அக்டோபர் 2018
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • உரை
      அப்புண்ணியின் கதை
    • கதை
      ஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்
      3 நுண்கதைகள்
    • அஞ்சலி
      குல்தீப் நய்யார் (1923-2018) : முடிவிலிருந்து ஆரம்பம்
      கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (1918-2018) - கொள்கைக்காக வாழ்ந்தவர்
    • EPW பக்கங்கள்
      கும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா
      ‘பாதுகாவலர்’களே வேட்டைக்காரர்களாக மாறும்போது...
    • பதிவு
      நாவல் கதை கவிதை சினிமா
    • நேர்காணல்
      புதிய பாடத்திட்ட உருவாக்கத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே ஒத்துழைப்புக் கொடுத்தது - த.உதயச்சந்திரன்
    • திரை
      மேற்குத் தொடர்ச்சி மலை
    • சுரா நினைவு
      போர்ஹெஸ் - சுந்தர ராமசாமியின் டயரிக்குறிப்புகளில்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      வாசித்திராத கதைவெளி
    • கல்விச் சிறப்பிதழ்
      கற்பனையல்ல கதையல்ல!
      பாத்திரம் புதிது, பானம்?
      பள்ளிக் கட்டமைப்பும் சனநாயகமும்
      இற்று வீழும் வளையங்கள்
      மதிப்பீடு: காலமும் களமும்
      படிக்காத பிள்ளை
      ஒட்டகத்துக்குக் கோணல் ஓரிடத்திலா?
      பள்ளியில் பாலியல் கல்வி
    • கவிதைகள்
      ஏன் கொண்டாடுகிறீர்கள்?
      பாதசாரி
    • தலையங்கம்
      “ஆமேன்”
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2018 EPW பக்கங்கள் ‘பாதுகாவலர்’களே வேட்டைக்காரர்களாக மாறும்போது...

‘பாதுகாவலர்’களே வேட்டைக்காரர்களாக மாறும்போது...

EPW பக்கங்கள்
க. திருநாவுக்கரசு

காப்பகங்களில் வாழும் ஆதரவற்றோரைப் பாதுகாக்க வேண்டிய தங்களது கடமையிலிருந்து அரசும் குடிமைச் சமூகமும் தோல்வியடைந்துவிட்டன.

சமத்துவமற்ற, ஆணாதிக்கச் சமூகத்தில் நிலவும் சமூக, கலாச்சார,  பொருளாதாரச் சூழலில் கொடூரமான மனம் படைத்தவர்களிடமிருந்து எளிதில் பலியாகக்கூடிய பெண்கள், குழந்தைகளுக்குப்  பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஆனால் இவர்களைப் பாதுகாக்க வேண்டிய மக்கள் நல அரசும் குடிமைச் சமூகமும் தங்களது நிறுவனங்களின் மூலம் இவர்களைப் பாதுகாக்க முடியவில்லை. சமீபத்தில் பீகாரிலும் உத்திரபிரதேசத்திலுமுள்ள குழந்தைக் காப்பகங்களில் பெண்களும் சிறார்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் தொடர்ச்சியாக ஆளானமை அரசும் குடிமைச் சமூகமும் பாதுகாவலர்கள் என்ற தம் பணியை ஆற்றுவதில் தோல்வியுற்றிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. பல சமயங்களில் ‘பாதுகாவலர்’களே குற்றமிழைப்பவர்களாக இருப்பது நீதியின் சிதைவும் அபத்தமுமாகும். சிறார் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், 2015 ஜெஜெ சட்டம் (Juvenile Justice Care and Protection of Children) இயற்றப்பட்ட பிறகும், குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் இருந்தும் இது நடந்துள்ளது.

பீகாரில் முஸாபர்பூரிலுள்ள குழந்தைக் காப்பகத்தில் நடந்த பாலியல் துஷ்பிரயோகத்தை 2017இல் டாட்டா சமூக அறிவியல் கழகம் நடத்திய தணிக்கையில் அம்பலமானது. அந்தக் காப்பகத்திலிருந்த 42 பேரில் 34 பேர் ஏழிலிருந்து பதினேழுவயதிற்குட்பட்ட சிறுமிகள். இவர்கள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வல்லுறவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பீகாரிலுள்ள வேறு காப்பகங்களிலும் பதினான்கு பேர் இத்தகைய அவலங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்; இந்தக் காப்பகங்களில், தேவையான மிக அடிப்படை வசதிகளும் மிக அடிப்படையான சுதந்திரங்களும் இல்லாதிருப்பதையும் இந்தத் தணிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இதில் வேதனையை ஏற்படுத்தும் விஷயம் என்னவெனில் முஸாபர்பூர் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களில் ஏழு பேர் பெண்கள். இவர்களே ‘பராமரிப்பாளர்கள்’ ‘ஆலோசகர்கள்’ பணியில் இருப்பவர்கள்.

உத்திரபிரதேச தியோரியாவிலுள்ள காப்பகத்தில் நடந்த பாலியல் வல்லுறவு பற்றி அங்கிருந்த 10 வயது சிறுமி தப்பித்து வந்தபோது தெரியவந்தது. அங்கிருக்கும் சிறுமியர் இவ்வாறான தொல்லைகளுக்கு ஆளாவதை அந்தச் சிறுமி காவல்துறையிடம் தெரிவித்தார். அந்தக் காப்பத்தில் பதினெட்டுச் சிறுமிகள் காணாமல் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் காப்பகம் முறையாகப் பதிவு செய்யப்படாமல் இயங்கிவந்திருக்கிறது.

போதுமான சட்டங்கள் இல்லாமையாலல்ல, மாறாக கண்காணிப்பும் ஆய்வு செய்ய வேண்டிய குழுக்களும் இல்லாமைதான் இன்றைய பிரச்சனைக்குக் காரணம். எல்லா குழந்தைக் காப்பகங்களும் ஜெஜெ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குழந்தைப் பாதுகாப்பு அதிகாரி, குழந்தை நலக் குழு, சிறார் நீதி வாரியம் ஆகியன இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இவர்களது செயல்பாடுகள் பலவீனமாக இருப்பதால் இந்தக் காப்பகங்களை நடத்துவதில் ஏராளமான அதிகார முறைகேடுகளும் நிதி முறைகேடுகளும் மலிந்துகிடக்கின்றன. குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் நடத்திய கணக்கெடுப்பின்படி 32% குழந்தைக் காப்பகங்கள் மட்டுமே ஜெஜெ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன; 33% காப்பகங்கள் எந்த அமைப்பின் கீழும் பதிவு செய்யப்படவில்லை. இந்தக் காப்பகங்களைச் சமூகத் தணிக்கைகளுக்கு உட்படுத்தி இங்கு நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பது என்பது ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்தக் காப்பகங்களுக்கு நிதியுதவி அளிக்கும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கடமை. நடப்பது என்னவெனில், எந்த வழக்கமான ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படாமலே இயங்க இந்தக் காப்பகங்கள் அனுமதிக்கப்படுகின்றன; அல்லது முஸாபர்பூர் குழந்தைக் காப்பகத்தில் நடந்ததைப்போல் பல அரசு அமைப்புகள் வழக்கமான ஆய்வு மேற்பார்வையிடல்களைப் பல ஆண்டுகளாக மேற்கொண்ட போதிலும் மிகப் பரவலாக நடக்கும் வல்லுறவு எவையும் கண்டுபிடிக்கப்படுவதில்லை. 

அனைத்துக் குழந்தைக் காப்பகங்களும் முழுமையான சமூகத் தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்திற்கு இப்போது உத்திரவிடப்பட்டுள்ளபோதிலும், மாநில அரசுகளும் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளன. எனினும் பாதுகாக்க வேண்டியவர்களாலேயே எண்ணற்ற குழந்தைகளின் வாழ்க்கை ஏற்கெனவே நாசமாக்கப்பட்டுவிட்டது. இந்த விசாரணைகள் பல வல்லுறவு முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்துள்ளன. மேலும் பலவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முஸாபர்பூர் வழக்கை விசாரிக்கையில் காப்பகங்களில் வாழும் குழந்தைகளின் பாதுகாப்பு, நலன்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது. குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி இந்தியாவெங்கிலும் இத்தகைய காப்பகங்களில் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாகிய குழந்தைகளின் எண்ணிக்கை 1575. இதிலிருந்து தப்பிக்கும் இந்தக் குழந்தைகள் மீண்டும் இதே காப்பகங்களில் பாலியல்கங்களுக்கு ஆளாகின்றன. தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றாலும் பல சமயங்களில் அரசின் நடவடிக்கை அத்துடன் நின்றுவிடுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களின் நிலைமையை மாற்றுவதிலோ அல்லது இந்தக் காப்பகங்கள் நடத்தப்படுவதைத் தொடர்ந்து கண்காணிப்பிற்கு உட்படுத்துவதிலோ அக்கறை காட்டப்படுவதில்லை. இப்போது எழும் கொந்தளிப்புகள் அடங்கிய பிறகு பிரச்சினை அப்படி கண்டுகொள்ளப்படாமல் விடப்படும் என்பதே யதார்த்தம்.

வன்முறை மிகுந்த, சூழ்ச்சியான சூழல்களுக்குப் பலியாகும் குழந்தைகளும் பெண்களும் தங்களது நலன் குறித்த விஷயங்களில் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாதவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். அரசு, அதன் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்ற தங்கள் மீது அதிகாரம் கொண்டவர்களின் அல்லது சமூகத்தின் கருணையில் வாழ வேண்டிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள். அரசின் பாதுகாப்பில் இருக்கும் இவர்களின் நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர, சக மனிதர்களைக் கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் தகுதியற்றவர்களாகப் பார்க்கும், வன்முறையை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யும் பழங்கால, ஆணாதிக்கப் பார்வையை மாற்ற வேண்டும். எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் நிலையிலுள்ள மக்களும் எல்ல உரிமைகளும் கொண்ட குடிமக்களாக மதிக்கப்படுவதும் அவர்கள் தொடர்பான விஷயங்களில், நலன்களில் அவர்களது கருத்துக்களும் செயல்பாடுகளும் முக்கிய பங்காற்ற வேண்டும்.

இந்தக் குழந்தைக் காப்பகங்கள், விடுதிகளில் நிலவும் மோசமான நிலையின் காரணமாக இங்குள்ள சிறார்களும் ஆதரவற்ற பெண்களும் அவர்களது ‘பாதுகாவலர்’களிடமிருந்தும் பல்வேறு இன்னல்களிலிருந்தும் மீட்கப்பட வேண்டும். இத்தகைய காப்பகங்களில் வாழச் சபிக்கப்பட்டவர்களின் அடிப்படை மனித உரிமைகள், சுயமதிப்பு ஆகியவை மீண்டும் நிலைநாட்டப்படும் முன்னர் இந்தக் காப்பகங்களை நடத்திக்கொண்டிருக்கும் குற்றவாளிகள், கயவர்கள் களையெடுக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும். இத்தகைய காப்பகங்களை நடத்துபவர்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும்; அவர்களது பின்னணியை ஆராய வேண்டும்.

தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி,

ஆகஸ்ட் 18, 2018

தமிழில்: க. திருநாவுக்கரசு

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.