புப்பேன் கக்கர்
நேர்காணல்
விளிம்பில் இருந்தவற்றையெல்லாம் கூற விரும்பினேன்
புப்பேன் கக்கர்
புப்பேன் கக்கர் (1934) அறுபதுகளில் இந்தியக் கட்புலக் கலைப் பாரம்பரியத்தினுள் நுழைந்த வல்லமைமிக்க படைப் பாளிகளின் தலைமுறையைச் சேர்ந்தவர். இந்தியாவை உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும், சமகால இந்திய ஓவியர்களில் முக்கியமானவர்.
பரோடாவை மையப்படுத்திய ‘உருவக எடுத்துரைப்புப் பள்ளி’யின் (Figurative Narrative School ) பிரதான ஓவியரான அவர், காலனித்துவத்திற்குப் பிற்பட்ட இந்திய நகர வாழ்வை அதற்குரிய இயற்கையோடும் கட்புல மொழியோடும் ஓவியப் பரப்பிற்கு எடுத்துவந்தவர். அவரது மொழியும் பொருளும் விளிம்புநிலைப் பயணமுடையவை. இந்தியாவின் முதல் ஒருபாலுறவு ஓவியராகவும், உலகின் முக்கியமான கீஹட் ஓவியர்களில் ஒருவராகவும் உள்ளார். தனது சொந்த மொழியான குஜராத்தியில் சிறுகதைகளும், நாடகங்களும் எழுதியுள்ளார்.
அணுகுவதற்கு இலகுவான புப்பேன் கக்கருடனான இந்