January 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      மீட்டெடுக்கப்படும் வரலாறு
      இலக்கியம் ஒரு சுயமரியாதை
      பழைய சமகால முக்கியத்துவங்கள்
      கம்பனை முன்வைத்து :கேரளத் தோல்பாவைக் கூத்தில் தமிழ்ப் பனுவல்கள்
    • கதை
      சங்கு
      கடல் பின்வாங்கிய காலத்தில்...
      தற்கொலை மகாத்மியம்
    • நேர்காணல்: அமோஸ் கோல்ட்பெர்க்
      ஆம், இது இன அழித்தொழிப்புதான்
    • சிறப்புப் பகுதி
      36+
      மொழி வளர்ச்சியும் காலச்சுவடும்
      காலத்தில் மறையாத காந்தியின் சுவடுகள்
      கதவைத் திறந்துவைத்த காலச்சுவடு
      காலச்சுவடும் சூழலியலும்
    • கற்றனைத்தூறும்-1
      ‘கேளுங்கள்’
    • நேர்காணல்: செந்தீ நடராசன்
      கற்களுடன் மோதிக் கல்வெட்டைக் கற்றேன்
    • புத்தக மதிப்புரை
      உள்ளிருந்து ஒலிக்கும் குரல்
      ஆளுமைகளை ஆவணப்படுத்துதல்
    • அஞ்சலி: ஜெயபாரதி (1946-2024)
      பாலைவனத்தில் மலர்ந்த பூக்கள்
    • பதிவு
      பெங்களூர் கவிதைத் திருவிழா
      அம்பை 80: நெகிழவைத்த நிகழ்வு
      விஜயா வாசகர் வட்ட்தின் ‘அ. முத்துலிங்கம் விருது 2025’
      பஞ்சு பரிசில்-2024
    • உரையாடல்
      வ.உ.சி. வரலாறு: ஒரு தேடலின் பயணம்
    • அஞ்சலி: ஜாகிர் ஹுசைன் (1951-2024)
      உலகம் கேட்ட இசை
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • புத்தகப் பகுதி
      மன்னிப்பதன் வெற்றி
      ஆளற்ற சாலை சந்திப்பு
      வடகிழக்கின் நேரம் முடிந்துவிட்டது
    • கவிதைகள்
      சுகுமாரன் கவிதைகள்
      சல்மா கவிதைகள்
      இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
    • தலையங்கம்
      மாநிலத் தேர்தல் முடிவுகள்: மாறிவரும் தேர்தல் களம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு January 2025 கவிதைகள் சல்மா கவிதைகள்

சல்மா கவிதைகள்

கவிதைகள்
சல்மா

வீடு

நீண்ட காலம் 
வசிக்க நேர்ந்த
வீட்டிலிருந்து 
வெளியேறத் தேவை 
கதவில்லை
ஒரு உடையாத இதயம்

ஷெல்பிலிருந்து 
கீழிறங்கிய புத்தகங்கள்
கழற்றப்பட்ட மின்விசிறிகள்
அமர்த்திவைக்கப்பட்ட
குளிர்சாதனப் பெட்டி
இவற்றிற்கு மத்தியில் 
உறக்கம் நழுவிய
ஓர் இரவு

புத்தகங்கள்
என்னை உற்று நோக்கியபடி
அமர்ந்திருக்கின்றன
அடுத்து எனும் கேள்வியோடு

எங்களது பரஸ்பரப் பார்வைக்கும்
உற்று நோக்கலுக்கும் இடையில் 
ஓடித் திரிகின்றன சிலந்திகள்

திரைச்சீலையற்ற 
சன்னலுக்கு வெளியே 
நகர்ந்துகொண்டேயிருக்கிறது 
நகரம்

வந்த இடத்திற்கே திரும்ப 
வாகனத்தில் ஏறக் காத்திருக்கின்றன 
பொருட்கள்  

அரவங்கள் வந்தடையாத 
மாலை மடங்கி 
இருள் விரியும்போது 
தனது சிறகுகளை இறுக்கிக்
கூடடைகிற 
கிராமத்தை நோக்கிப்
பயணிக்க 

என் பரந்த எல்லைகளை 
வரைந்ததும்
தொலைதூரத்தில் வசிக்கும்
பிள்ளைகளின் வாசனை 
கவிந்திருப்பதும்
இந்த வீட்டின் சுவர்களில்தான் 

இரவெங்கும் 
வீட்டின் வெறுமைக்குள் 
நடமாடித் திரிகிறேன்
விட்டுச் செல்லவும் 
எடுத்துச் செல்லவும் இயலாத 
அந்நினைவுகளோடு
 
உணர்வுகளால் 
நெய்யப்பட்டதோர்  
கூடு
சிறு சருகின்
அசைவில்
கலைந்துவிடுகிறது

“என் வீடெனும்” 
கூரையின் கீழிருந்து 
விலகிச் செல்வது 
என்னிலிருந்து நானே 
விலகிச் செல்வதுபோல
திகிலூட்டுகிறது.
-----------------


1.
அதிகாலைக் குளிர் காற்று
இணைந்து வர 
இருள்  சரிந்திருந்த மண்ணின்
வயது முதிர்ந்த வானத்தின் கீழாக 
முதிராத  இளம் பருவத்து முலையென 
நிமிர்ந்து நிற்கிறது மலை 

வானத்தின் மேலாகப் பறந்துகொண்டிருந்தபோது
நதி ஒன்று கடலிடம்
தலை சாய்த்துக்கொண்டிருந்ததைப்
பார்த்தேன் ஒருமுறை

ஊரின் கடைசி வீட்டின்  அதிகாலையை
பிடிஎஸ் ஆல்பம் தன் கூக்குரலில் 
சுமந்து கொண்டு நிற்கிறது
தொடரும் அடர் மரங்கள் 
முணுமுணுக்க 
ஓசைகளுக்குள் புதைந்தபடி
நீள  நடக்கச் சிரமம் ஏதுமில்லை 

இரவினில் மரங்கள் சூடியிருந்த 
பறவைகளின் குரலோசைகள் 
காற்று நெட்டிமுறிக்க
மரங்களிலிருந்து
உதிர்ந்து சிதற
என்  தனிமையின் அரவம்   கேட்டு
நீண்ட வாலைத்
தன் கூட்டுக்குள் தூக்கிச் செல்கிறது குருவி 

இன்று காட்டு மல்லிகையும் சங்குப் பூக்களும் 
மலரவில்லை 
வேறெங்கோ 
நதியின் மீது கோடை வலுவாக இறங்கிக்கொண்டிருந்ததை  
நினைவூட்டியபடி 
தனித்து
நடந்துகொண்டிருக்கிறேன்.
--------------------

2.
நமது விலகலுக்குச்
சற்றுப் பிந்திய தருணம்
இரக்கமற்றது 
அசமந்தமான உலர்ந்த தெருக்களில்
சோம்பல் முறிக்கும் நாய்கள்
அதிகாலைச் சாலையில் சட்டெனத் தென்படுகின்றன 
நேற்று பார்த்த
சாம்பல் நிறப் பூனையின்
உயிரற்ற உடலும் 
சாலையை  நனைத்திருக்கும் குருதியும்
----------------------

3.
ஒரு முழு நாளையும்
பூனையோடு கழிக்க நேர்ந்த பிறகு
இந்த உலகில் சலித்துக்கொள்ள 
ஏதும்  இல்லை
தனது கழுத்தின் நெகிழ் தசைக்குள் 
எனது விரல்களைத்
தக்கவைத்துக்கொள்கிற 
தந்திரம்  தெரியும் அதற்கு 
என்னோடு தன் விளையாட்டைத் தொடர்ந்தபடி
காயமுற்ற எனது ஆன்மாவை 
நாவினால் நீவி
தனிமையைத்  
துடைத்தெறியும்
பூனையிடம் 
மனதை 
காலத்தை 
இழந்துவிடுபவருக்கு 
வாழ்க்கை மீதான  குற்றச்சாட்டுகள்
ஏதும் இருப்பதில்லை.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.