரழிக்கப்பட்ட பாரம்பரியம்
      கிருஷ்ணனும் அவர் காமிராவும்
      மகராசாவின் வெள்ள நாக்குட்டி
      கிருஷ்ணனின் செய்தி
    • உரையாடல் : கணேஷ் தேவி-டேவிட் ரீச்
      நாம் ஹரப்பனின் குழந்தைகள்
    • பத்தி
      கடைசிப் பக்கங்கள்
    • புத்தகப் பகுதி
      எப்படி இருக்கப்போகிறது எதிர்காலம்?
      சுகிப்பும் எதிர்ப்பும்
      உண்மையான காதலன்
      தமிழும் அறபும்
    • வினோத் துவா (1954 - 2021)
      காட்சி ஊடகத்தின் முதல்வர்
    • 25 (1996 - 2021) ஆண்டுகள்
      25 (1996 - 2021) ஆண்டுகள்
    • கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      ஊடகம் - அரசு - நீதி
    • அசாமியக் கவிதைகள்
      சற்று முன்பு நாம் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்?
    • ஞானபீட விருதுகள்
      நீல்மணியும் மாஸோவும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2022 சிறப்புப் பகுதி பொருநைப் பக்கங்கள் கிருஷ்ணனின் செய்தி

கிருஷ்ணனின் செய்தி

சிறப்புப் பகுதி பொருநைப் பக்கங்கள்

நண்பர்கள் நான்குபேர் சேர்ந்து இரண்டாண்டுக்கு ஒருமுறை மா. கிருஷ்ணன் நினைவுச் சொற்பொழிவை நடத்திவருகின்றோம். கடைசியாக சென்னை ஐஐடி யில் நடந்த நிகழ்வில் கிருஷ்ணனின் கருத்துகள் இன்றும் நமக்கு அர்த்தமுடையவையா, அவற்றை ஏன் அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓர் இளைஞர் கேட்டார்.

முந்தைய ஆண்டுகளைவிட இப்போது கிருஷ்ணனின் கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை என்று நான் நினைக்கிறேன். காட்டுயிர் பேணலில் ஓர் அலைபோல் எழுந்த ஆர்வம் இப்போது ஓய்ந்துவிட்டது. பின்னர் வந்த தாரளமயமாக்கல், சந்தைமயமாக்கல் போன்ற நிகழ்வுகள் காட்டுயிர், சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறைகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டன. அவை சார்ந்த இயக்கத்தையும் சிந்தாந்த பேதங்கள் பிளவுபடுத்திக் கீழே தள்ளி விட்டன. காட்டுயிரியல் ஒரு கல்விப்புலத் துறையாக உருவாக்கப்பட்டுப் பல தொழில்முறைக் காட்டுயிரியலாளர்கள் தோன்றினார்கள். இவர்களுக்கும் காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றின.

இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து பிராணிநல, விலங்குரிமை கருத்துகள் நம் நாட்டிற்குள் வந்தன. காட்டுயிர்ப் பேணலுக்கும் பிராணிநலத்திற்கும் வேறுபாடுகளை அறியாமல் ஆர்வலர்கள் குழப்பத்தை உண்டாக்கி வருகிறார்கள். இன்று நம்நாட்டில் 80 அரிய காட்டுயிரினங்கள், வெவ்வேறு இடங்களில் தெருநாய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதைப்பற்றிப் பேசவே கூடாது என்கிறார்கள் ஆர்வலர்கள். டிஜிட்டல் காமிராக்கள் தோன்றிய பிறகு காட்டுயிர்மீதான ஆர்வம் எழுந்தாலும் அது புகைப்படம் எடுப்பதோடு நின்றுவிடுகின்றது. இந்தப் புகைப்பட ஆர்வலர்கள் காட்டுயிர்ப் பேணலில் கரிசனம் காட்டுவதாகத் தெரியவில்லை.

சுதந்திரமடைந்ததிலிருந்து நம்நாடு பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கின்றது. கல்வி, போக்குவரத்து, மருத்துவம், விண்வெளி ஆய்வு எனப் பல துறைகள் மேம்பாடு கண்டுள்ளன. ஒரு துறை மட்டும் சரிந்துகொண்டேயிருக்கின்றது. சுற்றுச்சூழல். இது காட்டுயிரையும் உள்ளடக்கியது. நாடு முழுவதும் நீர் மாசு பட்டிருக்கின்றது. நிலத்தில் வேதியல் உரங்களை, பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கலந்துவிட்டோம். காடுகளைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். அவை சீரழிவது மட்டுமல்லாமல் அறிவியல், ராணுவம் என்ற பல காரணங்களால் குறுகிக்கொண்டே போகின்றது. நீர்நிலைகள், புல்வெளிகள் , கடற்கரைகள் நாசமாக்கப்பட்டதால் அவற்றை வாழிடமாகக்கொண்ட காட்டுயிர்கள் மறைகின்றன.

கிருஷ்ணன் சுற்றுச்சுழலை முழுமையாகப் பேண வேண்டும் என்றார். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டுவேலைசெய்து அதைக் காப்பாற்ற முடியாது. அதுதான் அவரது செய்தி. அது இன்று மிகவும் தேவையான செய்தி. மக்களிடையே இந்த விழிப்பு வரவில்லையே, கல்விச்சாலைகளில் இதுபற்றிப் பேச்சே இல்லையே என்று அங்கலாய்த்தார். இயற்கையுடன் அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாததால், புறவுலகை எதிர்கொள்ளும் இயல்பை இழந்து விடுகிறார்கள். சிறுவயது முதலே இயற்கையுடனும் மற்ற உயிர்களுடனும் தொடர்பு கொண்டிருக்கும் மக்கள் மனநிறைவுடனும் நிம்மதியாகவும் வாழ முடியும். 

மா. கிருஷ்ணனின் காட்டுயிர் தொடர்பான கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. 
அவரது பிற ஆக்கங்கள் வரும் இதழ்களில் வெளியாகும்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.