மார்ச் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      கிளாம்பாக்கம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்
      பலஸ்தீன - இஸ்ரேலிய எழுத்துக்கள்: பழைய நாவல்கள், நடப்புச் செய்திகள்
      ராமனைத் தடுமாறவைக்கும் மனிதக் கடவுள்கள்
      மானுட அறத்தின்மீதான விசாரணை
    • கதை
      ‘வ அலைக்கும் ஸலாம்’
    • தெலுங்குக் கதை
      கேனையன்
    • கதிர்வேல் (1957-2024)
      தீராக் காதலன்
    • ரஷீத் கான் (1968 - 2024)
      பாதியில் நின்ற பொழிவு
    • உகாண்டா கதை
      ஏலக்காய் காப்பி
    • மகபூப் பாட்சா (1959-2024)
      சமகால மானுட அடையாளம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
      சு.ரா. கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      முறைசாரா உறவை முறைப்படுத்த முனைவது ஏன்?
    • மதிப்புரை
      தீண்டாமையின் வேர்களைத் தேடி
      கடல் பயணம்-அவலங்களின் வரலாறு
      சூதாட்டத் தந்திரங்கள்
      மகத்தான வாழ்வின் வீரியமிக்க பதிவு
      பொருளாதார அகதிகள்
    • கவிதைகள்
      வாழ்க்கைக்குத் திரும்புதல்
      அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள்
    • நேர்காணல்: ராமச்சந்திர குஹா
      ருகுன் அத்வானி - எனது எடிட்டர்
    • தலையங்கம்
      பணமில்லாமல் பணியில்லை
    • அஞ்சலி - ஏ. ராமச்சந்திரன் (1935-2024)
      ஓவியச் சாதனையாளர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2024 மதிப்புரை மகத்தான வாழ்வின் வீரியமிக்க பதிவு

மகத்தான வாழ்வின் வீரியமிக்க பதிவு

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது

புகழப்பட்டவர்
(நபிகள் நாயக வரலாறு)
அத்தாவுல்லா

இஸ்லாமிய இலக்கியக் கழகம், 
2 வடக்கு உஸ்மான் சாலை 
(முதல் மாடி), 
தி. நகர், சென்னை-17, 

பக்.1008
ரூ.1000

இஸ்லாத்தின் அடிநாதம் ஏகத்துவம்; ஒரே இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் உயிர்நாடியாய்த் திகழ்பவர் நபிகள் நாயகம்தான். அவருடைய நிழலின் விழுதுகளிலிருந்து அச்சமூகம் தன் உயிரின் வேரைக் கண்டடைந்திருக்கிறது. நாளதுவரை அவருடைய புகழ்பாடும் நூல்களோ கவிதை களோ வந்தபடியிருக்கின்றன. அவர் குறித்த சமூகத்தின் உணர்வுநிலைகளைச் சரியாகச் சொல்ல முயன்ற நூல் களிலொன்று அத்தாவுல்லா எழுதியிருக்கும் ‘புகழப்பட்டவர்.’

இவர் ஏற்கெனவே நபிகள்நாயகம் குறித்து ‘வாளின் சிறகுகள்’ கவிதை நூலை எழுதியுள்ளார். எவ்வளவு சொன்னாலும் இன்னும் சொல்லப்படாமல் இருக்கும் பல வாழ்வியல் அம்சங்களைக் நபிகளாரின் வாழ்வில் இருப்பதாகக் கருதி, ஆசிரியர் இந்நூலையும் தன் இலக்கியப் பங்காக ஆக்கியுள்ளார். இதற்கும் முன்னரும் நபிநாயகத்தின் வாழ்க்கை தமிழில் எழுதப்பட்டுள்ளது; கவிதை வடிவிலும் வந்துள்ளது. ஆனாலும் நபிநாயகத்தின் வாழ்வின் வகையை வைத்துப் பார்த்தால், இந்நூல்தான் தமிழின் ஆகப்பெரிய நூலாக இருக்கிறது. நபிகளின் வாழ்க்கையில் அமைந்துள்ள பல்வேறு செய்திகளும் வரிசைக் கிரமமாகச் சொல்லப்பட்டுள்ளன.

நபியின் வாழ்வைப் பேசும்போது அரபுலகின் நிலவியலும் பண்பாட்டு அம்சங்களும் அவ்வவற்றின் காலப் பொருத்தத்தோடு பார்க்கப்பட வேண்டியது அவசியம். அந்தப் பார்வைக் கோணத்தை முன்னெடுக்காமல் நபிகளாரின் வாழ்வையும் அவருடைய செயல்முறைகளையும் நாம் புரிந்துகொள்ள முடியாது. இதை உணர முடியாமலோ, வேண்டுமென்றே புறக்கணித்தோ நபிகளாரின் வாழ்வை அணுகுகிறவர்கள் ஏராளம். அதனுடைய வெளிப்பாடாக அந்தக் கருத்துக்கள் இன்றைய அரசியல், பண்பாட்டுச் சூழலுக்கேற்றபடிச் சித்திரிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பக்கம் விரும்பத்தக்கதாகவும் மறுபக்கம் விரும்பத்தகாததாகவும் மாறுகின்றன. நபிகளாரின் வாழ்க்கைமுறை பெரும்பாலும் அவருடைய சொந்த மண்ணான அரேபியப் பண்பாட்டின் அடிச்சுவட்டில்தான் நிகழ்ந்துள்ளன. அந்த இழையைப் பிடித்துவிட்டால் ஒரு பொதுப்புரிதலுக்கு வந்துவிட முடியும். துரதிர்ஷ்டவசமாக இருதரப்புகளிலும் அப்படியான சமூக நோக்குகள் இல்லை.

நபிநாயகத்தின் ஏற்ற, இறக்கங்கள் எவற்றினால் உண்டாயின என்ற தாத்பரியமான விளக்கத்தைச் சொல்ல இந்நூல் பெருமளவில் மெனக்கெடுகிறது. ஆங்காங்கே அதற்கான தெளிவுகளைக் கொடுப்பதற்கு ஆசிரியர் முயன்றிருக்கிறார். சமூகத்தின் தலைமைப் பாத்திரத்தைத் தாங்கிச் செல்லும் வாய்ப்பு நபியாகிய தனக்கு அமைந்திருக்கும்பொழுதும் தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவ முயலாமல் அவர் விட்டுக்கொடுத்துச் செல்லும் பாங்குகள் கூர்மையாகக் கவனிக்க வைக்கின்றன. அடிப்படையில் அவர் இறைத் தூதராயிருந்தாலும் சாதாரண மானுட வாழ்வே அவருக்கு அமைந்தது. நாற்பது வயதில் அவர் இறைத்தூதராக அறியப்படுகிறார்; இந்நிலையில், அதற்கு முற்பட்ட காலத்தில் எவ்விதமான வாழ்க்கையை வாழ்ந்தாரோ அதே வாழ்க்கைதான் இறைத்தூதரான பின்னரும் அவருக்கு அமைந்தது. கடும் துயரங்கள், இழப்புகள், சோதனைகள், அவ்வப்போது அனுபவிக்கும் இனிமைகள் என எவையும் அவரை விட்டுவிடவில்லை. மனிதர்கள் சோதிக்கப்படுவதற்காகவே இப்பூமிக்கு அனுப்பப்படுவதாகப் பல்வேறு மதங்களும் கூறுகின்றன; இஸ்லாமும் அதைக் கூறுகிறது. இதனால் நபிநாயகமும் வாழ்வின் அலைபாய்தல்களிலிருந்து ஒதுக்கப்படவில்லை. உஹத் போர்க்களத்தில் அவருடைய எதிரி வீசிய ஒரு கல் நபிகளின் முகத்தில் பட, அதனால் தன்னுடைய இரண்டு பற்களை அவர் இழந்துவிடுகிறார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நபிநாயகத்தின் வாழ்க்கை இன்றைக்கும் அர்த்தச் செறிவுடன் இருக்கிறது. அவருடைய வாழ்வியலில் தாங்களும் இருப்பதாக வாசகர்கள் உணர்கிறார்கள்.

அவருடைய ஆன்மிக வெளிப்பாடு அக்காலத்தில் புரட்சி கரமான பங்கை ஆற்றியிருக்கிறது. தம் ஆன்மிகத் தேடல்கள் நபிகள் நாயகத்தின் வழிகாட்டலால் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளதாகக் கருதியவர்கள் அரேபியாவுக்கு வெளியிலும் உருவாகியுள்ளனர். அதனால் அவருடைய காலத்திலேயே இந்தியாவின் மேலைத் திசையில் நபிநாயகத்தின் புகழ் பரவியிருக்கிறது; கூடவே இஸ்லாமும் பரவியுள்ளது. இந்நூலுக்கு முன்னோடியான முஹம்மத் ஹுஸைன் ஹைகல் எழுதியுள்ள ‘முஹம்மத் நபி (ஸல்)’ நூல் குளச்சல் யூசுஃப்பின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது.

பொதுவாகவே தங்களுக்கு ஆதர்சம் தரும் ஆளுமைகளை எழுதும்போது ஏற்படும் விதந்தோதுதல்களை நாமே முன்மொழிவதைவிட வாசகர் தானாக உணர்ந்துகொள்ளும் அளவுக்கு எழுத்து முறையை அமைத்துக்கொள்வது சிறப்பு. இந்நிலை இருந்தபோதும் நபிகளின் வாழ்வை வண்ணமயமாகப் பார்க்கும்படி இடையிடையே நல்ல சொல்லாட்சிகளோடு, வீரியமான காட்சிப்படுத்தல்களோடு எழுதியுள்ளார் அத்தாவுல்லா. அது நூலைக் கவனிக்கவைக்கும் சிறப்புத் தகுதியைத் தருகிறது.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.