January 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      மீட்டெடுக்கப்படும் வரலாறு
      இலக்கியம் ஒரு சுயமரியாதை
      பழைய சமகால முக்கியத்துவங்கள்
      கம்பனை முன்வைத்து :கேரளத் தோல்பாவைக் கூத்தில் தமிழ்ப் பனுவல்கள்
    • கதை
      சங்கு
      கடல் பின்வாங்கிய காலத்தில்...
      தற்கொலை மகாத்மியம்
    • நேர்காணல்: அமோஸ் கோல்ட்பெர்க்
      ஆம், இது இன அழித்தொழிப்புதான்
    • சிறப்புப் பகுதி
      36+
      மொழி வளர்ச்சியும் காலச்சுவடும்
      காலத்தில் மறையாத காந்தியின் சுவடுகள்
      கதவைத் திறந்துவைத்த காலச்சுவடு
      காலச்சுவடும் சூழலியலும்
    • கற்றனைத்தூறும்-1
      ‘கேளுங்கள்’
    • நேர்காணல்: செந்தீ நடராசன்
      கற்களுடன் மோதிக் கல்வெட்டைக் கற்றேன்
    • புத்தக மதிப்புரை
      உள்ளிருந்து ஒலிக்கும் குரல்
      ஆளுமைகளை ஆவணப்படுத்துதல்
    • அஞ்சலி: ஜெயபாரதி (1946-2024)
      பாலைவனத்தில் மலர்ந்த பூக்கள்
    • பதிவு
      பெங்களூர் கவிதைத் திருவிழா
      அம்பை 80: நெகிழவைத்த நிகழ்வு
      விஜயா வாசகர் வட்ட்தின் ‘அ. முத்துலிங்கம் விருது 2025’
      பஞ்சு பரிசில்-2024
    • உரையாடல்
      வ.உ.சி. வரலாறு: ஒரு தேடலின் பயணம்
    • அஞ்சலி: ஜாகிர் ஹுசைன் (1951-2024)
      உலகம் கேட்ட இசை
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • புத்தகப் பகுதி
      மன்னிப்பதன் வெற்றி
      ஆளற்ற சாலை சந்திப்பு
      வடகிழக்கின் நேரம் முடிந்துவிட்டது
    • கவிதைகள்
      சுகுமாரன் கவிதைகள்
      சல்மா கவிதைகள்
      இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
    • தலையங்கம்
      மாநிலத் தேர்தல் முடிவுகள்: மாறிவரும் தேர்தல் களம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு January 2025 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

டிசம்பர் 2024 இதழில் வெளியான சுகுமாரனின் ‘இசைபட வாழ்தல்’ கட்டுரையையும் அதனைத் தொடர்ந்து டி.எம். கிருஷ்ணாவின் குரலில் 
எதிரொலிக்கும் ‘வாழ்வின் கதை’ என்ற கட்டுரையையும் படித்தேன்.பெரியாரைப் புகழ்ந்து பாடியதாலோ அம்பேத்கரைப் போற்றிப் பாடியதாலோ கர்நாடக சங்கீதத்தின் மாண்பு குறைந்துபோய்விடுவதில்லை. கிறிஸ்தவத் தமிழ்ப் பண்டிதர்களும் இஸ்லாமியத் தமிழ்ப் பண்டிதர்களும் தமிழ்ப் பாடல்கள் பாடியதால் தமிழின் மாண்பு குறைந்துவிட்டதா என்ன? இசை எல்லோருக்குமானது. தொலைக்காட்சிகளில் கிராமப்புறங்களிலிருந்து வரும் குழந்தைகள் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் நல்ல குரல் வளத்துடனும் இசை நயத்துடனும் பாடவில்லையா? அவர்களும் முறையான பயிற்சி பெற்றால் கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்குவார்கள். சங்கீதம் புனிதமானது, தெய்வீகமானது என்று கூறிப் பெரும்பாலானவர்களை விலக்கி வைப்பதன் மூலம் தமது தனிப் பெருமையைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். 
டி.எம். கிருஷ்ணா இளகிய மனதுடையவர். எம்.எஸ். என்ற இசை ஆளுமையின் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பற்றிய அவரது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வாழ்க்கை வேறொருவரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. “அவரது துயரங்களை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் அவருடைய உண்மையான குரலைக் கேட்டதே இல்லை என்றே சொல்ல வேண்டும்” என்ற வரிகள் உண்மையானவை. ‘மீரா’ படத்தில் அவர் 
பாடிய பாடல்கள் உண்மையில் அவரது மனதின் வெளிப்பாடாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. “இசையின் தூய்மை குறித்து என் மனதில் கட்டமைக்கப்பட்டிருந்த முன் முடிவுகள் வன்முறை நிரம்பிய பாரபட்சங்கள் என்பதை உணரவைத்தார்” என்ற வலி நிரம்பிய வரிகள் நம்மையும் ஆழச் சிந்திக்கவைக்கின்றன. எம்.எஸ். இசையில் தனக்கான இடத்தை அடைந்தார், ஆனால் வாழ்க்கையில் தனக்கான இடத்தை அடையப் போராடினார்; துணிவுடன் இக்கட்டுரைகளைப் பிரசுரித்தமைக்குத் தங்களைப் பாராட்டுகிறேன்.
கு. அசோகன்,
நாகர்கோவில்.

அரவிந்தனின் ‘சங்கடம்’ மிகவும் நன்று. சரளமான சொற்றொடர்களையும் சம்பவங்களையும் கதாபாத்தி ரங்களையும் இந்தப் படைப்பில் உலவவிட்டுள்ளார்.  கதையின் முடிவால் கதை சொல்லிக்கு மிகப்
பெரியதொரு சங்கடம் தீர்ந்திருந்தது. ஆனால் வாசகனாக இந்த முடிவைச் சற்றும் எதிர்பார்த்திருக்க
வில்லை. சித்ரா அம்மையார் கதைசொல்லியிடம் மாத்திரம் அன்று, என்னுள்ளும் கதாநாயகியாகக் குடிகொண்டுவிட்டார்.
சில மாதம் முன்பு காலச்சுவடில் வெளியான ஹேமி கிருஷின் ‘கை’ கதையில் இருந்ததைப் போலவே இக்கதையிலும் வாழ்வின் தத்துவார்த்தப் பார்வை வந்து போயிருந்ததை எண்ணிக்கொள்கிறேன். என் வாழ்வின் ஒரு துளியும் ஞாபகத்தில் வந்து அலைமோதிச் சென்றது!  இம்மாதிரியான சரளமான பாணியில் சொல்லிச் செல்லும் எந்த கதையும், சிறுகதையோ நாவலோ, உடனுக்குடன் வாசக வரவேற்பையும் கலைமதிப்பீட்டையும் ஒருங்கே தக்க வைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.
எல். கோபாலகிருஷ்ணன்,
மின்னஞ்சல்.

டிசம்பர் இதழ் முழுவதும் பிராமண எதிர்ப்பு கமழ்ந்தது. இனி எத்தனை காலம் இந்தப் போர்வை பலன் தரும்? காலச்சுவடு இதழை எத்தனை தமிழர்கள் 
படித்து உள்வாங்குவார்கள்? பிராமணர் என்றாலே வெறுத்து ஒதுக்குகிறீர்கள். பலவீனமானவர்களை விமர்சிப்பது உங்களது பலத்தைக் காட்டுகிறது. கிருஷ்ணாவிற்கு பாரத ரத்னாவே வழங்கட்டும்; யார் தடுப்பது? சக மனிதனைப் பிறப்பால் துச்சமென நினைப்பதல்லவா சாதித் துவேஷம். இதில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது வேறு. முழு வரியும் தெரிந்தோர் எத்தனை தமிழர்கள்? எம்.எஸ்., காற்றில் கலந்த துயரல்ல! காற்றில் கலந்த உயிர்.  இசை வாணிக்கும் சங்கீத கலாநிதி வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
சு. வாசன், 
மின்னஞ்சல்.

‘துணை’ (வாஸந்தி) கிடைத்தது. நான் மறதி வியாதிக் கதைகள் படிப்பதில்லை. சினிமா பார்ப்பதில்லை. அதன் கொடூரத்தை வீட்டில் இருமுறை பார்த்தவன். நான் எதிர்பார்த்ததுபோலவே கதை இருந்தது. இரண்டு நாட்களுக்கு எனக்குத் தூக்கம் வராது. அப்படி என் மனதைப் போட்டு அசைத்துவிட்டது.  ஆனால் ஒரு நன்மை இருந்தது.
ஒரு சிறுகதை படித்து முடிந்ததும் அது எனக்கு என்ன தந்தது என்று எண்ணிப்பார்ப்பேன். அந்த விசயத்தில் எனக்கு இந்தச் சிறுகதை நிறையவே தந்தது. பலதை நினைவூட்டியது. 
20 வருடத்திற்கு முன்னர் இந்தக் கதையை இன்னும் நன்றாக அனுபவித்திருப்பேன். இப்பொழுது பெயர்ச் சொற்கள் அழிந்துகொண்டு வருகின்றன; வினைச் சொற்கள் அழிவதில்லையாமே. என்னால் மறக்க முடியாத வரிகள் ஒளவை சொன்னதுதான். ‘இடும்பைக்கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது.’ 
எத்தனை பொருத்தம்! இரண்டு நாள் தூக்கம் கடன் தாருங்கள்.
அ. முத்துலிங்கம், 
மின்னஞ்சல்.

டி.எம். கிருஷ்ணாவினுடைய இசை மேதமையைக் கருத்தில் கொள்ளாமல் அவருடைய சமூக நடவடிக்கைகளை முன்னிறுத்தி அவருக்கு விருது அளிக்கப்படுவதை எதிர்ப்பவர்களைக் கண்டித்து சுகுமாரன் கட்டுரை எழுதுகிறார்.
அந்தக் கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டியிருக்கும் டி .எம். கிருஷ்ணாவின் எம்.எஸ். குறித்த நூலுக்கான முன்னுரையில், “ஒருவரது வாழ்வில் நிகழும் மேலும் கீழுமான ஊசலாட்டத்தில் இருந்துதான் கலை பிறக்கிறது. அவரது வாழ்வின் துயரங்களை மூடி மறைக்க விரும்புகிறோம். ஆனால் அந்த அனுபவங்களிலிருந்து வெளிப்பட்ட இசையை ஆராதிக்கிறோம், இது கொடூரமானதாகத் தோன்றுகிறது,” என்று எழுதுகிறார்
ஒருவிதத்தில் விருது எதிர்ப்பாளர்களும் இதே வாதத்தைத்தானே முன்வைக்கிறார்கள், “கிருஷ்ணா வினுடைய சமூக நடவடிக்கைகளால் அவருடைய துறைசார் மேதைமை களங்கப்படுகிறது,” என்பதாக. நான் இதன் அறம் சார்ந்த கூறுகளைப் பற்றிப் பேசவில்லை. தர்க்கப்படி இதுவும் கிருஷ்ணாவின் பார்வையைத்தானே எதிர்முனையிலிருந்து பிரதிபலிக்கிறது?
எனில் கிருஷ்ணாவின் இசை மேதைமையை மட்டும் கருத்தில் கொண்டுதான் அவருக்கு விருது அளிக்கப்படுவதாக அகாதமி வாதிட்டால், எம்.எஸ்.எஸ். மீதான தன்னுடைய பார்வையை முன்வைத்துத் தன் கலை தன் சமூக நடவடிக்கைகளில்  இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது என்று கூறி அதை கிருஷ்ணாவே முன்வந்து மறுக்க வேண்டுமோ? சுகுமாரன் கட்டுரையைப் படித்தபின் கிருஷ்ணாவைப் படித்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
பா. வெங்கடேசன்,
மின்னஞ்சல்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.