அக்டோபர் 2018
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • உரை
      அப்புண்ணியின் கதை
    • கதை
      ஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்
      3 நுண்கதைகள்
    • அஞ்சலி
      குல்தீப் நய்யார் (1923-2018) : முடிவிலிருந்து ஆரம்பம்
      கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (1918-2018) - கொள்கைக்காக வாழ்ந்தவர்
    • EPW பக்கங்கள்
      கும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா
      ‘பாதுகாவலர்’களே வேட்டைக்காரர்களாக மாறும்போது...
    • பதிவு
      நாவல் கதை கவிதை சினிமா
    • நேர்காணல்
      புதிய பாடத்திட்ட உருவாக்கத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே ஒத்துழைப்புக் கொடுத்தது - த.உதயச்சந்திரன்
    • திரை
      மேற்குத் தொடர்ச்சி மலை
    • சுரா நினைவு
      போர்ஹெஸ் - சுந்தர ராமசாமியின் டயரிக்குறிப்புகளில்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      வாசித்திராத கதைவெளி
    • கல்விச் சிறப்பிதழ்
      கற்பனையல்ல கதையல்ல!
      பாத்திரம் புதிது, பானம்?
      பள்ளிக் கட்டமைப்பும் சனநாயகமும்
      இற்று வீழும் வளையங்கள்
      மதிப்பீடு: காலமும் களமும்
      படிக்காத பிள்ளை
      ஒட்டகத்துக்குக் கோணல் ஓரிடத்திலா?
      பள்ளியில் பாலியல் கல்வி
    • கவிதைகள்
      ஏன் கொண்டாடுகிறீர்கள்?
      பாதசாரி
    • தலையங்கம்
      “ஆமேன்”
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2018 பதிவு நாவல் கதை கவிதை சினிமா

நாவல் கதை கவிதை சினிமா

பதிவு
ரமேஷ் கண்ணன்

இலக்கியம் வாழ் வாகிப்போன பிறகு இலக்கியக் கூட்டங்கள் நடை பெறும் நாளை நான் வேறெப்படி சொல்லக் கூடும். திருவிழாவின் போதெல்லாம் மழை தவறுவதில்லை. மழை இடியும் மின்னலு மான இருள் கப்பிய பொழுதில் மழை அங்கியோடு சிறு தூறல் வாய்க்கையில் வெளியேறி விட்டேன். அவ்வப்போது மின்னல் வழி காட்ட, சாலை கொஞ்சம் அனாதையாய்க் கிடந்தது. தூங்கா நகரை நெருங்குகையில் போக்குவரத்து நெரிசல், நெஞ்சினைத் தொடும் மழை நீர். ரயில் நிலையம் துறைமுகம் ஆகிவிட்டது. தக்கிமுக்கி நிகழ்வு நடக்கும் இடத்திற்குச் சென்றேன்.

குளச்சல் யூசுப் மொழி பெயர்த்திருந்த எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘நாலு கெட்டு நூல்’ முதலில் வெளியிடப்பட்டது. அதிலிருந்து ஒரு பகுதியை யூசுப் வாசித்தார். நூல் மீதான தன்னுடைய பார்வையை நிர்மால்யா முன்வைத்தார்.

குமாரநந்தன் தனது ‘நகரப்பாடகன்’ தொகுப்பிலிருந்து கதை வாசித்துக் கொண்டிருந்தார். எழுத்தாளர்கள் ஏற்புரைக்குப் பதிலாக தங்கள் படைப்பின் சிறுபகுதியை வாசித்தனர். நூல் குறித்து சமயவேல் கச்சிதமான உரையை வழங்கினார். கட்டுரை வடிவில் இருந்தபோதும் காலம் கருதிச் சுருக்கமாகக் கதைகளை விலாவாரியாகப் பொருள் சார்ந்து பிரித்துக் கூறினார்.

அடுத்ததாக ந.ஜயபாஸ்கரனின் கவிதைத்தொகுப்பு. ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்.’

ந. ஜயபாஸ்கரன் தான் நினைவுகூர வேண்டியவர்களுக்காக சில நிமிடங்களை எடுத்துக் கொள்கிறேன் என்றார். அவர் எழுதிய கவிதைகளை வாசிக்க அரங்கம் பொது அமைதிக்கு வந்தது. நூல் குறித்துப் பேசிய லிபி ஆரண்யா தனக்கும் கவிஞருக்கும் ஏற்பட்ட அறிமுகத்தை ஒரு கதைசொல்லியாக அரங்கம் அதிரச் சிரிக்க வைத்து நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார். கவிஞரும் கவிதையும் ஒன்றா வேறுவேறா என்றால் ஜயபாஸ்கரனைப் பொறுத்தவரை அவரும் கவிதைகளும் ஒன்றே. பசவண்ணனின் கவிதையில் உடலைக் கொண்டு செல்லும் கால்களே தூண்கள், சிரசே கலசம் என்பதைப் போல் கவிதைகள் தன்னுடலைக் கேள்வியாக முன்வைத்து சொக்கனிடமும் சொக்கியிடமும் நிற்கிறது என்றார். எமிலியின் மீதான ஈர்ப்பும் கவிதையில் இருப்பதைக் குறிப்பிட்டார். 

பெருமாள் முருகன் அவர்களின் திரைப்படம் தொடர்பான கட்டுரைத்தொகுப்பு ‘நிழல்முற்றத்து நினைவுகள்.’

பெருமாள் முருகன் இரண்டாம் பதிப்பின் முன்னுரையையும் மற்றும் முதல் பதிப்பின் முன்னுரையும் வாசித்தார். பேராசிரியர் பிரபாகரன் நிகழ்த்திய உரை அற்புதமானது. திரைப்படம் குறித்து நான்கு வகையான பார்வையில் எழுத்துக்கள் வருவதைக் கூறினார். திரைப்படத்தில் உள்ளடக்கத்தை அதிகம் பேசுவது அத்தனை சரியல்ல என்றார். “திரைப்படம் அளிக்கும் சுவை குறித்தும் பேசவேண்டும். திரையரங்கம் தான் சாதி மதங்களைத் தாண்டி ஒரு சமூகம் ஒன்றாக அமர்ந்த நிலையை உருவாக்கியது. ஆனால் சமீபத்திய போக்குகளில் சில திரைப்படங்களைத் திரையரங்கங்கள் தவிர்ப்பது வருத்தத்திற்குரியது; ஆய்வின்பாற்பட்டது. பெருமாள் முருகனின் கட்டுரைத் தொகுப்பு அந்த வகையில் புதிது கவனத்திற்குரியது” என்றார். ஸ்டாலின் ராஜாங்கம் நிகழ்ச்சியைக் கச்சிதமாகத் தொகுத்தார். புனைவு செந்தி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

ரமேஷ் கண்ணன்

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.