ஆகஸ்ட் 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஆகஸ்ட் 2026
    • கட்டுரை
      அகராதி நெறிகளுக்கு இடம் இல்லாத கையடக்க அகராதி
    • இந்தியச் சிற்றிதழ்கள்: தமிழ்
      பெருங்கடலில் சிற்றோடம்
    • திரை; ஹபீபி
      தமிழின் புதிய சலனம்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: இந்தி
      இந்தி இலக்கியத்தில் புத்தெழுச்சி
    • இந்தியச் சிற்றிதழ்கள்: மராட்டி
      வார்ப்புகளுக்கு வெளியே
    • பதிவு
      சுதந்திரச் சுடரின் குரல்
    • சிறப்புப் பக்கங்கள்
      இந்தியச் சிற்றிதழ்கள்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: மலையாளம்
      புதிய பூக்கள் மலர்ந்தபோது...
    • அஞ்சலி: சு. இராசகோபால் (1954 – 2026)
      தெளிவுற அறிந்தவர் நயம்பட மொழிந்தவர்
    • அஞ்சலி: எஸ். ஜானகி (1938-2026)
      காற்றில் உந்தன் கீதம்...
    • அஞ்சலி: செழியன் (1972 - 2026)
      ஒளியில் நிலைத்தல்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: வங்காளம்
      மரபை மீறும் வேட்கை
    • பத்தி இன்றும் என்றும் 4
      ஒரு தலைவர், ஓர் அமைப்பு சில அதிகாரிகள்
    • கதைகள்
      அருண்பாண்டியன் மனோகரன் கதைகள்
    • மதிப்புரை
      தமிழ் மூலம், ஆங்கிலப் பெயர்ப்பு
    • நேர்காணல்: இயக்குநர் மீரா கதிரவன்
      “நம் கதையை நாம் சொல்லாவிட்டால் வேறொருவர் சொல்வார்”
    • இந்தியச் சிற்றிதழ்கள்: கன்னடம்
      முடிந்துபோன அத்தியாயத்தை அசைபோடுதல்
    • அஞ்சலி: பூமணி (1947 - 2026)
      “அப்பிடிச் சொல்றீங்களோ!”
    • தலையங்கம்
      கனிமக் கொள்ளை பாழ் வாரிப் பெருங்குழி
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஆகஸ்ட் 2026 அஞ்சலி: சு. இராசகோபால் (1954 – 2026) தெளிவுற அறிந்தவர் நயம்பட மொழிந்தவர்

தெளிவுற அறிந்தவர் நயம்பட மொழிந்தவர்

அஞ்சலி: சு. இராசகோபால் (1954 – 2026)
வெ. வேதாசலம்

கல்வெட்டுஅறிஞர் சு. இராசகோபால் சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி என்ற நாட்டுக்கோட்டை நகரத்தார் ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெ.மு. சுப்பையா செட்டியார் தேசியவாதியாகவும் காந்தியவாதியாகவும் திகழ்ந்தவர்; ராஜாஜியின் மீது மிகுந்த பற்றும் நட்பும் கொண்டவர். அதன் காரணமாகவே தனது ஆறாவது பிள்ளையாகப் பிறந்த மகனுக்கு இராசகோபால் என்று பெயர் சூட்டினார். சு. இராசகோபால் பள்ளிப்படிப்பைத் திருப்பராய்த்துறை விவேகானந்த வித்யாவனக் குருகுலப் பள்ளியில் பயின்றார். இளங்கலை வரலாற்றுப் படிப்பைக் கரூர் அரசுக் கல்லூரியிலும், முதுகலை வரலாற்றைத் திருச்சி ஈ.வே.ரா. அரசுக் கலைக் கல்லூரியிலும் முடித்தார். பின்னர் ஓராண்டு தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பைச் சென்னையில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல்துறையில் பயின்றார். அதன் பின்னர் தமிழகத் தொல்லியல்துறையில் கல்வெட்டாய்வாளராகப் பணியில் 1975இல் சேர்ந்தார்.

இரா. நாகசாமி உருவாக்கிய தலைசிறந்த கல்வெட்டாய்வாளர்களில் ஒருவராக சு. இராசகோபால் விளங்கினார். அவரது சரிவரக் கேட்காத காதுக்குறைபாடு அவரது ஆய்வுக்கும் அரசுப் பணிக்கும் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. அவரது ஆற்றலையும் திறமையையும் கண்டு இரா. நாகசாமி 1974இல் தொல்லியல்துறையின் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தின் பயிற்றுநராக நியமித்தார். அந்நாளிலிருந்து கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்துப் பதிப்பிக்கும் பணியோடு பயிற்றுநர் பணியையும் சேர்த்துத் திறம்படச் செய்தார். இப்பணி அவரை நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கல்வெட்டாய்வாளராக உருவாக்குபவராக மாற்றியது.

கல்வெட்டுப் பயிலத் தொல்லியல்துறைக்கு வந்த மாணவர் பலருக்கு அவரது வீடே உறைவிடமாகவும் இருந்தது. சென்னையில் தங்கிப் படிக்க இயலாதவர்கள் சென்னை அடையாறில் உள்ள இராசகோபால் இல்லத்தில் தங்கிப் படித்தனர். மாணவர்களிடம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான அன்போடு இருப்பிடமும் அளித்த அவரது பண்பு போற்றத்தக்கது. வெளியூரிலிருந்து சென்னைத் தலைமையகத்திற்கு வரும் தொல்லியல் அலுவலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அவரது வீடே தங்குமிடமாக இருந்தது. அவரும் அவரது மனைவி பவானி இராசகோபாலும் முகம் கோணாது அனைவரையும் விருந்தோம்பினர்.

சு. இராசகோபால் கல்வெட்டு வாசகங்களையும் கல்வெட்டு எழுத்துக்களையும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் சிறந்த ஆய்வாளராகவும் ஆசிரியராகவும் திகழ்ந்தார். அவரிடம் பயின்ற திறமைமிக்க தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் பல பணியிடங்களில் இன்று பணியாற்றி வருகின்றனர். அவர் உருவாக்கிய சிறந்த கல்வெட்டாய்வாளர்களில் சொ. சாந்தலிங்கம், இல. தியாகராஜன், இரா. நளினி, ஜெகதீசன் என்று பலரைக் கூறலாம்.

சு. இராசகோபால் தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சிப் பாடங்களைத் தன் செலவில் தட்டச்சு செய்துகொடுத்துப் பயிற்றுவிப்பார். இலங்கைக்குப் பலமுறை சென்று அங்குள்ள முதுகலை மாணவர்களுக்குக் கல்வெட்டுப் பயிற்சி அளித்ததும் குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுப் படியெடுக்கும் பணியைத் தமிழகமெங்கும் சென்று பல இன்னல்களுக்கு இடையே திறம்படச் செய்தார். அவற்றைப் படியெடுத்துப் படித்து நூலாக வெளியிடுவதில் வல்லவராக இருந்தார். தொல்லியலைப் பயிற்றுவிக்கும் பணியோடு தமிழ்நாட்டில் எங்கிருந்தும் யாராவது அவருக்குப் புதிய கல்வெட்டுப் படிகளை அனுப்பினால் அவற்றைத் தயங்காது உடனே எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது படித்துக் கொடுப்பார். தமிழி, தமிழ், வட்டெழுத்து, கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட சிக்கல் நிறைந்த கல்வெட்டாக இருந்தாலும் செப்பேடு, ஓலை ஆவணங்களானாலும் பொறுமையுடன் படித்து வெளியிடும் திறமை இராசகோபாலிடம் இருந்தது.

சு. இராசகோபால் 33 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி 2008இல் ஓய்வு பெற்றார். அதன்பின்பு தனது மறைவுக்குச் சில மணித்துளிகள்வரை தொல்லியல் ஆய்வுக்கும் கல்வெட்டாய்வுக்கும் அயராது பாடுபட்டார். அப்பணிகளைத் தனது எழுபத்தைந்தாவது வயதில் செய்துகொண்டிருந்தபோது அவர் உயிர் பிரிந்தது.

கல்வெட்டுப் பதிப்புப் பணியில் சிறந்தவராக இராசகோபால் இருந்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், நாகை முதலிய பல மாவட்டக் கல்வெட்டுத் தொகுதிகளின் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். ஆவணம் ஆய்விதழின் பதிப்பாசிரியராக ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். தமிழகத் தொல்லியல் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களுக்கும் ஐம்பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளுக்கும் இராசகோபால் சொந்தக்காரர். எதனையும் ஆழமாகச் சிந்தித்துத் தெளிவாக எழுதும் ஆற்றல் அவருக்கு உண்டு. எ.சுப்பராயலு வழிகாட்டுதலுடன் ‘கல்வெட்டுகளில் இடம்பெறும் அளவீடுகள்’ என்ற தலைப்பில் சிறந்த ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். ஐராவதம் மகாதேவனுடன் தமிழகக் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகம் முதலிய பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பல முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்கள் முனைவர் பட்டம் பெறவும் துணை நின்றார்.

வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கம் ‘கல்வெட்டுக் களஞ்சியம்’ என்ற விருதையும் திருச்சி இராசமாணிக்கனார் வரலாற்றுப் பேரவை சிறந்த கல்வெட்டாய்வாளர் என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்தன.

கடந்த ஆண்டு மதுரையில் நடந்த ஆவணம் ஆண்டு ஆய்வுக்கூட்டத்தில் அவரது வரலாற்றுப் பணியைப் பாராட்டித் தொல்லியல் ஆய்வாளர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்குச் சிறப்புச் செய்தனர். அந்நாளில் அவரைச் சிறப்பிக்கும் முறையில் ‘திசையாயிரம்’ என்ற அரிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய பவளவிழா மலரைப் பாண்டிய நாட்டு வரலாற்று மையம் வெளியிட்டது. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் குறித்து ஆய்வுசெய்த மிகச் சிறந்த அறிஞரான  சு. இராசகோபாலின் மறைவு அவரது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழகத் தொல்லியல் ஆய்வுக்கும் தொல்லியல் ஆர்வலர்களுக்கும்  பேரிழப்பாகும்.

வெ. வேதாசலம்: தொல்லியல், கலை, வரலாற்றாய்வாளர், மதுரை.

         மின்னஞ்சல்: vedachalamthiru@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.