மௌனத்தின் சிறகடிப்பு - கடிதமும் வெடி குண்டும்
மெளனத்தின் சிறகடிப்பு
கடிதமும் வெடி குண்டும்
கண்ணன்
காலச்சுவடு 30இல் `கேட்டிருப்பாய் காற்றே' என்ற தலைப்பில் காலச்சுவடுக்கு வந்த ஈழத்து நண்பர்களின் கடிதங்களைத் தொகுத்து வெளி யிட்டிருந்தோம். அங்கு நிலவும் பலவித மனப்போக்குகளை இக்கடிதங்கள் வெளிப்படுத்துவதாகப் பல நண்பர்கள் கருத்துத் தெரிவித்தனர். இங்கும் அயலிலும் பரவலான கவ னத்தை இந்தப் பகுதி பெற்றது. எக்ஸில் கட்டுரையில் இக்கடிதங்கள் காலச்சுவடால் தயாரிக்கப்பட்டவை என்ற பொருள்பட கட்டுரையாளர் எழுதியுள்ளார். இந்த சந்தேகத்தைத் தீர்க்க மிக எளிமையான திட்டம் ஒன்றை முன்வைக்கிறோம். இக்கடிதங்களை சில தமிழக நடுவர்களின் பார்வைக்கு வைக்கத் தயாராக இருக்கிறோம்.
கட்டுரையில் கீழ்க்கண்டவாறு உள்ளது.
“நாய்களே வெடிச்சத்தம் தெரியுமாடா உங்களுக்கு! தெரிந்தால் இப்பிடியெல்லாம் எழுதிக் கொட்ட மாட்டீர்கள் . . . தனிப் பட்ட / அரசியல் காரணங்கள் குறித்து எழுதியவர்களின் பெயர்கள