ஜனவரி 2019
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      கண்ணாடிச் சொற்கள்
      இருமுகம் ஒரு நூல்
      இரு பெண்கள் இரு நாவல்கள்
      மண்ணும் மனிதர்களும்
    • கதை
      அன்பு வழி
      முடிவற்ற தேடல்
      பாங்கு
      உடன்பிறந்தது
    • அஞ்சலி
      பிரபஞ்சன் (1945 - 2018) – முன்னோடி - ஆசான்
      பிரபஞ்சன் (1945 - 2018) – சுமதியும் மூர்த்தியும் இன்னும் சில மனிதர்களும்
      ஐராவதம் மகாதேவன் (1930-2018) – மொழி முதல் தேடியவர்
      ஐராவதம் மகாதேவன் (1930-2018) – இதழியலில் புதுமை கண்டவர்
    • விருதுகள் 
      ‘விளக்கு’ விருது 2017
      ‘இயல்’ விருது 2018
    • EPW பக்கங்கள்
      வற்றாத ஆறுகளைச் சாகடித்தல்
      பணமதிப்புநீக்க அரசியலின் ‘உண்மையை உணர்தல்’
    • பதிவு
      எல்லா பொருளும் இதன்பாலுள்ள
      நவீன உரைநடையின் தனித்துவமான குரல்
      பூர்ணகல்யாண ராகத்தில் முடிந்த மாலை
    • திரை
      ஜனரஞ்சக மதிப்பீடுகளை தாங்கும் ரூபா
    • சென்னை புத்தக காட்சி 2019 வெளியீடு
      புலன்களின் எல்லை கடந்து
      படிமிகள் - வாராணசி (நாவல்)
      கபன் துணி - பணிக்கர் பேத்தி (நாவல்)
      சருமத்தின் வாசனை - இழப்பின் வரைபடம் (நாவல்)
      கழிவின் எரு நிலம் - வசைமண்
      இறுதிச்சுற்று - சேவல்களம் (நாவல்)
      செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கவிதைகள்
      சாலமிகுத்துப் பெயின்
      எம். யுவன்
      அனார் கவிதைகள்
    • தலையங்கம்
      வருமுன் காக்க
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2019 EPW பக்கங்கள் வற்றாத ஆறுகளைச் சாகடித்தல்

வற்றாத ஆறுகளைச் சாகடித்தல்

EPW பக்கங்கள்
க. திருநாவுக்கரசு

 

ஓர் ஆறு ஆறாக இருக்க அதில் நீர் ஓட வேண்டும். அப்போதுதான் ஆற்றில் ஓடும் நீரைப் ‘பயன்பாட்டிற்கு’ உட்படுத்த முடியும், அது ‘வீணாவதை’த் தடுப்பதை நியாயப்படுத்த முடியும். ஆனால் இப்போது இந்தப் பயன்பாடு ஆறு ‘உயிருடன்’ இருக்கிறதா என்பதை நிர்ணயிக்க முடியாத அளவிற்கு அதிகரித்துவிட்டது! மின்சாரம் தயாரிக்க ஆற்றின் போக்கு கால்வாய்களில் திருப்பிவிடப்படுகிறது அல்லது ஆறு முழுவதும் கழிவுகளாலும் நச்சுக்களாலும் நிரம்பியிருக்கிறது அல்லது ஆறானாது ஏதோ வடிகால் போன்று கருதப்பட்டு வெட்டிப் பிறவற்றுடன் இணைக்கப்படுகிறது; இந் நிலையில் ஓர் ஆறு உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பதைச் சொல்வதே கடினமாகும். ஓர் ஆறு உயிருடன் இருக்கவே உதவி தேவைப்படுகின்ற நிலையில் அது உயிருடன் இருக்கிறதா என்று சொல்வது கடினம். ஓர் ஆற்றின் இயல்பையே சந்தேகத்திற்குள்ளாக்குகிற வகையில் அதன் போக்கு மாற்றப்படும்போது, ஆற்றின் உள்ளார்ந்த இயல்பான அதன் நிலவியல் - சூழலியல் செயற்பாடுகள் தடுக்கப்படுகிறபோது அந்த ஆறு உயிருடன் இருப்பதை நிர்ணயிப்பதே கடினம். ஓர் ஆறு சிதறல்களாகத்தான், துண்டுதுண்டாகத்தான் இருக்குமென்றால் அதன் சூழலியல் ஒருங்கிணைப்பு மறுக்கப்படும் வகையில், தன்னைத்தானே அது புதுப்பித்துக்கொள்ள முடியாமல் மீறலுக்குள்ளாகும் என்றால் அது உயிருடன் இருக்கிறது என்று சொல்வதே கடினம்.

பிற ஆறுகளும் சம அளவிலேயே ஆபத்திலிருக்கின்றன; சம அளவிலேயே முக்கியத்துவம் உடையவை என்றாலும் கங்கைக்கு அரசின் கூடுதல் கவனம் அளிக்கப்பட்டும், அப்படி அளிக்கப்படுவதன் காரணமாகவும் கங்கை ஆபத்தான நிலையிலிருக்கிறது. ‘கங்கை விடுத்த அழைப்பை’ ஏற்று நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிட்டார். ஆனால், இந்துத்துவாவின் வழியிலேயே கங்கைத்துவாவும் அடிப்படை உணர்ச்சிகளைத் தூண்டிவிடவே பயன்படுத்தப்பட்டது, கங்கையின் நலன் காற்றில் பறக்கவிடப்பட்டது. சுற்றுச்சூழல் பொறியியலாளராக இருந்து சந்நியாசியாக மாறிய ஜி.டி. அகர்வாலின் மரணம் யாருக்கும் தெரியவராமலே போனது. கங்கையின் குரல் பிரதமருக்குக் கேட்க வேண்டுமென்பதற்காக 112 நாட்கள் உண்ணாவிரதமிருந்தவர் அவர். மணல் அள்ளுதல், மின்சார உற்பத்தி ஆகியவற்றால் கங்கை பல இடங்களில் ஒழுகிச் செல்லும் ஓடையாகக்கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்தாக வேண்டுமென்பதுதான் அகர்வாலின் கோரிக்கையும் ஒட்டுமொத்த உத்ராகண்ட் மாநிலத்தின் தொடர்ச்சியான கோரிக்கையும் ஆகும். கங்கையின் வற்றாமைக்கு மூலமான இமயமலையும் காய்ந்தும் தேய்ந்தும் அழிந்தும் வருகிறது.

ஒட்டுமொத்த ஆற்று நீரும் ஆற்றுப்படுகைகளிலிருந்து திருப்பிவிடப்பட்ட பிறகு இருபதாயிரம் கோடி திட்டமான நமமி கங்கை அளித்த வாக்குறுதியான தடைபடாத, தூய்மையான நீரோட்டம் எப்படி சாத்தியம்? கங்கையின் ‘முழுமை’யை மீட்டுக்கொண்டுவருவது நமமி கங்கையின் நோக்கம் என்பதால் தடையில்லாத, தூய்மையான நீரோட்டம் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் ஓர் ஆறு ஆறாக இருக்கத் தேவையான குறைந்தபட்ச நீரோட்டத்தைக்கூட திட்டத்தின் உரிமையாளர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை, இதைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்படவில்லை, குறிப்பிடப்பட்ட நீரோட்ட அளவுகூடத் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருந்தது.

யதார்த்த நிலைமைகளைச் சரிசெய்வதையும் அதற்கான பொருண்மையான நடவடிக்கைகளை எடுப்பதையும் விடுத்து அடையாளபூர்வமாகப் பிரச்சினையை அணுகி அதைச் சிறுமையாக்குவதன் மூலமோ அல்லது கார்ப்போரேட் நலன்களுக்கு உண்மையாக இருக்கும் வகையில் ஆற்றின் நீரோட்டத்தைக் குறைக்கும் வகையிலோ பெரும் திட்டங்களை அறிவிப்பது என்று பிரதமர் எதிர்த் திசையில் சென்றுகொண்டிருக்கிறார். ஆற்றின் போக்கைச் சுதந்திரமாக விடுவது, நீரோட்ட அளவைக் குறையாது பார்த்துக்கொள்வது, அதில் கலக்கும் கழிவுகளைக் கண்காணிப்பது, தண்ணீரைப் பெருமளவிற்கு எடுப்பதைக் கண்காணிப்பது, காடுகளைப் பாதுகாத்து அதிகரிப்பது, ஆறுகளுக்கு உதவியாக இருக்கும் நீர்நிலைகளைப் பலப்படுத்துவது ஆகியவற்றை விடுத்து ஆற்றைப் புதுப்பிப்பது என்பதை ஆற்றின் கரையோரங்களை அழகுபடுத்துவது என்பதாகப் பல சமயங்களில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இது ஆற்றின் கரைகளில் கட்டடங்கள் உருவாகவும் ஆக்ரமிப்புகளுக்கும் வணிகச் செயல்பாடுகளுக்கும் ஆறு உயிருடன் இருக்கிறது என்று காட்டவும் பிற நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் திருப்பிவிடப்படுவதற்கு வழிவகுத்தது. 

கங்கையின் தொடக்கப் பகுதிகளில் அதன் நீரோட்டம் இல்லாது ஆக்கப்பட்ட பிறகு ஹல்தியா - வாரணாசி இடையேயான 1600 கிமீ தூரத்திற்கான ஜல் மார்க் விகாஸ் என்னும் 5369 கோடி ரூபாய் திட்டம் உலக வங்கி உதவியுடன் செயற்படுத்தப்படுகிறது. ஆற்றுக்கு ஏற்பட்ட, ஏற்படவுள்ள பாதிப்பைப் புறக்கணித்துவிட்டு அந்நிறுவனம் அனுப்பிய சரக்கைப் பிரதமர் மோடி வாரணாசியில் வரவேற்றார். 1500 டன் நிறைகொண்ட கப்பல்கள் போகுமளவிற்குக் கங்கையின் கொள்ளளவு இல்லாததால் அதைப் பல கால்வாய்களுடன் சேர்ப்பது, ஆற்றை ஆழப்படுத்துவது, படிந்திருக்கும் மணலை அகற்றுவது போன்றவை இந்தத் திட்டத்தில் செய்யப்படுகின்றன. எடுக்கப்படும் மணல் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தங்கள் அதானியின் நிறுவனம் உட்படபல பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தரப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் கடுமையான மாசுபடுதல் முற்றிலுமாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளது. மீன்கள் அழிவது குறித்தோ மீனவர்கள், படகோட்டிகளின் வாழ்வாதரங்கள் அழிவது குறித்தோ இவர்களுக்குக் கவலையில்லை. வாரணாசி யிலுள்ள ஆமைகள் சரணாலயத்தைப் பட்டியலிலிருந்து நீக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. ஏற்கெனவே அழிவின் விளிம்பிலிருக்கும் கங்கை ஆற்று டால்பின்கள் முற்றிலுமான அழிவை நோக்கிச் செலுத்தப்படுகின்றன.

ஓர் ஆற்றின் உயிர்ப்பு, ஆரோக்கியம் என்பது அதனுடன் இணக்கமாக வாழும் உயிரினங்களுக்கு அதனால் ஆதரவளிக்க முடிவதில்தான் இருக்கிறது. ஆனால் அதை வணிக நோக்கங்களுக்கான நீர்வழிப்பாதையாக, ஆற்றலுக்கான மூலமாக, மதச் சுற்றுலாவிற்காகப் பயன்படுத்திக்கொள்வதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. ஆற்றிலிருந்து எவ்வளவு எடுக்கலாம் என்று பார்ப்பது தொடரும்வரை அதன் மாசுபடுதல் தொடரும். இந்த மீறல்களைப் பிடியாணையின்றிக் கைது செய்வதற்கான குற்றங்களாக அறிவித்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள தேசிய ஆறு கங்கை (புதுப்பித்தல், பாதுகாப்பு,  மேலாண்மை) மசோதாவின் கீழ் ஆயுதம் தாங்கிய கங்கை பாதுகாப்புக் காவலர்களை அமர்த்தினாலொழிய பெரிய அளவில் அரசாங்கமே செய்துகொண்டிருக்கும் இந்தக் குற்றங்களைத் தடுத்துவிட முடியாது.  

தலையங்கம், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, டிசம்பர் 1, 2018 

தமிழில்: க. திருநாவுக்கரசு

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.