புதிய வெளி புதிய யுகம்
சினிமா, நெடுங்காலச் செயல்பாட்டைக் கோரும் பூதாகரமான கலை. ஒருவர் இயக்குநராக அலுவலகப் பையன் வேலையிலிருந்து படிப்படியாகக் கடந்து உதவி இயக்குநராகச் சில ஆண்டுகள் செலவிட்டு, தனி இயக்குநராகப் படம் எடுப்பதற்குள் பத்து, பதினைந்து வருடங்களையாவது செலவிட வேண்டியிருக்கும்.
வடபழனி பக்கத்திலும் சென்னையின் பிரதான ஸ்டூடியோக்களின் வாசலிலும் ‘ஓபன் செய்தால்...’ என்று படத்தின் கதையைத் தொடங்குபவரின் வாக்கியத்தைப் போக்குவரத்து நெரிசலின் ஹாரன் சப்தத்தின் ஊடே கேட்க முடியும். அது சினிமா என்று வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் கதை என்பது வெளிப்படாததால் பலரது காதுகளுக்கும் எட்டாமல் போயிருக்கும். அதன் காரணம் சினிமா கோருவது தனிநபரின் சிந்தனையை மட்டுமல்ல; அத்துடன் கூட்டு முயற்சியையும் கோருகிறது.
மேலை நாடுகளில் பரவலாகிவிட்ட குறும்படக் கலாச்சாரம் இந்தியாவிற்குள் மெல்ல நுழைந்து, இன்று வலுப்பெற்றுள்ளது. இது இணையத்தைச் சா