ஜனவரி 2019
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      கண்ணாடிச் சொற்கள்
      இருமுகம் ஒரு நூல்
      இரு பெண்கள் இரு நாவல்கள்
      மண்ணும் மனிதர்களும்
    • கதை
      அன்பு வழி
      முடிவற்ற தேடல்
      பாங்கு
      உடன்பிறந்தது
    • அஞ்சலி
      பிரபஞ்சன் (1945 - 2018) – முன்னோடி - ஆசான்
      பிரபஞ்சன் (1945 - 2018) – சுமதியும் மூர்த்தியும் இன்னும் சில மனிதர்களும்
      ஐராவதம் மகாதேவன் (1930-2018) – மொழி முதல் தேடியவர்
      ஐராவதம் மகாதேவன் (1930-2018) – இதழியலில் புதுமை கண்டவர்
    • விருதுகள் 
      ‘விளக்கு’ விருது 2017
      ‘இயல்’ விருது 2018
    • EPW பக்கங்கள்
      வற்றாத ஆறுகளைச் சாகடித்தல்
      பணமதிப்புநீக்க அரசியலின் ‘உண்மையை உணர்தல்’
    • பதிவு
      எல்லா பொருளும் இதன்பாலுள்ள
      நவீன உரைநடையின் தனித்துவமான குரல்
      பூர்ணகல்யாண ராகத்தில் முடிந்த மாலை
    • திரை
      ஜனரஞ்சக மதிப்பீடுகளை தாங்கும் ரூபா
    • சென்னை புத்தக காட்சி 2019 வெளியீடு
      புலன்களின் எல்லை கடந்து
      படிமிகள் - வாராணசி (நாவல்)
      கபன் துணி - பணிக்கர் பேத்தி (நாவல்)
      சருமத்தின் வாசனை - இழப்பின் வரைபடம் (நாவல்)
      கழிவின் எரு நிலம் - வசைமண்
      இறுதிச்சுற்று - சேவல்களம் (நாவல்)
      செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கவிதைகள்
      சாலமிகுத்துப் பெயின்
      எம். யுவன்
      அனார் கவிதைகள்
    • தலையங்கம்
      வருமுன் காக்க
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2019 கட்டுரை இருமுகம் ஒரு நூல்

இருமுகம் ஒரு நூல்

கட்டுரை
பெருமாள்முருகன்

 

‘மாதொருபாகன்’ நாவலின் முடிவிலிருந்து இருவிதத் தொடக்கத்தைக் கொண்டு ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ என்னும் தலைப்புகளில் இரண்டு நாவல்கள் எழுதினேன்.  அவை தனித்தனி நூல்களாக  2014 டிசம்பரில் வெளியாயின. ஒரு பதிப்போடு நின்ற அவை 2016 முதல் மீண்டும் அச்சுக்கு வந்தன. தற்போது ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப்பட்டுப் ‘பெங்குவின்’ வெளியீடாக வந்துள்ளன. ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு தொடர்பான ஓர் உரையாடலில் எனக்குத் தமிழின் முதல் நாவலாசிரியரான மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளை எழுதிய இரண்டு நாவல்களும் ஒரே நூலாகப் பதிப்பிக்கப்பட்ட செய்தி நினைவுக்கு வந்து கண்ணனிடம் தெரிவித்தேன்.  ‘அந்த முறையில் தமிழில் வெளியிடலாமே’ என்று கண்ணன் ஆர்வமானார். அவர் ஆர்வம் செயல் வடிவம் பெற்று அவ்வடிவில் இப்போது (2018, டிசம்பர்)  ‘ஆலவாயனும் அர்த்தநாரியும்’ ஒரே நூலாக  வெளியாகின்றன. 

இப்பதிப்புக்கு முன்னோடி, சக்தி காரியாலயம் 1957ஆம் ஆண்டு வெளியிட்ட ‘பிரதாப முதலியார் சரித்திரம்,’ ‘சுகுணசுந்தரி’ பதிப்பாகும். சக்தி வை. கோவிந்தன் தமிழ்ப் பதிப்பிலும் அச்சிலும் பல சோதனை முயற்சிகளை முன்னெடுத்து வெற்றிகரமாக அவற்றைச் செயல்படுத்திய பதிப்பாளர்.  ‘மலிவு விலைப் பதிப்பு’ என்னும் வரிசை ஒன்றைத் தொடங்கி ‘மகாகவி பாரதியார் கவிதைகள்’ நூலை வெளியிட்டார். அதற்குப் பெரும் ஆதரவு 

கிடைத்தது. தொடர்ந்து ‘திருக்குறள் பரிமேலழகர் உரை’ நூலையும் அதே வரிசையில் வெளியிட்டார். மூன்றாவதாகத் தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்தை’ வெளியிடலாம் என முடிவு செய்து அறிவிப்பு செய்தார். மலிவு விலைப் பதிப்பின் நோக்கமாக இரண்டை அவர் கொண்டிருந்தார். முக்கியமான நூல் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகச் சென்றடைய வேண்டும்; அவர்களின் பொருளாதார நிலைக்குகேற்ப விரும்பி வாங்கும் விலையில் இருக்க வேண்டும். குறைந்த பிரதிகள் அச்சிட்டால் அதிகமான விலை வைக்க வேண்டியிருக்கும். பிரதிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் விலையைக் குறைக்கலாம். இதுதான் அவர் திட்டம். 

பதிப்புரையில் ‘இந்த அரிய புத்தகம் இன்றுள்ள காகித விலை, அச்சுக்கூலி, மற்ற செலவுகள் இருக்கும் நிலையில் ஆயிரம் புத்தகங்கள் அச்சிட்டால் மூன்றரை ரூபாய் விலை வைத்து விற்றால்தான் பதிப்பாளர் ஒரு சிறிது லாபம் பெறலாம். மூன்றரை ரூபாய் விலைக்குப் புத்தகம் என்கிற நிலையில் பெரும்பாலான தமிழ் மக்களின் பொருளாதார நிலை இல்லை. இந்த அரிய புத்தகத்தைப் பெரும்பாலான தமிழ் மக்கள் படிக்க வேண்டும் என்று எண்ணினோம்’ (ப.5) என்று எழுதுகிறார். இந்த நாவலை ஒன்றரை ரூபாய் விலைக்குக் கொடுக்கலாம் என முடிவு செய்கிறார்.  கணக்கிட்டுப் பார்க்கும்போது முந்நூறு பக்கங்கள் வருகின்றன. அதற்கு ஒன்றரை ரூபாய் அதிகம் எனக் கருதுகிறார். அப்போது வேதநாயகம் பிள்ளையின் பேரர் வந்து ‘சுகுண சுந்தரி’யைக் கொடுக்கிறார். இரண்டையும் சேர்த்து வெளியிட்டால் நானூறு பக்கம் வரும், ஒன்றரை ரூபாய்க்குக் கொடுக்கலாம் என முடிவு செய்து அறிவிப்பும் வெளியிடுகிறார். ஆயிரமாயிரம் மக்கள் நூல் வேண்டும் எனப் பதிவு செய்கிறார்கள். ஆனால் அச்சுக் கோக்கும் போதுதான் நானூறு பக்கம் வராது, குறையும் எனத் தெரிகிறது. எனவே உடனடியாக விலையைக் குறைத்து ரு.1.25 என மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடுகிறார். ஆறாயிரம் பிரதிகள் அச்சிடச் சொன்னார். ஆனால் ஏழாயிரம் பிரதிக்கு ‘ஆர்டர்’ வந்துவிடு

கிறது. மிகவும் மகிழ்ச்சியுடன் பிரதிகளின் எண்ணிக் கையைக் கூட்டிப் பத்தாயிரம் அச்சிடச் சொல்கிறார். 

ஒரு நூலை எப்படி வெளியிட வேண்டும் என்பதில் உள்ளடக்கம், வடிவமைப்பு இரண்டிலும் அவருக்குத் தெளிவும் படைப்புணர்வும் இருந்துள்ளன என்பதை இன்று இந்த நூலைக் காண்கையிலும் உணர முடிகிறது. உள்ளடக்கம் பற்றிய தம் கருத்தை  ‘இந்தப் புத்தகத்தை வெளியிடும்போது ஆசிரியர் எழுதியபடியே கூடுதல் குறைச்சல் இல்லாமல் அப்படியே வெளியிடத் துணிந்தோம். அவர்கள் எழுதிய சொற்களை மாற்றியோ கூட்டியோ குறைத்தோ வெளியிடுவது ஆசிரியரை அவமதிப்பதாகும் என்றுகூட எண்ணுகிறோம். அது மட்டுமல்லாமல் புத்தகத்தைச் சுருக்கி வெளியிடுவதும் எங்களுக்குப் பிடிக்காத விஷயம். சுருக்கம் செய்யும்போது ஆசிரியர் எந்த விஷயத்தை மக்கள் படிக்க வேண்டும் என்று எண்ணினாரோ அந்த விஷயங்களைச் ‘சுருக்காளர்’ சுருக்கிடவும் கூடும். ஆகையால் அப்படி வெளியிடவும் எங்களுக்கு மனத்துணிவு இல்லை’ (ப.6) என்று விவரிக்கிறார்.

ஆனால் புத்தக வடிவமைப்பைப் பற்றிப் ‘புதிய முறையில் புத்தகத்தின் மேலட்டையைத் தயாரித்துத் தந்த ‘சித்திரக்காரரைப்’ பாராட்டும் குறிப்பு ஒன்றைத் தவிர வேறெதுவும் அவர் சொல்லவில்லை. நூலைக் கொண்டு நாம்தான் அறிந்துகொள்ள வேண்டும். பக்கக் குறைவுக்காக நூலின் உள்ளடக்கப் பகுதி சற்றே சிறிய எழுத்துக்களிலும் வரி இடைவெளியைக் குறைத்தும் அச்சுக் கோக்கப்பட்டுள்ளது. புதிதாக வார்க்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு அச்சுக் கோத்திருப்பதாலும் நல்ல தாளில் அச்சிட்டிருப்பதாலும் அழகும் தெளிவும் கொண்டு வாசிப்புக்கு உகந்ததாக நூல் அமைந்திருக்கின்றது. 

இது ஒரு நூலல்ல; இரண்டு நூல்கள். ஒரு நூல் கட்டமைப்புக்குள் இரண்டு நூல்கள். மாயூரம் ச.வேதநாயகம் பிள்ளை 1879ஆம் ஆண்டு (1876 என்று இப்பதிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது பிழை.) ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலை எழுதினார். இது முதல் தமிழ் நாவல் என்னும் பெருமை பெற்றதாகும். பின் 1887ஆம் ஆண்டு அவரே ‘சுகுண சுந்தரி’ நாவலை வெளியிட்டார். தமிழகத்தில் வெளியான இரண்டாம் நாவல் இது. சக்தி காரியாலய வெளியீட்டில் இரண்டு நூல்களும் உள்ளன. ஒரு நூல் முடிந்த பிறகு இன்னொரு நூல் தொடங்கும் முறையில் இதன் வடிவமைப்பு அமையவில்லை. நூலுக்கு முன்புறம் உண்டே தவிரப் பின்புறம் கிடையாது. அதாவது நூலின் ஒருபுறம் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்குகிறது; இன்னொரு புறம் ‘சுகுணசுந்தரி’ தொடங்குகிறது. நூலின் இருபுறமும் முன்புறம்தான். ஒருபுறத்தில் இருந்து இன்னொரு புறத்திற்குச் செல்லும்போது தலைகீழாகத் திருப்பிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். ஒருபுற அட்டையில் பெரிய எழுத்தில் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எனப் பெரிய எழுத்திலும் ‘சுகுணசுந்தரியும்’ எனச் சிறிய எழுத்திலும் தலைப்பு. அதே போல இன்னொருபுற அட்டையில் ‘சுகுண சுந்தரி’ எனப் பெரிய எழுத்திலும் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எனச் சிறிய எழுத்திலும் தலைப்பு. 

பின்புறமற்ற, இரண்டு முன்புறம் கொண்ட இவ் வடிவமைப்பில்  தமிழில் வெளியிடப்பட்ட ஒரே நூல் இதுதான் என்று கருதுகிறேன். அவ்வெளியீடு வந்து அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது  அவ்வடி வமைப்பைப் பின்பற்றி ‘ஆலவாயனும் அர்த்தநாரியும்’, அல்ல அல்ல,  ‘அர்த்தநாரியும் ஆலவாயனும்’ - சரி, எதையாவது ஒன்றை முதலில் சொல்லித்தானே ஆக வேண்டும் - வெளியாகின்றன. ‘மலிவு விலைப் பதிப்பு’ போலவே காலச்சுவடும் ‘விலையடக்கப் பதிப்பில்’ ரூ.225/- விலைக்கு வெளியிடுகிறது. முன்னோடிப் பதிப்பின் வடிவமைப்பில் என் நூல்கள் வெளியாவது குறித்துப் பெருமகிழ்ச்சி.

மின்னஞ்சல்: murugutcd@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.