ஜனவரி 2019
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      கண்ணாடிச் சொற்கள்
      இருமுகம் ஒரு நூல்
      இரு பெண்கள் இரு நாவல்கள்
      மண்ணும் மனிதர்களும்
    • கதை
      அன்பு வழி
      முடிவற்ற தேடல்
      பாங்கு
      உடன்பிறந்தது
    • அஞ்சலி
      பிரபஞ்சன் (1945 - 2018) – முன்னோடி - ஆசான்
      பிரபஞ்சன் (1945 - 2018) – சுமதியும் மூர்த்தியும் இன்னும் சில மனிதர்களும்
      ஐராவதம் மகாதேவன் (1930-2018) – மொழி முதல் தேடியவர்
      ஐராவதம் மகாதேவன் (1930-2018) – இதழியலில் புதுமை கண்டவர்
    • விருதுகள் 
      ‘விளக்கு’ விருது 2017
      ‘இயல்’ விருது 2018
    • EPW பக்கங்கள்
      வற்றாத ஆறுகளைச் சாகடித்தல்
      பணமதிப்புநீக்க அரசியலின் ‘உண்மையை உணர்தல்’
    • பதிவு
      எல்லா பொருளும் இதன்பாலுள்ள
      நவீன உரைநடையின் தனித்துவமான குரல்
      பூர்ணகல்யாண ராகத்தில் முடிந்த மாலை
    • திரை
      ஜனரஞ்சக மதிப்பீடுகளை தாங்கும் ரூபா
    • சென்னை புத்தக காட்சி 2019 வெளியீடு
      புலன்களின் எல்லை கடந்து
      படிமிகள் - வாராணசி (நாவல்)
      கபன் துணி - பணிக்கர் பேத்தி (நாவல்)
      சருமத்தின் வாசனை - இழப்பின் வரைபடம் (நாவல்)
      கழிவின் எரு நிலம் - வசைமண்
      இறுதிச்சுற்று - சேவல்களம் (நாவல்)
      செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கவிதைகள்
      சாலமிகுத்துப் பெயின்
      எம். யுவன்
      அனார் கவிதைகள்
    • தலையங்கம்
      வருமுன் காக்க
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2019 EPW பக்கங்கள் பணமதிப்புநீக்க அரசியலின் ‘உண்மையை உணர்தல்’

பணமதிப்புநீக்க அரசியலின் ‘உண்மையை உணர்தல்’

EPW பக்கங்கள்
க. திருநாவுக்கரசு

 

அரசியல்வாதிகள் தங்களது வசதிக்கேற்றபடி பொய்களைப் புனைவது, புள்ளிவிவரங்களை - தரவுகளை மட்டுப்படுத்துவது, உண்மைகளைத் திரிப்பது ஆகியவை அனைவருக்கும் தெரிந்த உண்மை. ‘வசதிக்கேற்றபடி’ என்பதன் வரம்பை நிர்ணயிப்பது தாங்கள் நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளை மறைக்கும் அரசியல் அவசரமே, அதிலும் குறிப்பாக தங்களது ‘தலையெழுத்தை நிர்ணயிக்கும்’ தேர்தல் வரவுள்ள நிலையில்! பல்வேறு பொருளாதார, சமூகக் கொள்கைத்திட்டங்கள் குறித்து அப்பட்டமான பொய்களைச் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறது அரசு; 2014இல் வாக்காளர்களுக்கு நரேந்திர மோடி அள்ளிவீசி, ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு அவற்றை நிறைவேற்றுவதைப் பற்றி அக்கறை கொள்ளாததை நேரடியாகத் தொடர்புபடுத்துவது எந்த வகையிலும் எளிமைப்படுத்தல் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பாரதீய ஜனதா கட்சி குறித்த நமது அனுபவத்தின் அடிப்படையில்  இதைச் சொல்ல முடியும். ஆனால் இந்த ஏமாற்றுகளை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தின் ஏமாற்றுகளை அவர்கள் ‘பெரிதும் மிகைப்படுத்தப்பட்ட உண்மைகள்’ (‘பொய்கள்’ அல்ல என்பதை கவனிக்கவும்) என்றும்,  இந்தியாவை ‘சுத்தப்படுத்துவதற்கான’ மாற்றத்தை நோக்கிய வலிமையான வேண்டுகோள் என்றும் அதை எண்ணும் துணிவு ‘தமது அரசுக்கு மட்டுமே’ இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இந்த வார்த்தை ஜாலக்காரர்கள் என்னதான் ஆதரித்தபோதிலும் பாஜகவின் சமீபத்திய பொருளாதார ஏமாற்றுகள் ஆரோக்கியமான பொருளாதாரத் தர்க்கத்திலிருந்து வெகு தூரத்திலிருக்கின்றன. இந்தக் குற்றத்திற்கான பெரும் பங்கு, பணமதிப்பு நீக்கத்தை ‘அற நடவடிக்கை’ என்று தானாகவே அழைத்துக் கொள்கிற அரசையே சேரும். 

ஆதாரங்களை மறுப்பது/திரிப்பது என்பதற்கும் மேலாகச் சென்று, உண்மைக்குப் புறம்பானவற்றை நியாயப் படுத்தும் வகையில் பாஜக அரசு உண்மைகளைச் சர்வாதி காரத்துடனும் அகங்காரத்துடனும் தூக்கி யெறிவது அதிக கவலைக்குரிய விஷயம். சமீபத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சகம், விவசாயத் துறையின்மீது பணமதிப்புநீக்கம் ஏற்படுத்திய (எதிர் மறையான) பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய மதிப்பீட்டு அறிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டதுடன் வேறுபட்ட முடிவுகளைக் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டது. மேலும் முதல் அறிக்கையைத் தயாரித்த அதிகாரிகள் தாங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மீறிவிட்டதாக அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியது. இது இந்த அரசின் வெட்கமற்ற துணிவையும், ‘இது பொய்தான், ஆனால் யாருக்கு அக்கறை’ என்ற அதன் அலட்சியத்தையும் காட்டுகிறது.  இப்போது விவாதத்திற்குரிய கேள்வி என்னவெனில் இதற்கான அக்கறையைக் கொள்ள வேண்டியது யார்? தனது பதில்சொல்லும் பொறுப்பைப் பற்றி அரசு அக்கறை கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிற அதே நேரத்தில்,  வாக் காளர்களும் எதிர்க்கட்சிகளும் அரசிடம் ‘விளக்கம்’ (தவறான ஆட்சிக்கான பதில்) கோரும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. சாதாரண மக்களின் உணர்வுகளை, தப்பெண்ணங்களை வலுவாகத் தூண்டிவிட்டு, தம் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ‘பொய்களைத் திருப்பிவிட்டு’ (சமூக ஊடகங்களின் உதவியுடன்) செயல்படும் நிலையில், இந்திய ஜனநாயகத்தில் விவாதங்களுக்கான வெளி குறைவது இருக்கட்டும், உரையாடலுக்கான வெளியே சுருங்கிவருகிறது.

ஆகவே பணமதிப்பு நீக்கத்தின் அறிவார்ந்த உள்ளடக்கத்தை இன்றைய அரசியல் விவாதங்கள் தவறவிடுகின்றன என்பதில் ஆச்சர்யமில்லை. இந்த ஆண்டு நாடு முழுவதும் நடந்த விவசாயிகளின் போராட்டங்கள்/ஊர்வலங்கள், குறிப்பாக 2018 நவம்பர் 30ஆம் தேதி டெல்லியில் நடந்த போராட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் வேளாண் நெருக்கடி, வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான விலைகள், கடன் பிரச்னை, கடன் தள்ளுபடி போன்றவை குறித்த கிராமப்புற மக்களின் உணர்வுகளை வெற்றிகரமாக வெளியுலகிற்குத் தெரியும்படிச் செய்திருக்கின்றன. ஆனால் தவறுதலாகப் பணமதிப்புநீக்கம் ஏற்படுத்திய அழிக்க முடியாத பொருளாதார நட்டத்தைப் பற்றிக் கவனத்தில் கொள்ளாது விட்டுவிட்டன. உதாரணமாக அரசாங்கக் கொள்முதல் வலுவாக இல்லாவிட்டால் விவசாயிகளுக்குப் பலன் கிடைக்காது என்ற நிலையிலுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கும் கோரிக்கையை வைப்பதற்குப் பதிலாக வலுவாகவும் தீவிரமாகவும் கொள்முதல் செய்வதற்கான திட்டத்திற்கு ஒருமித்த கருத்தை உருவாக்கியிருக்க வேண்டும். குறிப்பாக, ‘ரொக்கப் பணம் இல்லாததன்’ காரணமாக கிராமப்புற வேலைகளும் வருமானமும் பெரிதும் சுருங்கியுள்ள நிலையில் இது அவசியமானது.

இந்திய அரசியலுக்குள் பாஜக கொண்டுவந்துள்ள ‘பின் - உண்மை’ வகைப்பட்ட அரசியலானது ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பிடமும் சார்புடைய உண்மைகளை உருவாக்கியிருக்கிறது. இது தரவுகளிலிருந்து தனக்கு வேண்டுமென்பதைத் தெரிவு செய்துகொள்வதன் அடிப்படையிலானது. உதாரணமாக, 2018 டிசம்பர் 3ஆம் தேதி தி இந்து நாளிதழில் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ‘விவசாயிகளின் வீட்டுவாசலில் வேலை உருவாக்கம்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியிருந்ததும், ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றி 2018 அக்டோபர் 10ஆம் தேதி வாக்குறுதியளித்ததும் இரு தரப்பினரும் தத்தமது வாக்கு வங்கிகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான தற்காலிக அரசியல் பேச்சுகள் மட்டுமே. இவர்கள் யாரும் அடிப்படையான கேள்விகளுக்குத் தெளிவான பதில்களை அளிப்பதில்லை. கிராமப்புறங்களுக்கான விவசாயமல்லாத வேலைவாய்ப்புகளுக்குப் பெரிய ஆதாரமாக இருக்கும் அமைப்புசாரா துறைகள் பணமதிப்புநீக்கத்தாலும், சரக்கு  சேவை வரியாலும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் நிலையில் விவசாயமல்லாததைப் பல்வகைப்படுத்துவது எப்படி சாத்தியம்? அமைப்புசாரா உற்பத்தித் துறை, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்துத் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கையில் புது வேலை உருவாக்கம் எப்படி சாத்தியமாகும்?

ஆளும் அரசின் பொய்களைக் கேள்விக்குட்படுத்தும் அதே நேரத்தில் போராட்டக்காரர்கள்/எதிர்க்கட்சிகள் மென்மையான விவகாரங்களிலேயே அதைச் செய்கிறார்கள் என்பது நெருடலான விஷயம். மேலும் அரசின் மொழியை அப்படியே ஒத்திருக்கும் அவர்களது ஒரே மாதிரியான ‘அற’ மொழியானது பொருளாதார மதிப்பீட்டைத் தோற்கடித்துவிடுகிறது. இந்த வகையில் வாக்காளர்கள் தங்களது தலைவர்களை/அரசைத் தேர்ந்தெடுக்கத் தேவையான ‘தகவல்களை’ எதிர்க்கட்சிகள் வாக்காளர்களுக்குத் தராமல் தவறுகின்றன அல்லது தள்ளிவிடுகின்றன. இத்தகைய தவறவிடல்கள் இந்த அரசு இடைவிடாது உண்மைகளைப் புறந்தள்ளிவருவதற்குச் சமமானது. பணமதிப்பு நீக்கத்தால் கட்டமைப்புரீதியாக ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணியில் விவசாயப் பிரச்சினைகளை ஆராய்வதற்கான வலுவான ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளை எதிர்க்கட்சிகளும் போராட்டக்காரர்களும் எடுக்கவில்லையென்றால் பாஜக அரசின் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை உண்மை போன்று தோன்றும்; யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் வாக்காளர்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தும். பாஜகவின் பொய்கள் அறச் சீற்றத்தை ‘எதிர்த்திசையில்’ திருப்பிவிட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். ‘மாற்றம்’ பற்றிய பேச்சுகளைக் குடிமைச் சமூகத்தின் ஒரு பிரிவு கவனித்துக்கொண்டிருக்கும் நிலையில் பணமதிப்புநீக்கமானது பாஜகவின் ‘அற’ அழைப்பில் பொதிந்திருக்கும் அராஜகமான வெளிப்பாடு என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. 2019 தேர்தலானது பின் - உண்மை அரசியலை மறுதலிக்கும் புதிய மொழியைக் கண்டடைவதில் குடிமைச் சமூகத்தின் உணர்வை அதிகபட்சம் பயன்படுத்தக்கூடியதாகவும், இந்திய ஜனநாயகத்தின் வலிமைக்கான சோதனையாகவும் இருக்கும். 

தலையங்கம், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, டிசம்பர் 8, 2018

மின்னஞ்சல்: kthiru1968@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.