மார்ச் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      கிளாம்பாக்கம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்
      பலஸ்தீன - இஸ்ரேலிய எழுத்துக்கள்: பழைய நாவல்கள், நடப்புச் செய்திகள்
      ராமனைத் தடுமாறவைக்கும் மனிதக் கடவுள்கள்
      மானுட அறத்தின்மீதான விசாரணை
    • கதை
      ‘வ அலைக்கும் ஸலாம்’
    • தெலுங்குக் கதை
      கேனையன்
    • கதிர்வேல் (1957-2024)
      தீராக் காதலன்
    • ரஷீத் கான் (1968 - 2024)
      பாதியில் நின்ற பொழிவு
    • உகாண்டா கதை
      ஏலக்காய் காப்பி
    • மகபூப் பாட்சா (1959-2024)
      சமகால மானுட அடையாளம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
      சு.ரா. கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      முறைசாரா உறவை முறைப்படுத்த முனைவது ஏன்?
    • மதிப்புரை
      தீண்டாமையின் வேர்களைத் தேடி
      கடல் பயணம்-அவலங்களின் வரலாறு
      சூதாட்டத் தந்திரங்கள்
      மகத்தான வாழ்வின் வீரியமிக்க பதிவு
      பொருளாதார அகதிகள்
    • கவிதைகள்
      வாழ்க்கைக்குத் திரும்புதல்
      அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள்
    • நேர்காணல்: ராமச்சந்திர குஹா
      ருகுன் அத்வானி - எனது எடிட்டர்
    • தலையங்கம்
      பணமில்லாமல் பணியில்லை
    • அஞ்சலி - ஏ. ராமச்சந்திரன் (1935-2024)
      ஓவியச் சாதனையாளர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2024 மகபூப் பாட்சா (1959-2024) சமகால மானுட அடையாளம்

சமகால மானுட அடையாளம்

மகபூப் பாட்சா (1959-2024)
தி. லஜபதி ராய்

மனித உரிமைத் தளங்களில் இந்தியா முழுவதிலும் நன்கு அறிமுகமான மதுரை சோக்கோ பாட்சா என்ற மகபூப் பாட்சா 14.02.2024 அன்று மாலை ஐந்து மணிக்குக் காலமானார்.

பாட்சா சார், சோக்கோ பாட்சா எனப் பலர் இவரை அழைத்தாலும் இவருக்குப் பிடித்த சொல், தோழர் என்பதே. தோழர் என நண்பர்கள் அழைத்தால் நெகிழ்ந்துவிடுபவர். இடதுசாரித் தோழர்கள், திராவிடக் கழக நண்பர்கள், மனித உரிமைத் தளங்களின் செயல்பாட்டாளர்கள் என எல்லோருக்கும் நெருக்கமானவர். ஏராளமானோருக்கும் இயன்றவரை தனது உதவிகளைச் செய்தார். மனித உரிமைத்தளச் செயல்பாட்டாளர்களுக்கும் சூழலியலாளர்களுக்கும் நெருக்கமாக இருந்தார். எனவே அவர்களது கூட்டங்கள் நடத்த முதல் தேர்வு வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கமாக இருந்தது. எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் கூறியதைப் போல மதுரையின் சமகால மானுட அடையாளங்களில் ஒன்றாக இருந்தார்.

முதலில் திமுகவில் இருந்த அவர் பிறகு தீவிர இடதுசாரி சிந்தனையாளராக மாறினார். நிஜங்கள் என்ற பத்திரிகையை நடத்திவந்த சோக்கோ பாட்சா மக்கள் போராட்டங்களில் இருமுறை சிறை சென்றார். அதில் ரிக் ஷா தொழிலாளிகளின் உரிமைகளுக்கான போராட்டமும் உண்டு.

மதுரைச் சிறையின் அன்றைய நிலை குறித்து இவர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதங்கள் இவரை உச்ச நீதிமன்ற நீதிபதி பி. என் பகவதிக்கு நண்பராக்கியது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் கொடைக்கானலில் குடியமர்த்தப்பட்டபோது கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட வழக்கில் அவரது நெடுநாள் நண்பர்களான இந்தியன் எக்ஸ்பிரஸ் கோபாலன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். உச்ச நீதிமன்ற ஆணையராக அவ்வழக்கில் நியமிக்கப்பட்டார். 1980களில் தொடங்கி இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு கொடைக்கானல் குண்டுபட்டியில் நிலம் வழங்க அன்றைய சார்ஆட்சியர் குர்னிகால் சிங் பிர்சாதாவுடனான இவரது பணிகள் குறித்து நீண்ட அத்தியாயமே எழுதலாம்.

அவரது நண்பர்கள் ராஜகோபால், ராஜ்குமார், மசினகுடி பிரான்சிஸ், சுப்பு, ஸ்ரீதர் ஆகியோருடன் தொடங்கிய சோக்கோ அறக்கட்டளை, கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி, அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கான பயிற்சி, பெண்களுக்கான பயிற்சி என மனித உரிமைச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் துணை நின்றது. பின்னாளில் பேராசிரியர் நாஸ்னீனும் அவருக்குத் துணை நின்றார்.

களப்பணிகளுக்கும் குறைவில்லை. பழங்குடியினப் பளியர் சமூக மக்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகத் தோப்புப் பகுதிகளில் சிறுவனப் பொருள் சேகரிக்கும் குத்தகைதாரர்களிடம் கொத்தடிமை களாகப் பணிபுரிந்தனர். அவர்களை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முன்நின்றார்.

வட இந்தியாவில் முறுக்கு, இனிப்பு பலகாரங்கள் செய்யும் தொழில்களில் ஈடுபட்ட தமிழ்நாட்டுக் குழந்தைத் தொழிலாளர்களை சோக்கோவில் பயிற்சிபெற்ற வழக்கறிஞர்கள் அழகுமணி, பாபுலால், சமூகவியல் பயின்ற பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் உதவியுடன் மீட்டு மறுவாழ்வுப் பணி மேற்கொள்ளத் துணை நின்றார். அழகுமணி வழக்கறிஞராகவும், பாபுலால் மாவட்ட நீதிபதியாகவும் சேவியர் மனித உரிமைச் செயல் பாட்டாளராகவும் மாறினர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான கொத்தடிமைத் தொழிலாளர்கள் பலர் நல்ல நிலமைக்கு வந்து சோக்கோ அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினர் களாயினர்.

இவருடைய நண்பர்களில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. என். பகவதி, டி. ஏ. தேசாய், பி. பி. சாவந்த், சிவராஜ் பாட்டில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்துரு, ஹரிபரந்தாமன் ஆகியோர் உள்ளடங்கிய நீண்ட பட்டியல் உண்டு. தற்போதைய இந்திய தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணியும் அவர் மனைவி வழக்கறிஞர் விஜயலட்சுமியும் அவரது 36 வருட நண்பர்கள். இது தவிர ஈரோடு மருத்துவர் ஜீவாவும் அவருடைய அனைத்து நண்பர்களும் இவரது நண்பர்களே. ஒய். டேவிட் சூளகிரி உஸ்மான், மதுரை உமாபதி, திண்டுக்கல் பால் பாஸ்கர், பீல் வின்சென்ட், பொறியாளர் மனோகரன், காவல்துறை பாலசுப்பிரமணியன் வழக்கறிஞர்களில் பொ. ரத்தினம், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி, எஸ்ஐஆர்டிஎஸ். ஜீவா, திருச்சி மார்ட்டின், கவிஞர் அகவன், சையது, பெரம்பலூர் பாபு, பிரான்சிஸ் ஆகியோருடன் 1983 மதுரை சட்டக்கல்லூரி ஐந்தாம் ஆண்டு மாணவர்களான இமாம், அஜ்மல், சோமு, கென்னடி, இமாம், பிரபு ஆகியோருடன் எங்கள் நெருங்கிய நண்பர்கள் வட்டாரமும் உண்டு. இது தவிர வழக்கறிஞர்கள் காந்தி, ஜின்னா, ஆறுமுகம் என நண்பர்களும் உண்டு. மும்பை அஸ்கர் அலி எஞ்சினீயர் அவரது நண்பர். மேற்சொன்ன நண்பர்கள் பட்டியல் முழுமையானதல்ல.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பொன். கிருஷ்ணசாமியுடன் இணைந்து நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் வாழ்க்கை வரலாற்றை எழுத பல மாதங்கள் அவருடைய சத்கமயா வீட்டின் பின்புறமுள்ள சிறு ஹோட்டல் அறையில் தங்கித் தினமும் கிருஷ்ணய்யருடன் நடைப்பயிற்சிக்குச் சென்று நீண்ட உரை யாடலை நிகழ்த்தியுள்ளார். சோக்கோ பாட்சா நீதிபதி கிருஷ்ணய்யரின் அனைத்துத் தீர்ப்புகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட வரலாறு தொடர்பாக, இவரது நீண்டகால நண்பர் ஜோனதன் ஞானதாசனின் தாயார் திட்டுவிளை ஜாய் ஞானதாசன் எழுதிய ‘A Forgotten History’ ஆங்கில நூலை ‘ஒரு மறக்கப்பட்ட வரலாறு’ என்ற பெயரில் பொன் கிருஷ்ணசாமி துணையுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்நூல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வழக்கறிஞர். ஜின்னா, அழகுமணி, செல்வ கோமதி, கென்னடி என ஏராளமான நண்பர்களுக்கும் தன் மகன் ஃபாசிலுக்கும்  எனக்கும் சாதி மறுப்புத் திருமணம் நடக்கக் காரணமாக இருந்த பாட்சா, திருமண நிகழ்வுகளில் பின் வரிசையில் அமைதியாக அமர்ந்திருப்பார். முன்வரிசைக்கு யாராவது அழைத்தாலும் புன்முறுவலுடன் மறுத்துவிடுவார். பெரும்பாலான கூட்டங்களிலும் அது போலத்தான்.

சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். தன் அலுவலகத்தின் பின்னால் இருக்கும் ரவீந்திரநாத் தாகூர் படத்தை அடையாளம் கண்டுகொள்ளாத சிலர் அது யார் என வினவும்போது முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு ‘சோக்கோ அடிகள்’ எனக் கூறுவதுண்டு. அதைக் கேட்ட எங்கள் கல்லூரித் தோழி சோக்கோ அடிகள் என்று ஒருவர் உண்டு என இன்றுவரை நம்பிக்கொண்டுள்ளார்.

ஈரோடு மருத்துவர் ஜீவா, ஈரோடு சிவானந்தம், பழங்குடி மக்கள் சங்க வி.பி. குணசேகரன், சிவகங்கை கம்யூனிஸ்ட் கட்சி குணசேகரன் எம்எல்ஏ ஆகியோருடன் வீரப்பன் பொது மன்னிப்பு தொடர்பாக அறிக்கை பெற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரைப் பார்க்க எர்ணாகுளம் சென்ற நிகழ்வு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. அவருக்கும் நண்பர் இமாம், மருத்துவர் ஜீவா ஆகியோ ருக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவாரஸ்யம் நிறைந்தவை.

ஒய். டேவிட், சுப. உதயகுமார் உள்ளிட்ட அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டியக்க நண்பர்கள், நம்மாழ்வார் ஐயா, முன்னாள் துணை வேந்தர் மார்க்கண்டேயன், கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் கீதா, இடதுசாரித் தோழர்கள், திராவிட இயக்க நண்பர்கள் ஆகியோரது மக்கள் பணிகளிலும் துணை நின்ற இவருக்குத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் நண்பர்களுண்டு. எங்களுக்கும் நண்பர்களுக்கும் அவர் செய்த உதவிகளுக்குக் கணக்கில்லை.

ஒரிசாவில் இறைப்பணியாளர் ஸ்டெயின்ஸ், தாரா சிங்கின் இந்துத் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்டதை எதிர்த்துக் கூட்டங்களை நடத்திய அவர் ஸ்டெயின்ஸ் நினைவுச் சொற்பொழிவுகளை மதுரையிலுள்ள கல்லூரியில் நடத்தியிருக்கிறார்.

கடந்த பல வருடங்களாகத் தன் உடல் நலம் சீர்குலைந்த போதிலும் சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை மூலம் வழக்கறிஞர் செல்வ கோமதியைக் கொண்டு பெண்களுக்கான பயிற்சிகளை நடத்தினார்.

சொந்த வீட்டைத் தவிர எந்தச் சொத்துக்களையும் தமதாக்கிக்கொள்ளாத அவர் உடல்நலம் அனுப்பிய குன்றிய காலத்தில் 31.12.2023ஆம் நாள் எனக்குத் குறுஞ்செய்தியில்தான் நண்பர் பால்பாஸ்கரது அலுவலகக் கட்டடத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவித்தார். சட்டத்துறைச் செயலாளர் அலெக்ஸ், இமாம் ஆகிய இருவரும் பேருதவியாக இருந்தார்களெனவும் தோழர் அரிபரந்தாமன், டாக்டர் ரெக்ஸ், டாக்டர் அமலோற்பவநாதன், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட தோழர்கள், வீட்டிலும் மருத்துவமனையிலும் தம்மைப் பார்த்துத் தைரியமூட்டுகிறார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மகன்கள் ஆத்திப், ஃபாசில் இருவரையும் சிறந்த வழக்கறிஞர்களாக உருவாக்கியவர், அதுகுறித்துப் பெருமிதம் அடைந்திருப்பார் .

மதுரை கம்யூனிஸ்ட் தோழர்களுடன் நட்போடு பழகியவர், பல மக்கள் திரள் போராட்டங்களில் கலந்துமிருக்கிறார்.

வீடு கொள்ளாத அளவிற்கு இவர் பெற்ற மனித உரிமை விருதுகளுண்டு. எனினும் இவரது இடதுசாரித் தோழர்கள் சக கம்யூனிஸ்டாகத் தோழர் என அழைக்கும் விருதையே எல்லா விருதுகளையும்விட மேம்பட்டதாகக் கருதினார்.

காலம், நம் எல்லோரையும் கடந்த காலமாக்கும் வல்லமை கொண்டதென அறிந்திருந்தால்கூட, மாணவர் பருவத்திலிருந்து இன்றுவரை எந்நேரம் அவரைப் பார்க்கச் சென்றாலும் அன்பான உரையாடலோடு இனிய தேநீருக்குப் பின் வாசல்வரை வந்து வழியனுப்பும் நல்ல மனிதரை இழந்த வருத்தம் இல்லாமலில்லை. மதுரைக்கும் பேரிழப்புதான்!

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.