திணைகளில் மாற்றம்
இத்தனை காதல் உணர்ச்சிதான் காரணமாம்
பால்யத்தில் ரப்பர் பந்துகளை
தண்ணீரில் ஆழ்த்தி மூழ்கடிக்க முயன்றது
போலத்தான் இருக்கிறது
காதலில் சிறிய துவாரம் விழுந்தால்
அது ஏன் தன்னைத் தகவமைக்க முடியாமல்
ஊமையாகிறது
காலங்கள் கடந்து திணைகளில் மாற்றம் பெறும்
உணர்ச்சிகளின் அகராதி யாரிடம் உள்ளது
காரணங்கள் இப்படித்தான் உருவாகிவிடுகின்றன
உயிரின் சாகித்யம் பாடலாகும் வரை
காதல் தன் இசையைத் தூண்டத்தான் வேண்டும்
மழையும் வெயிலும் காற்றும் நெருப்பும்
ஆகாயத்தையும் பூமியையும்
அமைதியினின்றும் பிரித்துப் போடுகின்றன
நாம் காதலை ஊதிப் பெருக்குகிறோம்
உணர்ச்சிகளுக்காக மட்டுமா இல்லை
உத்திரவாதங்களுக்கும்தான் எனில்