January 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      மீட்டெடுக்கப்படும் வரலாறு
      இலக்கியம் ஒரு சுயமரியாதை
      பழைய சமகால முக்கியத்துவங்கள்
      கம்பனை முன்வைத்து :கேரளத் தோல்பாவைக் கூத்தில் தமிழ்ப் பனுவல்கள்
    • கதை
      சங்கு
      கடல் பின்வாங்கிய காலத்தில்...
      தற்கொலை மகாத்மியம்
    • நேர்காணல்: அமோஸ் கோல்ட்பெர்க்
      ஆம், இது இன அழித்தொழிப்புதான்
    • சிறப்புப் பகுதி
      36+
      மொழி வளர்ச்சியும் காலச்சுவடும்
      காலத்தில் மறையாத காந்தியின் சுவடுகள்
      கதவைத் திறந்துவைத்த காலச்சுவடு
      காலச்சுவடும் சூழலியலும்
    • கற்றனைத்தூறும்-1
      ‘கேளுங்கள்’
    • நேர்காணல்: செந்தீ நடராசன்
      கற்களுடன் மோதிக் கல்வெட்டைக் கற்றேன்
    • புத்தக மதிப்புரை
      உள்ளிருந்து ஒலிக்கும் குரல்
      ஆளுமைகளை ஆவணப்படுத்துதல்
    • அஞ்சலி: ஜெயபாரதி (1946-2024)
      பாலைவனத்தில் மலர்ந்த பூக்கள்
    • பதிவு
      பெங்களூர் கவிதைத் திருவிழா
      அம்பை 80: நெகிழவைத்த நிகழ்வு
      விஜயா வாசகர் வட்ட்தின் ‘அ. முத்துலிங்கம் விருது 2025’
      பஞ்சு பரிசில்-2024
    • உரையாடல்
      வ.உ.சி. வரலாறு: ஒரு தேடலின் பயணம்
    • அஞ்சலி: ஜாகிர் ஹுசைன் (1951-2024)
      உலகம் கேட்ட இசை
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • புத்தகப் பகுதி
      மன்னிப்பதன் வெற்றி
      ஆளற்ற சாலை சந்திப்பு
      வடகிழக்கின் நேரம் முடிந்துவிட்டது
    • கவிதைகள்
      சுகுமாரன் கவிதைகள்
      சல்மா கவிதைகள்
      இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
    • தலையங்கம்
      மாநிலத் தேர்தல் முடிவுகள்: மாறிவரும் தேர்தல் களம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு January 2025 பதிவு அம்பை 80: நெகிழவைத்த நிகழ்வு

அம்பை 80: நெகிழவைத்த நிகழ்வு

பதிவு
தாமரை

அம்பைக்கு எண்பது வயது பிறந்ததைக் கொண்டாடும் வகையில் ‘அம்பை 80’ என்னும் தலைப்பில் கடந்த 28-11-2024 அன்று ஒருநாள் கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. காலச்சுவடு அறக்கட்டளை, மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ் உயராய்வு மையம், கடவு ஆகியவை இணைந்து நடத்தின. ஸ்ரீராம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு மதுரை அமெரிக்கன் கல்லூரியின் உயராய்வுத் தமிழ் மையத்தில் நடைபெற்றது.

அம்பை பற்றிய ஆவணப்படத்தோடு நிகழ்வு தொடங்கியது. டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதினை அவர் பெற்றதையொட்டிப் பதிவுசெய்யப்பட்ட காணொளி திரையிடப்பட்டது. அம்பை உருவாக்கி நடத்திவரும் பெண் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் ஸ்பாரோ அமைப்பின் பணிகளைப் பற்றிய ஆவணப்படம் பிற்பகலில் திரையிடப்பட்டது.

காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் பதிப்பாளருமான கண்ணன் தொடக்க உரையாற்றினார். வரவேற்புரையைக் கடவு அமைப்பாளர் கவிஞர் தேவேந்திர பூபதியும்  வாழ்த்துரையைக் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபரும் நிகழ்த்தினர். முதல் அமர்வுக்கு எழுத்தாளர் பெருமாள்முருகன் தலைமை ஏற்றார்.

முதல் அமர்வில் பேசிய கவிஞர் சேரன், அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ சிறுகதைத் தொகுப்பு தன்னுடைய பாடத்திட்டத்தில் இருந்ததைக் குறித்தும் அக்கதைகள் ஈழச் சூழலில் ஏற்படுத்திய தாக்கத்தையும் தனக்கே உரிய முறையில் சுவையாகப் பகிர்ந்துகொண்டார். ஈழத்திலிருந்து ‘சொல்லாத சேதிகள்’ போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளியாவதற்கு அம்பை முன்னோடியாக இருந்தார் என்ற தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

கன்னட எழுத்தாளர் பிரதீபா நந்தகுமாரின் ஆங்கில உரை கன்னட மொழியில் அம்பை எழுத்துக்களின்  பொருத்தப்பாடு பற்றியதாக அமைந்தது. கதைகள் கன்னடத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அம்பைக்கும் கர்நாடகத்திற்குமான உறவைக் குறித்தும் அவர் பேசினார். அம்பையின் ஆளுமை பற்றிப் பேசிய சல்மாவின் உரை உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. பிறகு, அமர்வின் விருந்தினர்களிடம் பார்வையாளர்கள் கேள்விகள் எழுப்பினர். கேள்வி எழுப்புவோருக்குக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மூன்று நூல்கள் அடங்கிய புத்தகக்கட்டு பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாம் அமர்வை அரவிந்தன் ஒருங்கிணைத்தார். மயிலன் ஜி சின்னப்பன், லாவண்யா சுந்தரராஜன், ரம்யா ஆகியோர் பங்கேற்ற அந்த அமர்வு உரையாடலாக அமைந்தது. அம்பையின் கதைகளின் நிலப்பரப்பைப் பற்றி லாவண்யாவும் எழுத்தாளராக இருந்துகொண்டே செயல்பாட்டாளராகவும் அம்பை செயலாற்றிவருவது குறித்து ரம்யாவும், அம்பை கதைகளின் கருத்தியல் கூறுகள் பற்றி மயிலனும் தங்கள் பார்வைகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

மூன்றாம் அமர்வுக்குத் தலைமை சுகுமாரன். அம்பையின் ஆங்கில ஆக்கங்கள் குறித்து அமெரிக்கன் கல்லூரியில் உள்ள SCILET அமைப்பின் இயக்குநர் பிரமிளா பால் உரையாற்றினார். கூரிய பார்வைகள் நிறைந்த நேர்த்தியான உரையாக அது அமைந்தது. தொடர்ந்து அம்பையைப் பற்றிய நினைவுகளை இமையம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். அம்பையின் புனைபெயர், அவருடைய சுயமரியாதை உணர்வு, சமரசமற்ற துணிச்சல் ஆகியவை குறித்து இமையம் பேசினார்.

மதிய உணவுக்குப் பிறகு நான்காம் அமர்வு தேவேந்திர பூபதி தலைமையில் நடைபெற்றது. சுடர்விழி, லறீனா அப்துல் ஹக் (இலங்கை), கமலதேவி ஆகியோர் பேசினர். அழகுநிலா, கவிதா லட்சுமி ஆகியோர்  இணைய வழியில் பங்கேற்றனர். அம்பை கதைகளில் பயணங்கள் குறித்து சுடர்விழி ஆழமான உரையை வழங்கினார். அம்பை கதைகளுடன் தனக்கு உள்ள உறவு குறித்து லரீனா பகிர்ந்துகொண்டார். அழகுநிலாவும் கவிதா லட்சுமியும் கமலதேவியும் அம்பையின் படைப்புலகம் பற்றிய சித்திரத்தைத் தீட்டினார்கள்.

அம்பையின் புதிய சிறுகதைகள் அடங்கிய ‘இரு பைகளில் ஒரு வாழ்க்கை’ நூல், அம்பை தொகுத்த ‘ஓர் ஐக்கியக் குடும்பச் சரித்திரம்’ என்னும் நூல் ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. சுகுமாரன் வெளியிட முறையே மைதிலியும் லறீனா அப்துல் ஹக்கும் பெற்றுக்கொண்டனர். நூல்களைக் குறித்து சுகுமாரன் உரையாற்றினார்.

இறுதி அமர்வில் பெருமாள்முருகன் சிறப்புரையாற்றினார்.  அம்பையுடனான நட்பின் அனுபவங்களைச் சுவைபடப் பகிர்ந்துகொண்ட அவர், அம்பையின் கதைகள் தமிழ்ப் புனைகதைகளில் ஏற்படுத்திய உடைப்புகளைப் பற்றி விரிவாகப் பேசினார். அம்பை தன்னுடைய ஏற்புரையில் தன் இளமைக் கால அனுபவங்களை சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.  நன்றியுரையை அமெரிக்கன் கல்லூரி இளங்கலைத் தமிழ்த்துறைத் தலைவர் ஹென்றி ஜூலியஸ் ஆற்றினார்.  

அம்பை படைப்புகளின் அடிப்படையில் அமைந்த ‘ஒரு பென்சிலின் மௌனப் புரட்சி’ நாடகம் அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் அ. இராஜன் இயக்கத்தில் மாணவர்களால் மேடையேற்றப்பட்டது. அன்னலட்சுமி இணை இயக்கம். முதுகலைத் துறைத்தலைவர் செங்கோல் மேரி அறிமுகவுரை. மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து அந்நாடகத்தை அரங்கேற்றினர். பங்குபெற்ற அனைத்து நடிகர்களுக்கும் பொன்னாடை போர்த்திப் புத்தகம் பரிசளித்து மைதிலிசுந்தரம் கௌரவப்படுத்தினார்.

அம்பையைப் பற்றிப் பேசிய பலரும் ஒரு படைப்பாளுமையாக அவருடைய தனித்தன்மை, தனிப்பட்ட முறையில் அவர் காட்டும் அன்பு, பன்முகச் செயல்பாடுகள் கொண்ட துடிப்பான வாழ்க்கை ஆகியவை குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். கருத்தரங்கில் கலந்துகொண்ட பலரும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார்கள். எழுத்தாளர்களும் வாசகர்களும் நெகிழ்ச்சியுடன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தததைக் காண முடிந்தது. வாழும் காலத்திலேயே உரிய அங்கீகாரம் பெறாத பல சாதனையாளர்களைக் கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பில் அம்பை 80 போனற நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன. சமகாலப் படைப்பாளுமை ஒருவரைப் பாராட்டவும் அவரது பங்களிப்புகளைத் தொகுத்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் பல படைப்பாளிகள் கொண்டாடப்படுவதற்கான உந்தாற்றலைத் தரக்கூடும் என்னும் வகையிலும் முக்கியமானது.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.