மார்ச் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      கிளாம்பாக்கம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்
      பலஸ்தீன - இஸ்ரேலிய எழுத்துக்கள்: பழைய நாவல்கள், நடப்புச் செய்திகள்
      ராமனைத் தடுமாறவைக்கும் மனிதக் கடவுள்கள்
      மானுட அறத்தின்மீதான விசாரணை
    • கதை
      ‘வ அலைக்கும் ஸலாம்’
    • தெலுங்குக் கதை
      கேனையன்
    • கதிர்வேல் (1957-2024)
      தீராக் காதலன்
    • ரஷீத் கான் (1968 - 2024)
      பாதியில் நின்ற பொழிவு
    • உகாண்டா கதை
      ஏலக்காய் காப்பி
    • மகபூப் பாட்சா (1959-2024)
      சமகால மானுட அடையாளம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
      சு.ரா. கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      முறைசாரா உறவை முறைப்படுத்த முனைவது ஏன்?
    • மதிப்புரை
      தீண்டாமையின் வேர்களைத் தேடி
      கடல் பயணம்-அவலங்களின் வரலாறு
      சூதாட்டத் தந்திரங்கள்
      மகத்தான வாழ்வின் வீரியமிக்க பதிவு
      பொருளாதார அகதிகள்
    • கவிதைகள்
      வாழ்க்கைக்குத் திரும்புதல்
      அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள்
    • நேர்காணல்: ராமச்சந்திர குஹா
      ருகுன் அத்வானி - எனது எடிட்டர்
    • தலையங்கம்
      பணமில்லாமல் பணியில்லை
    • அஞ்சலி - ஏ. ராமச்சந்திரன் (1935-2024)
      ஓவியச் சாதனையாளர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2024 கவிதைகள் அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள்

அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள்

கவிதைகள்
தமிழில்: க. மோகனரங்கன்

புகைப்படம்: அப்பாஸ் கியரோஸ்தமி

 

1.

வசந்தகாலக் காற்றில்

பள்ளிக் குறிப்பேட்டின் பக்கங்கள் படபடக்கின்றன-

ஒரு சிறுவன் உறங்குகிறான்

அவனது சிறிய கைகளில்.

2.

கொதிக்கும் கெட்டிலின் விசில்சத்தம்: முதியவர் ஒருவர்

தனியாகக் காலை உணவு அருந்துகிறார் .

3.

தொலைதூர மலைகளின்

இதயத்தில் இருக்கின்றன

நன்னீர் ஊற்றுகள்.

நீர் பருக யாரும் இல்லை,

ஒரு பறவை கூட.

4.

அது முளைத்தது

மலர்ந்து விரிந்தது

வாடித் தரையில் விழுந்தது

காண ஒரு ஜீவனுமில்லை. 

அப்பாஸ் கியாரோஸ்தமி (1940-2016)

ஈரானிலுள்ள தெஹ்ரான் நகரில் பிறந்தவர். கல்லூரியில் ஓவியமும் வரைகலையும் பயின்றவர்.  குழந்தைகளின் புத்தகங்களுக்கான வடிவமைப்பாளராகப் பணியைத் தொடங்கினார். பிறகு விளம்பரத்துறையிலும் அங்கிருந்து திரைப்படத் துறைக்கும் நுழைந்து உலக அளவில் அறியப்பட்ட இயக்குநராக ஆனார். குறும்படங்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்ட நாற்பது படங்கள் இவரது பங்களிப்போடு உருவாகியிருக்கின்றன. திரைக்கதைகள், நாடகங்கள் எழுதுவதிலும் புகைப்படங்கள் எடுப்பதிலும் ஈடுபாடு கொண்ட இவர் கவிதைகளிலும் நாட்டம் கொண்டிருந்தார். இவர் எழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைக் ‘காற்றுடன் நடைபயிலுதல்’ என்ற தலைப்பில் ஹார்வர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளது. இவருடைய கவிதைகளில் தவிர்க்கவியலாதபடி இடம்பெற்றிருக்கும் பருவகாலம் பற்றிய குறிப்புகளானவை இவருடைய கவிதைகளுக்கு ஒருவித ஹைக்கூ தன்மையை வழங்குகின்றன என விமர்சகர்கள் கருதுகின்றனர்.

5.

இலையுதிர்காலப் பிற்பகல்:

மெல்ல விழும் ஒரு அத்திமர இலை

ஓய்வெடுக்கிறது

அதன் சொந்த நிழலில்.

6.

பெயரறியாத  சிறிய பூ

தனியே பூத்திருக்கிறது

பெரியதொரு மலைப்பிளவின் மத்தியில்.

7.

வயதான ஒரு கிராமவாசி மலைப்பாதையில்-

தொலைவிலிருந்து ஓர் இளைஞனின் அழைப்பு.

8.

இலையுதிர்கால சூரியவெளிச்சம் -

எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது பல்லி

பச்சை செங்கல் சுவர்மீதிருந்து

9.

வெகு தொலைவிலிருந்து வந்ததொரு மஞ்சள் மலர்

குளத்தில் குடிபுகுகிறது

நீரில் அலையெதுவும் எழுப்பாமல்.

10.

ஆலயத்தின் உள்ளிருக்கையில்

ஆயிரம் எண்ணங்கள் எனக்குள்

வெளியே வந்ததும்

பனி நிறைந்திருந்தது.

11.

தகைவிலான் குருவிகள்

எப்போதாகிலும் திரும்பி வருமோ

இந்த வருடமும்?

12.

எனது நிழல்

என்னைத் தொடர்கிறது

நிலவொளிரும் இம் முன்னிரவில்.

13.

குழந்தையின் அழுகுரல்...

பறவையொன்றின் பாடல் அதற்குத் துணை நிற்கிறது

அம்மா திரும்பும்வரை.

14.

சோர்வடைந்த அரிவாள்

இருண்ட களஞ்சியச் சாலையின்

சுவரில் தொங்குகிறது 

நெடிய ஓய்வு வேண்டி.

15.

தெருநாய்

தனது வாலை ஆட்டுகிறது பார்வையற்ற வழிப்போக்கர்களுக்கு.

16.

கல்லறை தோண்டுபவர்

வேலையை நிறுத்துகிறார்

ஒரு வாய் ரொட்டி, பாலாடைக்கட்டிக்காக.

17.

பள்ளிக் குழந்தைகள்

காதுகளை வைத்துக் கேட்கிறார்கள்

கைவிடப்பட்ட தண்டவாளத்தில்.

18.

நெல் விவசாயிகளின் பாடல்கள்:

சில மகிழ்ச்சியானவை, சில சோகமானவை

அவற்றின் இனிமையோ

முற்றிலும் ஒத்தவை.

19.

யாரையோ சந்திக்கவிருப்பதைப் போலவே

எப்போதும்  இருக்கிறேன்

அவரும் வருவதில்லை

பெயரும் நினைவில் இல்லை.

20

என்னால் அழுகையை அடக்க முடியவில்லை

இனி அழுவதற்கு

அவசியம் ஏதுமில்லை என்றானதும்

21.

பாட்டிக்கும் குழந்தைக்குமான

போட்டி விளையாட்டுகளில்

பாட்டி தோற்றுக்கொண்டே இருக்கிறாள்.

மின்னஞ்சல்: mohankrangan@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.