மார்ச் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      கிளாம்பாக்கம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்
      பலஸ்தீன - இஸ்ரேலிய எழுத்துக்கள்: பழைய நாவல்கள், நடப்புச் செய்திகள்
      ராமனைத் தடுமாறவைக்கும் மனிதக் கடவுள்கள்
      மானுட அறத்தின்மீதான விசாரணை
    • கதை
      ‘வ அலைக்கும் ஸலாம்’
    • தெலுங்குக் கதை
      கேனையன்
    • கதிர்வேல் (1957-2024)
      தீராக் காதலன்
    • ரஷீத் கான் (1968 - 2024)
      பாதியில் நின்ற பொழிவு
    • உகாண்டா கதை
      ஏலக்காய் காப்பி
    • மகபூப் பாட்சா (1959-2024)
      சமகால மானுட அடையாளம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
      சு.ரா. கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      முறைசாரா உறவை முறைப்படுத்த முனைவது ஏன்?
    • மதிப்புரை
      தீண்டாமையின் வேர்களைத் தேடி
      கடல் பயணம்-அவலங்களின் வரலாறு
      சூதாட்டத் தந்திரங்கள்
      மகத்தான வாழ்வின் வீரியமிக்க பதிவு
      பொருளாதார அகதிகள்
    • கவிதைகள்
      வாழ்க்கைக்குத் திரும்புதல்
      அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள்
    • நேர்காணல்: ராமச்சந்திர குஹா
      ருகுன் அத்வானி - எனது எடிட்டர்
    • தலையங்கம்
      பணமில்லாமல் பணியில்லை
    • அஞ்சலி - ஏ. ராமச்சந்திரன் (1935-2024)
      ஓவியச் சாதனையாளர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2024 மதிப்புரை பொருளாதார அகதிகள்

பொருளாதார அகதிகள்

மதிப்புரை
தொ. பத்தினாதன்

அகதியின் பேர்ளின் வாசல்
(நாவல்)
ஆசி. கந்தராஜா

காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. ரோடு
நாகர்கோவில் - 1

பக்.160
ரூ.200

எல்லாக் காலங்களிலும் புலப்பெயர்வுகள் நடந்திருந்தாலும் அவை காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. எத்தகைய மாறுபட்ட புலப்பெயர்வாக இருந்தாலும் அதன் மையம் உயிர்வாழ்தல். எல்லா உயிரினங்களும் நிலைத்து நிற்கவும் தன்னுயிர் காக்கவும் எனப் புலப்பெயர்வுக்கும் இடப்பெயர்வுக்கும் தன்னளவில் தயாராகின்றன. அத்தகைய உயிரினங்களின் இயங்கு நிலை அடிப்படையில்தான் மனித சமூகம் தன்னைத் தகவமைத்து வந்திருக்கிறது. மனித சமூகத்தின் இடப்பெயர்வுகளில் பாதகமான நிலைகள் இருந்தாலும் அதன் சாதகமான வகிபாகம் சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்கிக்கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த மனித சமூக அசைவின் அடிப்படையில் ஆசி கந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ நாவலை அணுகலாம்.

இலங்கையில் ஏற்பட்ட போர், கலவரங்கள் காரணமாக மேற்கத்திய நாடுகளுக்கான புலப்பெயர்வுகள் குறித்துப் பல நாவல்கள் தமிழ் இலக்கியச் சூழலில் வெளி வந்திருந்தாலும் அவற்றிலிருந்து மாறுபட்ட புலப்பெயர்வை ஆசி கந்தராஜா இந்நாவல் மூலம் வாசகருக்குத் திறந்துவிட்டிருக்கிறார்.

இந்நாவல் மூன்று வேறுபட்ட நிலப்பகுதிகளை மையப்படுத்தி நகர்கிறது. தவராசா, பாலமுருகன் என்ற இரு கதாபாத்திரங்களைப் பிரதானப்படுத்தி நாவல் விரிகிறது. இதில் பாலமுருகன் ஸ்காலர்ஷிப்பில் மேற்படிப்பிற்காக ஜேர்மன் செல்கிறார். தவராசா போர் காரணமாகத் தரகர் மூலமாகக் குறுக்குவழியில் ஜேர்மன் செல்கிறார். இவர்கள் இருவரும் எவ்வாறு ஜேர்மனியில் சந்தித்தார்கள், இருவரின் பயணங்கள் மாறுபட்டனவாக இருந்தாலும் பயணத்தின்வழி இவர்கள் எத்தகைய சிரமங்களையும் சாகசங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தன என்பவற்றை நேர்த்தியான புனைவு மொழியில் ஆசி கந்தராஜா எழுதியிருக்கிறார்.

முதல் பகுதியில், 1980க்குப் பின்னான யாழ்ப்பாணப் பின்னணி, அதன் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் என்னவாக இருந்தது ஆகியன நாவலின் ஆரம்பப் பகுதிகளாக அமைகின்றன. பாலமுருகன் நேரடியாக ஜேர்மனிக்குப் படிக்கச் செல்கிறார். தவராசா தரகர்மூலமாக ஜேர்மன் செல்வதற்காக மும்பையில் சிலகாலம் சிக்கிக்கொள்கிறார்.

நாவலின் இரண்டாவது பகுதி மும்பையில் நிகழ்கிறது. 1980க்குப் பிந்தைய மேற்கத்திய நாடுகளுக்கான பயணத்தில் மும்பையும் பிரதான பாத்திரம் வகித்திருப்பதை நாவலினூடாக அறிய  முடிகிறது. ஆண்கள் மட்டுமின்றி வடக்குக் கிழக்கிலிருந்து தரகர்களின்மூலம் வெளிநாடு செல்வதற்காக மும்பையில் தங்க நேரிடும் பெண்களின் நிலையைப் பிரமாதமாக நாவல் பதிவுசெய்திருக்கிறது. குறிப்பாகத் தரகர்களால் ஏமாற்றப்பட்ட கையறு நிலையில் விபச்சாரம்வரை சென்ற பெண்கள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. அவ்வாறு தரகரால் கைவிடப்பட்டு மும்பைக்காரரைத் திருமணம்செய்து அங்கேயே வாழும் ‘மன்னார் அக்கா’ என்ற கதாபாத்திரத்தையும் பதிவுசெய்திருக்கிறார்.

நாவலின் மூன்றாவது பகுதியாக ஜேர்மனியில் கதை நிறைவு பெறுகிறது.  பாலமுருகன் கதாபாத்திரத்தின் வழியாக அந்தக் காலத்தில் ஏன் அகதிகளின் நுழைவு வாயிலாகவும் கூடாரமாகவும் ஜேர்மன் மாறியது என்பதைத் தெளிவாகப் பூகோள அரசியல்ரீதியாகக் குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப்போரின் முடிவில் கிழக்கு - மேற்கு ஜேர்மனிகளாக அவை எப்படி உருவாயின, அதனால் அகதிகள் எப்படி கிழக்கு ஜேர்மன் ஊடாக மேற்கு ஜேர்மனிக்குள் ஊடுருவினார்கள் என்றெல்லாம் தெளிந்த அரசியல் புரிதலுடன் குறிப்பிடுகிறார் ஆசி கந்தராஜா.

அந்தக் காலத்தில் இலங்கை அகதிகளின் அயல்நாட்டுப் பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பைப்போல் ஜேர்மனியும் விளங்கியிருக்கிறது. புனிதப்படுத்தல்களோ பிரச்சாரத்தன்மையோ இல்லாமல் வெளிப்படையாகக்  கதை  நகர்வதால் 160 பக்கங்களுடைய இந்த நாவல் வாசகரை விரைவாக உள்ளீர்ப்பதை ஆசியின் சிறப்பாகக் கொள்ளலாம். 

அவருடைய வெளிப்படையான பதிவுக்குச் சான்றாக ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம். அதாவது “புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையினர் பொருளாதார அகதிகள். இவர்களால் உண்மையாக  இலங்கையில்  இராணுவத்தால்,  மாற்று இயக்கங்களால் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளான அகதிகள் பாதிக்கப்பட்டார்கள்” என்பதை நேர்மையாகப் பதிவுசெய்திருக்கிறார். இது அவர்களுக்கு மட்டுமில்லை, தமிழ்நாட்டில் உள்ள முகாம்வாழ் அகதிகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.

                 மின்னஞ்சல்: pathixyz@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.